| 
         
          நோய்கள்  
          
           
              
             
 
          
          
            - நெற்பயிரில், பூசணம், நுண்ணுயிர் மற்றும் நச்சுயிரிகளால் தான் நோய்கள் ஏற்படுகின்றன.
 
               
             
          - நெல்லில் நோய்களால் ஏற்படும் இழப்புகள் மிகவும் அதிகம்.  மேலும் பயிர் நோய்களால் பஞ்சம் ஏற்பட்டதை வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
             
           
          - பழுப்பு இலைப்புள்ளி (ஹெல்மின்தோஸ்போரியம் ஒரைசே) நோயின் அதிக அளவிலான தாக்குதலால் வங்காளத்தில் 1943 ஆம் ஆண்டு தீவிர பஞ்சத்தை நாடு சந்தித்தது.
 
             
           
          - 1919 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர குலை நோய் தாக்குதல் ஏற்பட்டது.
 
             
           
          - மேலும் இதே குலைநோய் 1985-88 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலும் மிகுதியாக தாக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்தின.
 
             
           
          - 1963 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் நுண்ணுயிர் அழுகல் நோய் அதிக அளவில் ஏற்பட்டன.
 
             
           
          - 1985-87 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் "நெல் துங்ரோ நச்சுயிரி நோய்" கொள்ளைநோயாக  தாக்குதல் ஏற்படுத்தின.
  
           
           
            
     |