| 
        பாக்கனோ நோய் (அல்லது) துார் அழுகல் நோய்:   
              (ஜிபரெல்லா ஃபூஜிகுராய்)
          
            
              |  தாக்குதலின் அறிகுறிகள்: | 
                | 
             
            
              |                | 
                             | 
             
            
              
			    
                      - நோய் தாக்கப்படட பயிர்கள் நாற்றங்காலிலும் வயலிலும் வழக்கத்திற்கு மாறான உயரத்துடன் காணப்படும்.	
 
                      - பயிர்கள் மெலிந்து, மஞ்சள் கலந்த பச்சை நிற இலைகளுடனும், வெளிரிய பச்சை நிற கண்ணாடி இலைகளையும் கொண்டிருக்கும்.                        
 
			          - நாற்றுக்கள் துார்விடும் பருவத்தில் காய்ந்துவிடும்.			            
 
			          - பயிரில் துார்கள் குறைந்தும், இலைகள் காய்ந்தும் காணப்படும்.			            
 
			          - இந்நோய் தாக்கப்பட்ட பயிர்களில் பூக்காமலும், கதிர்கள் அறைகுறையாகவும், பூக்கள் மலட்டுத் தன்மையுடனும் மணிகள் நிரம்பப்படாமலும் இருக்கும்.
			            விதைப்பாத்திகளில் நோய் தாக்கப்பட்ட நாற்றுக்கள் வேர்களில் புள்ளிகளுடன் காணப்படும்.  
 
			          - இந்நாற்றுக்கள் நடவு செய்வதற்கு முன்னோ அல்லது நடவிற்குப் பின்னரோ இறந்துவிடும். 
 
			     
               | 
                | 
              -SPL.jpg)  | 
             
            
              | துார் அழுகல் நோய் | 
              துார் அழுகல் நோய் | 
             
            
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
           
                     
          
            
              |   | 
              நோய்க் காரணி: | 
             
            
               | 
               | 
             
            
                | 
                | 
              
                  
                        - நோய் காரணிகள் இனக்கலப்பு முறையால் பூசண வித்துக்களை அஸ்கஸ் எனும் பைக்குள் உருவாக்கிறது.	
 
                        - அஸ்கி நீள் உருளை வடிவமாகவும், உந்துருள் வடிவமாகவும், மேல்புறம் தட்டையாகவும் 90-102 x 7-9 மைக்ரோ மீட்டர் அளவு  கொண்டது.  அவை 4-6 பூசணவித்துக்களுடையது.  ஆனால் அரிதாக 8 பூசண வித்துக்களையும் கொண்டிருக்கும்.                          
 
                        - பூசண இழைகள் கிளைகளுடனும், தடுப்புச் சுவருடனும், காணப்படும்.  மேலும் பூசணங்கள் நுண் பூஞ்சை இழை சிதில்கள் மற்றும் பெரும்பூஞ்சை இழை சிதில்களைக் கொண்டிருக்கும்.  இவை நுண் மற்றும் பெரும் பூசண இழைகளை உருவாக்குகிறது.                          
 
                        - இழை முடிச்சுகள் 80 x 100 மைக்ரோ மீட்டர் அளவுடையது.  இவை வட்டமாக கரு நீள நிறமுடன் காணப்படும்.  இலைத்துளைகள் ஏறக்குறைய மஞ்சளாக, பழுப்பு நிறமாக அல்லது ஊதா நிறமாகவும் இருக்கும். 
 
                              | 
             
            
              | துார் அழுகல் நோய்க்காரணி | 
              துார் அழுகல் நோய்க்காரணியின் பெரு, நுண் வித்துக்கள் | 
             
            
            
            
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
           
           
          
            
              | நோய் மேலாண்மை: | 
                | 
             
            
               | 
               | 
             
            
              
			  
                      - சுத்தமான விதைகளைப் பயன்படுத்தவேண்டும்.
	உப்பு நீரைப் பயன்படுத்தி எடைகுறைவான நோய் தாக்கப்பட்ட விதைகளை விதைக்குவியலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.	
 
                      - விதைகளை விதைக்கும்முன் திரம், தியோபனேட்மிதைல், அல்லது பெனோமைல் போன்ற பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.                        
 
			          - விதை எடையில் 1-2% பெனோமைல் (அ) பெனோமைல் - டி பயன்படுத்தி விதை பூச்சு செய்ய வேண்டும்.			            
 
			          - அக்ரோசன் ஜிஎன், சிரசன் @ 2 கிராம் செயற்கூறு/கிலோவிதையுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.  1% தாமிர கந்தக கரைசல் அல்லது 2.0% ஃபார்மலின் உடன் விதைகளை நனைக்கவேண்டும். 
 
			    | 
                | 
                | 
             
            
              | பினோமில் - விதை பூச்சு மருந்து | 
              உப்பு நீர் மூலம் சப்பைவிதைகளை நீக்கவும் | 
             
            
            
              | மேலே செல்க | 
             
           
       |