முதல் பக்கம் தொடர்புக்கு  

இலையுறை அழுகல் நோய்
(
சரோக்லேடியம் ஒரைசே)

தாக்குதலின் அறிகுறிகள்:  
  • இலையுறை நிறமாற்றம் ஏற்படுதல். இளம் கதிரை சுற்றியிருக்கும் இலையுறையில் அழுகல் ஏற்படும்.
  • அடர் சிவப்பு கலந்த பழுப்பு நிற ஓரங்களுடனும் சாம்பல் நிற மையத்துடன் கூடிய ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும்
  • புள்ளிகள் பெரிதாகி சிலசமயம் ஒன்றிணைந்து முழு இலையுறையையும் மூடிக் கொள்ளும்.
  • தீவிர தாக்குதலின் போது முழு கதிர் அல்லது அதன் சில பகுதிகள் வெளிவராமல் தடுத்து இலையுறைக்குள்ளேயே இருக்கச் செய்துவிடும்.
  • வெளிவராத கதிர் அழுகி பின் சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாகவும் பின் கரும்பழுப்பாகவும் மாற்றம் அடைதல்.
  • தாக்கப்பட்ட கதிர் உறை மற்றும் இளம் கதிர்களின் உள்ளே வெள்ளைபொடி போன்ற வளர்ச்சி காணப்படுதல்.
  • நோய் தாக்கப்பட்ட கதிர்கள் மற்றும் தானியங்கள் மலட்டுத் தன்மையாகவும், சுருங்கியும், பகுதி நிரப்பியும் அல்லது முழுவதுமாக தானியம் நிரப்பப்படாமலும், நிறமாற்றம் ஏற்பட்டும் காணப்படும்.
  • கதிர் வைக்கும் பருவம் முதல் நெற்பயிர் முதிர்ச்சி நிலை முடிய நோய் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.

நோய் உறுதிப்படுத்துதல்:

  • கதிரை சுற்றியுள்ள மேல்பரப்பு இலையுறைகளில் நோய்ப் புள்ளிகள் ஏற்படும்.
  • சில கதிர்கள் வெளிவராது அல்லது பகுதி மட்டும் வெளிவந்து காணப்படும்.
  • கதிர் உறை அழுகல் மற்றும் வெள்ளைப்பொடி போன்ற பூசண வளர்ச்சி ஆகியவைக் காணப்படும்.
1-Irregular spots on sheaths
இலையுறைகளின் மீது ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும்

இலையுறை நிறமாற்றத்துடன் காணப்படும்
panicles remain within the sheath
இலையுறை
உள்ளேயே கதிர்கள் இருக்கும்

கண்ணாடி இலையுறை அழுகி காணப்படும்
   

மேலே செல்க

  நோய்க் காரணி: சரோக்லேடியம் ஒரைசே (பூசண நோய்)
sarocladium oryzae habit
சேரோகிலேடியம் ஒரைசேவின் வாழ்விடம்
sarocladium oryzae -SPORES
சேரோகிலேடியம் ஒரைசே - பூசணவித்துகள்
  • வெள்ளைப் பூசண இழையை உருவாக்குகிறது. அடர்த்தியற்ற கிளைகளைக் கொண்டது. தடுப்புச் சுவருடன் 1.5-2 மீட்டர் குறுக்களவு கொண்டது.
  • பூசண இழையிலிருந்து உருவாகும் (கொனிடியோயபோர்ஸ்) பூசண இழைச் சிதில்கள் தழைப் பூசண இலைகளைவிட சற்று தடிப்பானதாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு முறை கிளைகள் உருவாகும். ஒவ்வொரு முறையும் 3-4 கிளைகள் வட்டமைப்பில் இருக்கும்.
  • இறுதி கிளைகள் கொனிடியாவை உருவாக்குகிறது. அவை நீள் உருளை வடித்திலிருந்து சற்று கதிர் வடிவமாகவும் சில சமயம் வளைந்து, நிறமில்லாமல், மென்மையாகவும் ஒரு உயிரணு கொண்டு 4-9 x 1-2.5 மீ அளவுடனும் காணப்படும்.
  • சில சமயத்தில், பூசணம் நுண்ணுயிர் நோய்க் காரணிகளுடன் இணைந்து கதிருறையைத் தாக்குகிறது. கதிர் உறை தாக்குதல் ஏற்பட்டு நெல் தானியத்தில் நிறமாற்றம் ஏற்படுகிறது. ((எ.கா) சூடோமோனாஸ் ஃபுலோரசன்ஸ்)
  • இலைத் துளைகளின் வழியாக பூசணம் ஊடுருவி காயங்களை ஏற்படுத்துகிறது. காற்றுக்குழாய்த்திசு மற்றும் இலை இடைத்திசுக்களின் உயிரணுக்களுக்கிடையிலே வளர்ச்சி ஏற்படுகிறது.
  • தாக்கப்பட்ட பயிர்த் துார்கள் மற்றும் விதைகளின் மேல் கதிர் உறை அழுகல் பூசணம் பூசண இலையாக நிலைத்திருக்கிறது.

நோய்க்கு ஏற்ற நிலைகள்:

   அதிக அளவிலான தழைச்சத்து, அதிக ஈரப்பதம், அடர்த்தியான பயிர் வளர்ச்சி கதிர் உறை அழுகல் நோய் வளர்ச்சியை மேம்படுத்துகின்றது. 20-28 செ வெப்பநிலை பூசண வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.

SPORES
பூசணவித்துகள்
 

மேலே செல்க

கட்டுப்பாடு முறைகள்:  
நோய் தடுப்பு முறை:
  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் நுண்ணுயிரிடுதல் மூலம் கதிரழுகல் தீவிரத்தை 20-42 சதவிகிதம் வரை குறைக்கிறது. பயிர் வளர்ச்சியைத் துாண்டி தானிய மகசூலை அதிகரிக்கிறது.
  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் @ 10 கிராம்/கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து 2.5 கிலோ/பொருள்கள்/எக்டர் 100 லிட்டர் நீருடன் கலந்து அந்த கலவையில் நாற்றுக்களை 30 நிமிடங்கள் நன்கு நனையவிட வேண்டும்.
  • நடவு செய்து 30 நாட்களுக்குப்பிறகு “சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்” @ 2.5 கிலோ/எக்டர் மண்வழி மூலம் 50 கிலோ தொழு உரம்/ மணலுடன் கலந்து அளிக்க வேண்டும்
  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்” 0.2% செறிவுடன் நடவு செய்து 45 நாட்களிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் அளித்தல் வேண்டும்.

foliar spray of pseudomonas
சூடோமோனஸ் உடன் நாற்றுகளின் வேர்களை நனைக்கவும் சூடோமோனஸை இலை வழியாக தெளிக்கவும்

உழவியல் முறை:
  • பயிர் அறுவடைக்குப்பின் நோய் தாக்கப்பட்ட பயிர்த் துார்களை அகற்ற வேண்டும்.
  • உகந்த பயிர் இடைவெளி விடவேண்டும்.
  • துார்விடும் பருவத்தில் சாம்பல் சத்து அளிக்கவேண்டும்.
  • களைகளைக் கட்டுப்படுத்தி வயலைத் துாய்மையாக வைக்க வேண்டும்.
apply potash at tillering stage
பயிர்களுக்கிடையில் சரியான இடைவெளி விடவும் தூர் விடும் பருவத்தில் சாம்பல் சத்து உரங்களை இடவும்


இராசயன முறை:
  • கதிர் வெளிவருதலின் போது பூசணக்கொல்லிகளை தெளித்தல் வேண்டும்.
  • அதிக கொள்ளளவு கொண்ட தெளிப்பான்களைப் பயன்படுத்தி மட்டுமே எடிபென்பாஸை அளிக்க வேண்டும்.
  • ட்ரைடென்மார்ஃப் மற்றும் பாஸ்பமிடான் இரண்டையும் கலந்து அளிக்கவேண்டும்.
  • மேன்கோசெப் மற்றும் பெனோமைல் போன்ற பூசணக் கொல்லிகளுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்
  • கதிர் இலைப்பருவத்தில் கார்பன்டசீம், எடிபென்ஃபாஸ் அல்லது மேன்கோசெப் தெளிக்கவேண்டும்
  • கார்பன்டசீம் 250 கிராம் (அல்லது) குளோரோதலோனில் 1 கிலோ (அல்லது) எடிபென்பாஸ் 1 லிட்டர்/எக்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.
  • பெனோமைல் மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடேன் இலைவழித் தெளிப்பு மேற்கொள்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
SPRAY CHLOROTHALONIL
பெனோமில் தெளிக்கவும் குளோரோதேலோனில் தெளிக்கவும்
  மேலே செல்க