வாசனை & மலைத்தோட்டப்பயிர்கள் 
                      1.தரமான தேயிலை கிடைக்க எத்தனை இலைகளைஅறுவட  செய்ய வேண்டும் 
            மொட்டுடன் இரண்டு இலைகளை அறுவடை செய்ய  வேண்டும் 
             
            2.தேயிலையினை எவ்வளவு நாட்கள் இடைவெளியில்  அறுவடை செய்ய வேண்டும்? 
            மிகுந்த வளர்ச்சி காலங்களில் - 7-10  நாட்கள் இடைவெளியில் 
            குறைந்த வளர்ச்சி காலங்களில் -  10-15 நாட்கள் இடைவெளியில் 
             
            3. பெரும்பாலான தேயிலை இலைகள் கொப்பளம்  போன்ற தேமானற்றம் அளிக்கின்றது. இதற்கு என்ன காரணம்? 
            இது கொப்புள நோயின் அறிகுறியாகும்.  இதனைக் கட்டுப்படுத்த 
            சில்வர் ஓக் மற்றும்  
            கல்யாண முருங்கை 
             
            4. கோடைகாலங்களில் கல்யாண முருங்கையின்  இலைகள் தீயிற் கருகினாற் பொல் காட்சி அளிக்கின்றது. அதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? 
            கோடைகாலங்களில் கல்யாண முருங்கையின்  தண்டு பகுதியினை கற்றாலை (அ) பாலத்தீன் தாழ்கள் (அ) நீர்த்த சுண்ணாம்பினை நீரில் கலந்து  தண்டு பகுதியில் பூச வேண்டும் 
             
            5.கடந்த இரண்டு வருடங்களாகஎனது காப்பி  தோட்டத்தில் சரியாக பூக்களில் பூப்பதில்லை. இதனை ஏதேனும் செயற்கை முறையில் பூக்க செய்ய  முடியுமா? 
            மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சரியான மழை  இல்லாதாத தருணத்தில் பூக்கள் பூப்பதில்லை அரும்புவதில்லை எனவே செயற்கை முறையில் தெளிப்பு  நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் அதிக அளவிலான பூக்களை மலர் செய்து மகŸலை அதிகப்படுத்தலாம். 
             
            6.எவ்வளவு நாட்களுக்கு ரப்பர் மரங்களிலிருந்து  பால் எடுக்கமுடியும்? 
            நடவு செய்ததிலிருந்து  12-14 வருடங்கள் வரை அதற்கு பின் மரங்களை வெட்டி விறகு /மரசாதனங்கள் செய்ய பயன்படுத்தலாம் 
             
            7.வணிகரீதியான  சாகுபடிக்கு முந்திரி நாற்றுகளை பயன்படுத்தலாமா? 
            பயன்படுத்த  கூடாது. ஒட்டு கன்றுகளையே பயன்படுத்த வேண்டும் 
             
            8.முந்திரி  தோட்டங்களில் எந்த வகையான என்ன ஊடு பயிரினை பயிர் செய்யலாம் 
            நிலக்கடலை பயறுவகைப்பயிர்கள்  சிறுதானியப் பயிர்கள் 
             
            9.எனது முந்திரி  தோட்டமானது நடவுசெய்த 15 வருமாகின்றது. மேலும் இவற்றிலிருந்து குறைந்த மகŸலையே நான்  வருடாவருடம் அறுவடை செய்கின்றேன. இம்மரங்களில் அதிக மகŸல் பெற ஏதேனம் புதிய தொழில்  நுட்பம் உண்டா? 
            இதற்கான தொழில்நுட்பமானது  மேற்பரப்பு மாற்று வேலைப்பாடாகும். இதில் வயதாகிய  மரங்களை தரைமட்டத்திலிருந்து 1-15 மீ உயரத்தில் வெட்டி விடுதல் வேண்டும். பின் அவற்றில்  துளிர்த்து வரும் பகுதிகளை இளந்தளிர், ஒட்டு முறையின் மூலம் தரமான அதிக மகŸல் தரவல்ல  தண்டு பகுதியினை சேகரித்து ஒட்டு கட்ட வேண்டும். 
            இவ்வாறு ஒட்டு  கட்டிய பாகம் நளடைவயில் வளர்ந்து (1-2 வருடம்) நல்ல மகŸல் தரவல்லதாகும். மேலும் இம்முறையினை  குறைவாக மகŸல் தரும் மரங்களுக்கும் பின்பற்றலாம். 
             
            10.நான் இராநாதபுரம்  மாவட்டததில் வசித்து வருகின்றேன். மேலும் எனது தோட்டங்களில் பயிர் சாகுபடி செய்ய குறைந்த  அளவு தண்ணீரே உள்ளது. இதில் நான் பாக்கு சாகுபடி செய்யலாமா? 
            பாக்கு சாகுபடி  செய்ய நல்ல தண்ணீர் வசதி இருக்க வேண்டும். 
             
            11.எனது பாக்கு  தோப்பில் அதிக அளவிலான இலை மற்றும் அதனின் அடிபாகம் வீணக் கிடக்கின்றது. இதனை ஏதேனும்  பயனுள்ள பொருள்/ லாபம் தாக்கசுடிய பொருட்களாக மாற்ற முடியுமா? 
            1.பாக்கு மட்டைகள  9அடிபாகம்) உணவு பரிமாரப் பயன்படும் தட்டுகள் செய்து விற்பனை செய்யலாம் 
            2.எஞ்சிய இலை  பாகத்தினை பொடியாக்கி மண் புழுக்கள் கொண்டு மக்கச் செய்யலாம். பின் மண்புழுக்களைப்  பிரித்து எடுத்து விற்பனை செய்து லாமீட்டலாம். மேலும் இதனை பாக்கு தோட்டத்தில் ஈடும்  பொழுது அங்கக உரத்தேவை குறைந்து மகŸல் அதிகப்படுத்தலாம் 
             
            12.கோகோளபயிர்  சாகுபடி செய்ய உகந்த இடங்கள் யாவை? 
            கோகோ பயிரினை  தென்னை மற்றும் பாக்கு மர இடைவெளியில் சாகுபடி செய்யலாம். 
             
            13.எனது நிலம்  கடற்கரையேரத்தில் அமைந்துள்ள இதில் நான் வெற்றிலை சாகுபடி செய்யமுடியுமா? 
            உவற்பு /உப்பு  சத்து மிகுந்த நிலங்களில் வெற்றிலை சாகுபடி செய்ய முடியாது 
             
            14.வெற்றிலை  சாகுபடி செய்ய உகந்த துணை/ தாங்கு மரங்கள்/ செடிகள் யாவை? 
            அகத்தி 
             
            15.பெரும்பாலான  தென்னை மரங்களில் குரும்பை விழுதல் அதிகமாக உள்ளது. அதனை் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? 
            வேர் மூலம்  தென்னை டானிக் செலுத்துவதன் மூலம் குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம் 
             
            16. எனது தென்னை  தோப்பில் உள்ள மரங்களில் இலைகள் வெட்டுப்பட்டு காணப்படுகின்றது. 
            இது காண்டா  மிருக வண்டு தாக்குதலின் ஏற்படும் விளைவுகள் ஆகும். இதனைக் கட்டுப்படுத்த வளரும் குருத்துப்  பகுதியில் ஒரு கையளவு மணல் தூவுதல் வேண்டும. மேலும் ஒரு மண் சட்டியில் தென்னை கல்/தெளுகுடன்  லிட்ருக்கு 2 மிலி மோனோகுரோட்டடோபாஸ் (அ) மீதைல் டெமட்டான் கலந்து இரவு நேரங்களில்  வைப்பதன் மூலம் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம், பின் அரகிலுள்ள தொழுஉரக்கழிவு குழிகளை  ன்கு கிளறி கொத்திவிடவேண்டும். அவ்வாறு செய்யும்போது கிடைக்கும் புழுகளை சுண்டு புழுக்களை  சேகரித்து அழிக்க வேண்டும். 
             
            17. மானாவாரி  பகுதிகளுக்கேற்ற தென்னை இரகங்கள் யாவை? 
            விபிஎம் 3  & எஎல்ஆர்(சிஎன்)-1 
          (வேப்பங்குளம்)                       (ஆழியார்நகர்) 
          18. தென்னை தோப்புகளில்  ஈரப்பதத்தினை சேமிக்க ஏதேனும் வழிமுறை உண்டா? 
            தென்னங் தோப்புகளில்  ஈரப்பதத்தினை சேமிக்க தேங்காய் மட்டைகளை (அ) மக்கிய தென்னை நார் கழிவுகளை நிலப் போர்வையாக  வட்டப்பாத்திகளில் இடலாம். 
             
            19. தென்னை இலையின்  அடிப்பகுதியில் சிறிய அளவிலான கூடுகள் காணப்படுகின்றனது. அதனுள்ள சிறிய கருமையான தலைகளுடைய  புழுக்கள் இருக்கின்றனது. அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது? 
            இது கருந்தலைப்  புழுவின் தாக்குதலாகும் 
             
            20.தென்னை மரத்தண்டும்  பகுதியில் பிசின் போன்ற திரவம் வடிந்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் சிறிய துளைகள்  காணப்படுகின்றனது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? 
            இது சிவப்பு  கூண்டு தாக்குதல் ஆகும். 
             
            21. நான் அறுவடை  செய்த தேங்காய் மட்டையின் மீது சிறிய வெடிப்புகள் காணப்படுகின்றது. மேலும் தேங்காய்  சிறிய அளவில் உள்ளது. இதனால் என்னால் அதிக விலைக்கு விற்க முடிவதில்லை. இதனைக் கட்டுப்படுத்த  வழிமுறைகளைக் கூறவும் 
            இது ஈரியோபைட்  சிலந்தியின் தாக்குதலாகும் 
             
            22. நான் தென்னை  நாற்றாங்கால் அமைக்க விரும்புகின்றேன் 
            அதற்கு தேவையான  விதை தென்னை /தேங்காயினை எவ்வாறு தேர்வு செய்வது  
             
            23.தென்னை நாற்றுகள்/கன்றுகளைத்  எவ்வாறு தேர்வு செய்யவேண்டும்? 
            ஒவ்வொறு நாற்றுகளிலும்  குறைந்தது 6-7 இலைகள் இருக்க வேண்டும். மேலும் அதனின் விட்டம் 4 அங்குளம் (10 செ.மீ.)  இருக்க வேண்டும் 
             
            24. எனது நிலங்கள்  கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் நான் என்னைப்பனை சாகுபடி செய்யலாமா? 
            மணற்பாங்கான  உவற்பு/உப்பு சத்து மற்றும் கல்களைக் கொண்ட மண் வகைகளில் எண்ணைபேனை சாகுபடி செய்ய  முடியாது 
             
            25 .எண்ணைப்  பனையில் அதிக அளவிலான ஆண் பூக்கள் வெளிவருகின்றது/மலர்கின்றது. ஏன், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த  முடியும்? 
            தண்ணீர் /ஈரப்பத  பற்றாக்குறையின் போது பூக்களில் பால் (ஆண்/பெண்) மாற்றம் ஏற்படுகின்றது.எனவே கட்டுப்படுத்த  நீண்டகால வறட்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
          |