நபார்டு  
          தேசிய  வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டம்: 
             
            நபார்டு வங்கியானது  வேளாண்மையை வளர்ச்சிப்படுத்த / வளப்படுத்த தொடங்கப்பட்ட வங்கியாகும். சிறுதொழில், குடிசைத் தொழில்  கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கிராமப்புற தொழில்களுக்காக தொடங்கப்படட வங்கியாகும்.  இது மேலும் கிராமங்களில் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த மற்றும்  தொடர்ச்சியான, வளமான வளர்ச்சிக்கு உதவுகிறது. 
             
          கிராமப்புறங்களில்  நபார்டு வங்கியின் நோக்கங்கள்: 
          
            - கிராமங்களின் கடன் திட்டங்களும், மறுகடன்  திட்டங்களும் 
 
            - வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லுதல்  மற்றும்
 
            - வாடிக்கையாளர் வங்கிகளை மதிப்பிடுதல்,  கண்காணித்தல் மேற்பார்வையிடுதல்
 
           
          இதர  நோக்கங்கள்: 
          
            - கடன் தரும் வங்கிகளை ஒருங்கிணைத்தல்
 
            - அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் விரிவான  உதவிகள் கிராமப்புற வளர்ச்சிக்கு கிடைத்திட உதவுகிறது
 
            - வங்கிகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும்  கிராம மேம்பாட்டினைப் பற்றி பயிற்சி அளித்தல்
 
            - தமிழக  அரசு அறிமுகப்படுத்தும் கொள்கைகளை சரியான முறையில் வேளாண்மைத்துறைக்கும், கிராம வளர்ச்சிக்கும்  கிடைத்திட உதவுகிறது
 
            - கூட்டுறவு வங்கிகளுக்காக சீரான முறையில்  செயல்படுவது
 
           
        மேலும் விவரங்களுக்கு http://www.nabard.org/  |