|   | 
        திட்டமிடுதல்  மற்றும் மேற்பார்வையிடல் இயக்கம் 
            
          ஜனவரி 2003ல் இருந்தே  திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வையிடல் இயக்கம் சார்பற்ற பிரிவாக இயங்கி வருகின்றது.இந்த இயக்கத்தின் பார்வை திட்டமிடுதல்,மேற்பார்வையிடுதல் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக  வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆகும்.  
           
          இயக்கத்தின்  முக்கிய வினைகள் பின்வருமாறு 
           
          திட்டமிடுதல் மற்றும்  மேற்பார்வையிடல் இயக்கம் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் மத்திய,மாநில அரசு துறைகளுக்கும்  இடையே பிணைப்பாக செயல்படுகின்றது.அரசு ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் நிதி பெற இயக்கம்  புதிய ஆராய்ச்சி திட்டங்களை பெறுகின்றது.மேலும் உழவர் சமுதாயத்தின் பயனுக்காக பல்வேறு  செயல் திட்டங்களை செயற்படுத்துகின்றது.மேலும் மாநில செயல் திட்டங்களை மேற்பார்வையிடுதல்  மற்றும் நிதி நிலவரம் மற்றும் செயல் திட்டத்தின் நிலைக்குறித்து இயக்கம் மத்திய அரசுக்கு  காலமுறை தோறும் அறிக்கை வழங்குகின்றது. 
           
          இந்த இயக்கம் திறவினை  முதலீட்டு திட்ட செயற்குறிப்புகளை துனை வேந்தரிடம் நிதியாக பரிந்துரை செய்கின்றது.மேலும் திட்டத்தின் பொருள் மற்றும் நிதி நிலவரத்தை மேற்பார்வையிடுகின்றது.அறிஞர்களின்  / த.வே.ப.க.வின் தனிப்பட்ட நிறுவன செயற்குறிப்புகளை செயல்படுத்தி பல்கலைக்கழக அங்கீகாரத்திற்காக  பரிந்துரைக்கப்படுகின்றது.நிதி நிலையறிக்கைக்கு முன்பாக சட்ட பேரவையில் தமிழக அரசுக்கு  தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்ய  இந்த இயக்கம் பொறுப்பேற்கின்றது.மாதம் தோறும் வெளியிடப்படும் தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழக செய்தி மடலில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகள் தகவல்களாக  நமது பங்கு தாரர்களுக்கு வழங்கப்படுகின்றது. 
           
          பாகம்  இரண்டு – செயல் திட்டம் 
           
          முக்கிய வயல் வெளி  இடர்பாடுகளுக்கான ஆராய்ச்சி திட்டங்கள் தயார் செய்தல்,முக்கிய வரிசைப்படுத்தல் மற்றும்  பாகம் இரண்டு செயல் திட்டத்தின் கீழ் நிதி உதவிக்காக அரசுக்கு அனுப்பப்படுகின்றது. 
           
          திறவினை  முதலீட்டுத் திட்டம் 
           
          கடந்த 4 வருடங்களாக  இரட்டை குறிக்கோள்களுடன் அதாவது தரமான வேளாண் இடுபொருள்கள் (விதை, நாற்றுகள்,நறுக்குகள்,ஒட்டுச் செடிகள்,உயிரி உருகல் மிகைப்பிகள்,மண்புழு உரம்,உயிரின உரங்கள்,உயிரியல்  முறைக் கட்டுப்பாட்டுக் காரணிகள்,தேங்காய் சத்து மருந்து,ஆலோசனை சேவைகள்)வழங்கவும்,  பல்கலைக்கழகத்திற்கு வருவாயீட்டவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.திட்டத்தின் செயப்பாட்டு  செலவுகளுக்கான தொகை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளர்ச்சி நிதியில் இருந்து எடுக்கப்படும்.  இத்தகைய திட்டம் தொடக்கத்திலிருந்து 3 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். 
           
          ஆலோசனை  சேவைகள் 
           
          ஆலோசனை சேவைகள் தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உழவர்கள்,நிறுவனங்கள், தொழில் சாலைகள் ஆகியோருக்கு  சீரான முறையில் வழங்கப்படுகின்றது.வேளாண்மையை வணிக திற வினையாக செயல்நுட்ப அறிவு தொழில்நுட்பம்  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அறிஞர்களால் வழங்கப்படுகின்றது.பயன் நுகர்வோர் செலுத்தும்  கட்டணம் பல்கலைக்கழகம் மற்றும் அறிஞர்களுக்கு பங்கு இருக்கிறது. 
         | 
          |