|   | 
         வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மையம் 
            
          தோற்றம்  
             
            வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மையம்,தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழத்தில் முதல் வெவ்வேறு துறைகள் உள்ளடக்கிய இம்மையம் 1978ல் நிறுவப்பட்டது.வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சியின் சமுதாயப் பொருளியல் சார்ந்த பிரச்சினைக்கான ஆராய்ச்சி  இமை்மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.தொடக்கத்தில் இமை்மையம் வேளாண் பொருளியல் மற்றும்  வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரகச் சமூகவியல்  என்னும் இருதுறைகளுடன் உள்ளடக்கப்பட்டிருந்தது.பின்பு 2000ல் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு  துறை புதிதாக சோக்கப்பட்டது.உழவர் சமுதாயத்திடம் இருந்து ஆராய்ச்சழி மற்றும் விரிவாக்க  திட்டங்கள் மூலம் பாராட்டுதல் பெருதல்,லாபம் ஈட்டக்கூடிய நம்பிக்கைகள் ஆகியவைக்கு  இம்மையம் பெறும் முனைப்பு பங்குடன் செயல்பட்டு வருகின்றது. 
             
            தன்னேற்புத்  திட்டம் 
             
            வேளாண் பிரிவின் கொள்கைகள் மற்றும் முடிவு எடுத்தலுக்கான  புதிய பொருளாதார அறிவை பரிமாணத்தை உழவர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கையகப்படுத்தல்.  
             
            குறிக்கோள்கள் 
          
            
              - பொது மற்றும் தனியார் பிரிவுகள் ஊரக  வளர்ச்சி பிரச்சினைகளை விடுவித்தலுக்கான கூட்டு செயல்பாடுகளை உறுதுனைப்படுத்துதல்.
 
              - வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு  மக்கள் வள மூலதனம் வழங்கக் கூடிய சமூக அறிவியலில் விரிந்த நெடுக்க கல்வி திட்டத்தை  வழங்குதல்.
 
              - வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி பிரச்சினைகள்  மற்றும் வாய்ப்புகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆராய்ச்சி மேம்பாட்டை ஒருங்கிணைத்தல்.
 
              - ஊரக சமுதாய பிரச்சினைகளுக்கு மத்திய  மற்றும் மாநில அரசுக்கு ஆதரவாக கொள்கைகளை வழங்குதல்.
 
              - பயிற்ச்சி,ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு  மண்டல,தேசிய மற்றும் சர்வதேச அளவில் இடை–நிறுவன கூட்டை ஊக்குவித்தல்.
 
             
           
          நிறுவனப்  பிணைப்புகள் 
             
            மாநில திட்டக்குழு போன்ற மாநில அளவிலான நிறுவனங்களுடன்  இம்மையம் ஆராய்ச்சி நெருங்கிய வேலை உறவுமுறை கொண்டுள்ளது.வேளாண் பொருளியல் மற்றும்  தேசிய மையம்,போன்ற தேசிய நிறுவனங்கள் மற்றும் மிச்சிகென் மாநிலப் பல்கலைக்கழகம்,சர்வதேச வேளாண் ஆராய்ச்சி அறிவுரைக்குழு (CGIAR),சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிலையம்  (IFPRI),சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் (IRRI),வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதார தெற்காசிய வலையமைப்பு  (SANDEE), பொருளாதார ஆராய்ச்சி நிலையத்திற்கான  தெற்காசிய வலையமைப்பு (SANEI) மற்றும் உலக வளர்ச்சி  வலையமைப்பு (GDN) போன்ற சர்வதேச நிறுவனங்கள் ஆராய்ச்சி முன்னுரிமை அமைப்பு,நிலம்  மற்றும் நீர் வள மேலாண்மை,ஒப்பந்த பண்ணையம், உள்ளூர் ஆளுமை மற்றும் ஊரக வளர்ச்சி,  உள்கட்டமைப்பு மற்றும் திசைமாற்றுதல், சுய உதவிக் குழு மற்றும் அவர்களின் பங்கேற்பு,  சுனாமி இடர்பாட்டு மேலாண்மை ஏழ்மை சுளுவு,மாற்றுமரபணு பயிர்களுக்கான பொருளாதாரம்  ஆகியவை மேல்காணும் அனைத்து நிறுவனங்கள்/அமைப்புகளின் முக்கியமான ஆராய்ச்சி குறிக்கோள்கள்  கூட்டு நடைமுறைப்படி செயல்பட்டன. 
             
  கல்வி 
   
            வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பப்பரிமாற்றங்களின்  உள்ள பிரச்சினைகளை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இம்மையத்தில் இளநிலை மற்றும்  முதுநிலை கல்வி வழங்கப்படுகின்றது.உழவர் சமுதாய நலத்தில் பங்கேற்க்கப்பட்ட கொள்கையாளர்கள்  மற்றும் பங்குதாரர்களின் தேவையை சந்திக்கும் வகையில் முதுநிலை,பட்டதாரி மாணவர்களுக்கு  சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகின்றது.ஊரக மேலாண்மைக் கல்வி,தொழில்நுட்ப மற்றும்  வேளாண் துறையில் மேலாளர் பற்றிய ஆற்றல் இவையிரண்டையும் கூட்டு இயக்க செய்கின்றது.கட்டமைப்பு  மாற்றங்களின் தொடர் முயற்சி மாணவர்களை தன்னம்பிக்கையுடன் வேளாண் துறையில் எழும் சவால்களை  எதிர்க்கொள்ளும் ஆற்றல் பெறுகின்றனர். 
          இந்த  இயக்கத்தின் கீழ் உள்ள துறைகள்: 
          
            
              - வேளாண் பொருளியல் துறை 
 
              - வேளாண் மற்றும் ஊரக மேலாண்மை (  http:// www.tnau.ac.in/arm/index.html)
 
              - வேளாண் விரிவாக்க இயல் துறை
 
             
          | 
          |