|   | 
    
       | 
      | 
      
       
        
          நஞ்சையில்  புழுதிவிதைத்த மானாவாரி நெல் 
               
          மானாவாரி நெல் 
          இவ்வகை நெற்பயிரின வளர்ச்சி, வயது மற்றும் மகசூல் மழையின் அளவைப் பொறுத்தே  அமைகின்றது. புழுதி விதைக்கப்ட்டு வறட்டுகளை எடுக்கப்பட்டாலும் மழை தொடர்ந்து  பெய்யும் தருணத்தில் வயலில் நீர் தேங்கி சேற்று வயல் போல் மாற்றம் அடையும் தன்மை  உண்டு. பொதுவாக பயிரின் ஆரம்ப காலத்திலும், கதிர் முற்றும் காலத்திலும் மழை  குறைவாக அல்லது நின்றுவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதால் ‘வறட்டு நெல்’  என்றும் கூறப்படுவது உண்டு. இம்முறையைப் பயிரை ‘மானாவாரி’ என்பது வழக்கம். 
          ஏற்ற பகுதிகள் 
           
          
            - கடற்கரை       மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளுர், புதுக்கோட்டை, இராமநாதபுரம்,       விருதுநகர், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி
 
           
          பருவங்கள் 
          
            - ஜீன்       - ஜீலை – வடகடற்கரை மாவட்டங்கள்
 
            - செப்டம்பர்       – அக்டோபர் – தென் கடற்கரை மாவட்டங்கள்
 
           
          நிலம் தயாரித்தல் 
          
            - கோடையழவும்       அதன் பிந்திய உழவும் அவசியம்
 
            - எங்கெல்லாம்       ‘மண் இருக்கம்’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம் 1 டன் அடியில்       இட்டு கடைசி உழவு செய்யப்பட வேண்டும்.
 
           
          இரகங்கள் 
          
            - குறுகிய       கால முன்-பின் வறட்சியைத் தாங்கக்கூடிய ரகங்கள்
 
            - அப்பகுதிகளுக்கேற்ற       ‘நாட்டு ரகங்கள்’
 
           
          விதைப்பு 
          
            - விதையின்       அளவு 75 கிலோ ஒரு எக்டருக்கு 
 
            - விதைநேர்த்தி       முறைப்படிச் செய்ய வேண்டும். விதை கடினப்படுத்துதல் ( 1 சதம் பொட்டாஷ்       உரத்துடன்) மிகவும் முக்கியமான பயிர்நேர்த்தியாகும்
 
            - 3/4 அடி       அகல, வரிசையில், விதைக்கும் கருவிகள் கொண்டு. விதைக்கப்படுவது சாலச்       சிறந்தது, விதையின் ஆழம் ஒரு அங்குலமாவது இருத்தல் வேண்டும்
 
            - விதைப்பது       பருவ மழைக்கு முந்தையதாக இருத்தல் மிகமிக அவசியம்
 
           
          பின்செய் நேர்த்தி 
          
            - 10       பாக் அசோஸ்பைரில்லம் (1000 கி, ஹெ) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா       (2000 கி, ஹெ) அல்லது  அசோபாஸ் (4000       கி, ஹெ) ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து       வயலில் முதல் மழை வந்தவுடன் தெளிக்கவும்
 
            - பயிர்       களைவதும், பாடு நிரப்பலும் விதை முளைத்த 14 முதல் 21 நாட்களுக்குள் அமைதல்       நன்று
 
            - மிகவும்       வறட்சியான காலங்களில் 1000 பிபிஎம் என்ற அளவில் (ஓரு மி.லி.லிட்டர்       தண்ணீரில்) சைகோசெல் பயிருக்கும் தெளித்தல் வேண்டும்.
 
            - வறட்சியான       காலத்தில் நீரின் தேவையைக் குறைக்க 3 சதம் ‘காயளின்’ இலையில் தெளித்தலும்,       ஒரு சத பொட்டாஷ் கரைசலைத் தெளித்தலும் இலை வழி நீர் ஆவியாவதைக் குறைத்து       நல்ல பலனைத் தரவல்லது
 
           
          உர மேலாண்மை 
          
            - பொதுவான       உர அளவு 502525 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு
 
            - ஊட்டமேற்றிய       தொழுஉரம் 750 கிலோ 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்தது       அடியுரமாக இடப்படவேண்டும்
 
            - தழைச்சத்து       25 கிலோ சாம்பல்சத்து 12.5 கிலோ இருமுறை, பயிர்முளைத்த 20-25 நாட்களில்       முதலிலும் மீண்டும் 40-45 ஆம் நாட்கள் மரு முறையும் இடப்படவேண்டும்
 
            - மழை       பெய்வது நல்ல முறையில் மண்ணின் ஈரம் தூர் கட்டும் பருவமிருந்தே அமையும்       சந்தர்ப்பங்களில் தழைச்சத்தும், சாம்பல் சத்தும் மூன்றாவது முறையாக 60 லிருந்து       65 நாட்களுக்குள் அல்லது கதிர் வெளிவரும் பருவத்தில் இடுதல் அதிக மகசூல்       தரவல்லது
 
            - மூன்றாம       முறை உரம் அளிக்கப்படும் தருணத்தில் வயலில் தண்ணீர் தேங்கி நிற்கவேண்டும்.       அத்தண்ணீர் குறைந்தது அடுத்த் இரு வாரங்ளுக்கு போதுமான நீரைத் தரவல்லதாக       இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
            - விதைத்தது       முதலும், இடையேயும் நல்ல மழை பெய்து, பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருப்பின்       இரண்டாம் தருணமான 40 முதல் 45 நாட்களுக்குள் இடப்படும் தழைச்சத்து 40       கிலோவாக அதிகரிக்கப்படலாம். (சாம்பல் சத்து 12.5 கிலோவாகவே இருக்கட்டும்).       அதன் பின்னர் குறைந்தது 10 தினங்களுக்காவது தண்ணீர் தேங்கியிருத்தல் ஒரு       கட்டாயத் தேவை எனலாம்
 
            - எங்கெல்லாம்       இரும்புச்சத்து பற்றாக்குறைகாணப்பட்டதோ அப்பகுதிகளுக்கெல்லாம்       விதைக்கும்முன்பே 50 கிலோ இரும்பு சல்பேட் அளித்தல் அவசியம்
 
            - உயிர்       உரங்கள் இடப்படுவது மகசூலைப்பெருக்கவல்லது
 
            - இலைவழி       உரமான äரியா 1 சதம் ரூ டிஏபி 2 சதம் ரூ பொட்டாஷ் 1 சதம் கரைசல் இருமுறை,       âங்குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல்       நன்று
 
           
          களைமேலாண்மை 
          
            - முதல்       கைக்களை பயிர் முளைத்த 15-21 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும்
 
            - இரண்டாம்       கைக்களை 30-45 நாட்களில் செய்ய ஏற்ற தருணம்
 
            - களைக்கொல்லி       கொண்டும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு பயிர் முளைத்த 5       தினங்களுக்குள் பென்டிமெத்தலின் 1.0 கிலோ அல்லது பிரிடிலாக்குளோர் ரூ       சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ, விதை முளைக்கப்போதுமான மழை பெய்த உடனேயே       அளித்தும் களையைக்கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி இடப்பட்ட தருணத்தில்       எஞ்சிய களைகளை களைய கைக்களை 30-35 நாட்களில் மேற்கொள்ளப்படவேண்டும்.
 
           
         
        | 
      | 
    
       |