முதல் பக்கம் தொடர்புக்கு  

மாவுப்பூச்சி

தாக்குதலின் அறிகுறிகள் :

  • பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சுவதால் சேதம் ஏற்படுகிறது.
  • பூச்சித் தாக்கப்பட்ட வயல்களில் பயிர்கள் வளர்ச்சி குன்றி, நோய் தாக்கப்பட்ட பயிர்களைப் போன்றுத் தனிப்பட்ட பத்தைகளாகக் காணப்படும்.
  • உலர் நாற்றங்காலில் உள்ள நாற்றுக்கள் மோசமாகத் தாக்கப்பட்டிருக்கும்.
  • அதிக எண்ணிக்கையிலான பூச்சிகள் இலையுறைக்குள்ளேயே தங்கிக் கொண்டு சாற்றை உறிஞ்சும்.
  • இலையுறைகளில் வெள்ளைநிற மெழுகு போலக் காணப்படும்.
  • இதனை ‘சூரை நோய்’ (அ) ‘சத்தோரா’ அல்லது ‘சிதைவடைந்த புள்ளிகள்’ எனவும் அழைக்கப்படும்.

தாக்குதலின் தன்மை :

  • அதிக அளவிலான இப்பூச்சிகள் இலையுறைகளுக்குள்ளே இருந்து கொண்டு, பயிரின் சாற்றை உறிஞ்சிவிடும்.
  • தாக்கப்பட்ட துார்கள் குட்டையாகி, மஞ்சள் நிற சுருண்ட இலைகளுடன் காணப்படும்.
  • பூச்சி தாக்குதல் தீவிரமாகும்போது, கதிர் வெளிவருதலைத் தடுக்கிறது.
   
இளம் குஞ்சுகள், முதிர்பூச்சிகள் இலையுறைக்குள்ளே இருக்கும் சாறு உறிஞ்சப்பட்ட இலைகள்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

              அறிவியல் பெயர் - ப்ரவின்னியா ரோகி

  • முட்டை :
    பெண் பூச்சிகள் அதிக அளவிலான மஞ்சள் கலந்த வெள்ளைநிற முட்டைகளை இடும் / இளங்குஞ்சுகளை வெளிப்புற இலையுறைகளில் வெளியிடும்.

  • இளங்குஞ்சுகள் :
    புதிதாக பொரிக்கப்பட்ட இளங்குஞ்சுகள் பயிரின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவுவதற்கு முன் அதிலிருக்கும் மெழுகு போன்ற நுால்களுக்குள் கூட்டமாக 6-10 மணி நேரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும். வெளிரிய மஞ்சள் நிற இளங்குஞ்சுகள் பயிரினைச் சுற்றி சிறிது நேரம் ஊர்ந்து சென்று செடியிலோ/தண்டிலேயோ தங்கிக் கொண்டு, பின் ஒரு நாளுக்குப் பிறகு நன்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும். இரண்டாவது நாளில் அதன் உடல் மெழுகுப் பொருளால் போர்த்தப்பட்டிருக்கும்.

  • முதிர்பூச்சி : இறக்கைகள் இல்லாததால் இளம்பூச்சிகளும், வளர்ச்சிபெற்ற பூச்சிகளும் ஒன்று போலவே காணப்படும். இறக்கைகள் இல்லாத இப்பூச்சிகள் இழைவடிவமுடைய பொருள்களால் போர்த்தப்பட்டிருக்கும். பெண் பூச்சிகள் சிவப்பு நிறத்தில் முட்டை வடிவமாகவும், மென்மையான உடலுடனும் இலையுறைகளுக்குள் கூட்டமாக வாழும். ஆண் பூச்சிகள் சிறியதாகவும் மெலிந்தும், வெளிரிய மஞ்சள் நிறத்தில், ஒரு ஜோடி இறக்கைகளையும் வயிற்றுப்பகுதியின் முடிவில் சூல்தண்டு போன்ற அமைப்புடனும் காணப்படும். ஆனால் வாய்ப்பகுதிகள் இருக்காது.
   
மாவுப்பூச்சி
 
மாவுப்பூச்சி

மேலே செல்க

மேலாண்மை :

  • வரப்புகளிலிருந்து புல் வகைக் களைகளை அகற்றி வரப்புகளை சீர் செய்ய வேண்டும்.
  • பூச்சி தாக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்தல் வேண்டும்.
  • பூச்சி தாக்கப்பட்ட ஆரம்ப நிலையிலேயே ஃபெனிட்ரோத்தியான் 50 இ.சி. 1000 மிலி, பாசலோன் 35 இ.சி. 1500 மிலி மற்றும் டைமீத்தோயேட் 30 இ.சி. 500மிலி/எக்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியினைத் தெளிக்க வேண்டும்.
  • மிதைல் பாரத்தியான் 0.05% (அ) மோனோக்ரோட்டோபாஸ் 0.05% ஆகியவற்றைத் தெளிப்பதால் பூச்சித் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.
  • இயற்கை பூச்சி எதிரிகளான ஸ்கைம்னஸ் சிற்றினம், அனாட்ரிக்கஸ் பிக்மேயிஸ் மற்றும் மெப்பாகைமெரஸ் என்சிஃபெர் ஆகிய உயிரினங்களைப் பாதுகாக்கவேண்டும்.
இயற்கை எதிரி - சைம்னஸ் சிற்றினம் பூச்சிக்கொல்லி தெளித்தல்
வரப்பில் உள்ள புற்களை அகற்றவும் டைமிதோயேட் தெளிக்கவும்
மேலே செல்க