| 
         தேவையான பயிர்  
        எண்ணிக்கையை நிர்வாகித்தல் 
          
          
           
                   
          
          
            
              | கொள்கைகள்: | 
                | 
             
            
              
                
                   - பொதுவான இலக்கு: சீரான, பயிர் நிலையை உருவாக்குதல்.                
 
                   -  அதிகமகசூல் பெறுவதற்கு பயிர்நிற்கும் நிலை,  வயல் முழுதும் சீராக இருக்க வேண்டும்.                  
 
                  - நாற்றுநடுதல், நல்லபயிர்நிற்கும்  நிலையை உருவாக்குகிறது.                  
 
                  - நேரடி விதைப்பு முக்கியமாக நேரடி சேற்று விதைப்பு  பிரச்சினைக்குரியது.                  
 
                  - நேரடி விதைப்பாக இருந்தால், 
 
                   
                                 
                  
                     | 
                    
                       
                            
                      
                      
                        -  மிகவும் சீராக நிலத்தை சமப்படுத்துதல் மற்றும் நீர் மேலாண்மை  தேவைப்படும். 
 
                          | 
                   
                  
                     | 
                    
                        - 
                        மிகவும் ஆழமாக விதைத்த நாற்றோ/விதையோ சரியாக வெளிப்படாது.  மேலும் வலுக்குறைந்த செடிகளே  தோன்றும்.
 
                      | 
                   
                   
                | 
             
           
           
          
            
               | 
              திருந்திய நெல் சாகுபடி முறை  | 
             
            
               
                
  | 
              விதையளவு: 
                
                  - ஒரு குத்துக்கு ஒரு நாற்று என்ற அளவில் எக்டருக்கு 7-8 கிலோ விதை தேவைப்படுகிறது.
 
                  - பயிர் வளர கடினமாக இருக்கும் இடத்தில் குத்துக்கு 2 நாற்றுகள் என்ற அளவில் எக்டருக்கு 12-15 கிலோ விதை  தேவைப்படுகிறது.
 
                  - 15 நாட்களான நாற்றுகளை குத்துக்கு 1 அல்லது 2 நாற்றுகள் என்ற எண்ணிக்கையில்  நட வேண்டும்.
 
                  - நாற்றங்காலிலிருந்து பிடுங்கிய நாற்றுக்களை பிடுங்கி 30 நிமிடத்தில் வயலில் நடவு செய்திட வேண்டும்.
 
                  -  சதுர நடவு 22.5 ×  22.5 செ.மீ (9 × 9 இன்ச்) 
 
                 
                  பொதுவாக பயன்படுத்தும் சதுர நடவு  முறைகள் 
                - 
                    அடையாளம் வைத்த கயிரை உபயோகித்தல்.                  
 
                  - அடையாளம் இட்ட அலுமினிய பைப்புகளை உபயோகித்தல்.     
 
                  - கொக்கி/ஆப்பு கொண்டு அடையாளமாய் வைத்த மூங்கில் பலகையை  உபயோகித்தல்.                  
 
                  - அடையாளம் வைத்த மரப்பலகையை பயன்படுத்துதல்.                  
 
                  - உருளை வடிவஅடையாளமிடும் கருவியை பயன்படுத்துதல்.                  
 
                  - நடவு செய்து 7-10 வது நாளில் பயிர்களிடையே ஏற்படும்                  
 
                  - டைவெளி-பாடுவாசியை  நிரப்பவேண்டும்.                  
 
                 
                பெருமழைப் பொழிவு நிலவும் இடங்களில் பயிர் உருவாக்கம் சற்று  கடினமாக இருக்கும் – (தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்காலம்)  
                   
                  நாற்றுநடுதல் :  
                 
                நாற்றுக்களை நாற்றங்காலில் தயார் செய்து பின் நடவு வயலில் நட வேண்டும். சீரானபயிர் நிறுத்தத்திற்கும், களைகட்டுப்பட்டிலும் சரியான நடவு முறை முக்கியமான பங்கு வகிக்கிறது.  | 
             
            
               
                நாற்றுகள் மேலாண்மை : 
                 
                நாற்றின் வயதும், பயிர் வளர்ச்சியும்:    
                
             
                
                
                    - குறுகியகால இரகமாயின் 18-22 நாட்களான நாற்றுக்கள், மத்திய கால ரகமென்றால் 30 நாட்களான நாற்றுக்கள்,  நீண்டகால இரகமாயின் 35-40 நாட்களான  நாற்றுக்களே தக்க வயது  எனக் கொள்ளவும்.
 
                 
               
                  நாற்றங்காலிலிருந்து பிரித்து நடவு செய்யும் முறை: 
                     
                 
                
                  
                - 
                    தக்க பருவத்தில்- நான்கு இலை நிலையில் நாற்றுக்களை பிரித்து  நட வேண்டும்.                  
 
                  - இந்நாற்றுக்கள் அதிக துார்களை உற்பத்தி செய்யும்.  துார் கட்டும் பருவத்தில் சற்றே கவனத்துடன் நீர் பராமரிப்பு, போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். நிலம் சமன்படுத்துதல் கவனத்துடன்  செய்யப்பட்டிருக்க வேண்டும்.                  
 
                  - ஐந்து இலை, அல்லது அதற்கு மேல் வயது ஆகிவிட்ட  நாற்றுக்கள், தேவையான பயிர் வளர்ச்சியைத் தராமல், மகசூல் குறைய வாய்ப்புகள் அதிகமாய் உள்ளது. இதுவே முதிர்ந்த(வயதான)நாற்றுக்கள்  எனப்படுகிறது.
 
                 
                 
                வயதான நாற்றுக்களுக்கான மேலாண்மை முறைகள்:  
                
                
                  - 
                    குறைவான மண்வளம் உள்ள நிலங்களில் பரிந்துரைக்கப்பட்ட பயிர்  இடைவெளியில் பயிரிட வேண்டும்.                  
 
                  - ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களுக்கு மேல் நடவு செய்யக்  கூடாது.  வயதான  நாற்றுக்களை கற்றையாக நடவு செய்தால் துார் கட்டுவது சிரமமாகிறது.எனவே இதனை  தவிர்க்கவும்.                  
 
                  - பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 50 சதவிகிதம்  தழைச்சத்தை அடியுரமாக அளிப்பதால் துார்கள் உற்பத்தித்திறன் அதிகமாய் இருக்கும்.
 
                 
                 
                 வேரினை நனைத்தல்:
                
                  
                    - 
                  40 லிட்டர் தண்ணீரில் 5 பாக்கெட்  (1000 கிராம்/எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக்கெட் பாஸ்போபாக்டிரியா (1000 கிராம்/எக்டர்) அல்லது 10 பாக்கெட் அசோபாஸ் (2000  கிராம்/எக்டர்) கலந்து கரைசலை தயாரிக்கவும்.  இக்கரைசலில் நாற்றுக்களின் வேர் பாகம்  நன்கு நனையுமாறு 15-30 நிமிடங்கள் வைத்திருந்து பின்  நடவுக்கு பயன்படுத்தவும்.
 
              
    | 
             
            
               
                பயிர் எண்ணிக்கையும் இடைவெளியும்:  
                 
                
                  
                    இரகத்தின்  
                    கால    அளவு   | 
                    குறைவான    வளம் கொண்ட மண்  (செடிகள்/எக்டர்)   | 
                    இடைவெளி  
                    (செ.மீ)  | 
                    சிறப்பான/    அதிக வளம் கொண்ட மண்     
                    (செடிகள்/எக்டர்)  | 
                    இடைவெளி  
                    (செ.மீ)  | 
                   
                  
                    குறுகியகால    ரகம்   | 
                    8 லட்சம்  | 
                    12.5 x    10  | 
                    5.0 லட்சம்  | 
                    20 x 10  | 
                   
                  
                    மத்தியகால    ரகம்   | 
                    5.0 லட்சம்  | 
                    20 x    10  | 
                    3.3 லட்சம்  | 
                    20 x 15  | 
                   
                  
                    நீண்டகால    ரகம்   | 
                    3.3 லட்சம்  | 
                    20 x    15  | 
                    2.5 லட்சம்  | 
                    20 x 20  | 
                   
                 
                 
                கேரளா: 
                
                  
                    பருவம்   | 
                    கால    அளவு   | 
                    இடைவெளி   | 
                    குத்துக்கள் (எண்ணிக்கை/    ச.மீ)  | 
                   
                  
                    முதற்பயிர்   | 
                    மத்தியகால    ரகம்  
                      குறுகியகால    ரகம்   | 
                    20 செ.மீ x 15 செ.மீ 
                      15 செ.மீ x 10 செ.மீ  | 
                    33 
                      67  | 
                   
                  
                    இரண்டாம்    பயிர்   | 
                    மத்தியகால    ரகம்  
                      குறுகியகால    ரகம்   | 
                    20 செ.மீ x 10 செ.மீ 
                      15 செ.மீ x 10 செ.மீ  | 
                    50 
                      67  | 
                   
                  
                    மூன்றாம்    பயிர்   | 
                    மத்தியகால    ரகம்  
                      குறுகியகால    ரகம்   | 
                    20 செ.மீ x 10 செ.மீ 
                      15 செ.மீ x 10 செ.மீ  | 
                    50 
                      67  | 
                   
                | 
             
            
               
                நாற்றுக்களின் சரியான வயது:  
                   குறுகியகால இரகமாயின் 18 நாட்கள், மத்தியகால இரகம் என்றால் 20-25 நாட்கள் மற்றும் நீண்டகால இரகமானால் 30 நாட்கள் தக்க  வயது எனக் கொள்ளவும். 
                 
                கர்நாடகா:
                
                  - 	இடைவெளி: 20  x 10 செ.மீ (50 குத்துகள்/சதுரமீட்டர்) குத்துக்கு 2-3 நாற்றுக்கள்                  
 
                  -  குறுகியகாலஇரகம்: 15 x 10 செ.மீ (67 குத்துகள்/சதுரமீட்டர்)                    
 
                  -  துங்கபத்ரா  பாசன பரப்புகளில், தாமதமான நிலையில் (ஆகஸ்ட் 15-30) நீண்டகால இரகங்களான சோனா மசூரி போன்ற இரகத்தை நடுவதானால் 45 நாட்களான நாற்றுக்களை தேர்ந்தெடுத்து ஒரு குத்துக்கு 3-4 நாற்றுக்கள் என்ற அளவில் நட வேண்டும்.இவ்வாறு செய்வதினால் அதிகமகசூலைப் பெறலாம்.
 
                | 
             
            
               
                நடவுவயலில் நாற்றுக்களை நடுதல்: 
                 
                நாற்றுக்களின் எண்ணிக்கை:           
                
                
                  
                - 
                    ஒரு குத்துக்கு 2-4 நாற்றுக்கள்                  
 
                  - களர் மண்- குத்துக்கு 4-6 நாற்றுக்கள்
 
                 
                 நடவின் ஆழம்:
                 
                
                  
                - 
                    களிமண் - 5-6 செ.மீ                  
 
                  - ஆழம் குறைவான மண் - 2.5 - 3.0 செ.மீ                  
 
                  - ஆழம் குறைவான நடவு (3 செ.மீ) வேகமான வளர்ச்சி மற்றும் அதிக  துார்களைக் கொடுக்கும்.                  
 
                  - 5செ.மீக்கும் அதிக ஆழமான நடவு,  மெதுவானபயிர் வளர்ச்சி மற்றும் குறைவான  துார்களைக் கொடுக்கும்.
 
                     
                    
                    நாற்று நடவு அதிர்ச்சி:  
                    நாற்றங்காலிலிருந்து நாற்றுக்களைப் பிரித்து புதுசூழலில் நடவு  செய்யும்போது  ஏற்படுவதே  இந்த அதிர்ச்சி.  வெப்பமண்டலத்தில்  இந்த அதிர்ச்சியிலிருந்து மீள 5-7 நாட்கள் ஆகும்.
                
                  - குறைந்த ஆழத்தில் நடவு செய்வது பயிர்க்கால அளவைக் குறைக்கும். 
 
                  - நடவுக்குப்பின் மிதமான வெப்பநிலை இருந்தால் இந்த அதிர்ச்சிகால  அளவு குறையும். 
 
                  - சூடான மற்றும் குளிரான பருவநிலை அதிர்ச்சி மீட்பினைக்  குறைக்கிறது. 
 
                  - தகுந்த  வெப்பநிலை:  உச்ச அளவு -- <30°  செ  குறைந்த அளவு --  >20° செ. 
 
                     
                   
                 
                பாடுவாசி நிரப்புதல்(போக்கு நடவு) 
                
                  
                    - 
                  நடவு செய்து 7-10 நாட்களுக்குள் ஏதேனும் பயிரில்லாமல் சந்து-பாடுவாசி  தெரிந்தால் நாற்றுக்களைக் கொண்டு அதனை நிரப்ப வேண்டும்.
 
                 
                  | 
             
            
                                | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
          
            
              | நாற்றுநடுதல் வகைகள்:  | 
                | 
             
            
              நாற்றுநடுதல் வகைகள்:  
                
                கைவினை நடவு:  
                   சிறிய நெல் வயல் மற்றும் வேலை ஆட்கள் மிகுதியாக இருக்கும்  இடத்தில் கை நடவு ஏற்றது. நில சமன்படுத்துதல் குறைவாக இருக்கும் இடத்தில் மற்றும்  வேறுபட்ட நீர் அளவு உள்ள நிலங்களுக்கு கை நடவு ஏற்றது.  
                கைவினை நடவு செய்யும் முறை: 
                 
                
                  
                - 
                    விதைத்து 15-30 நாட்களான பிறகு நாற்றுக்களை  நாற்றங்காலிலிருந்து பிரித்து நடவு வயலில் நட வேண்டும்.                  
 
                     - திருந்திய பாய் நாற்றங்காலில், விதைத்து 15-20  நாட்களான பிறகு நாற்றுக்களை நடவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.  நாற்றுக்களைப் பாயோடு சேர்ந்து எடுத்து நடவு வயலுக்கு மாற்ற வேண்டும்.                     
 
                     - நன்கு சேற்றுழவு செய்து, சமன்படுத்திய வயலில் நாற்றுக்களை உடனே நடவு  செய்தல் வேண்டும்.  (பிரித்தெடுத்தவுடன்  நடுதலில் தாமதம் ஏற்பட்டால் உயிர் பிடித்தலில் தாமதம்  மற்றும் சில நாற்றுக்கள் இறக்கக்  கூட நேரிடலாம்)                  
 
                     - தகுந்த இடைவெளியில் (20 செ.மீ x 20 செ.மீ (அ) 22.5 செ.மீ x 22.5 செ.மீ) ஒரு குத்துக்கு 2-3 நாற்றுக்கள் என்ற அளவில்  அதிக ஆழமில்லாமல் நடவு செய்ய வேண்டும்.                  
 
                     - நடவுக்குப்பின் நாற்றுக்கள் விரைவாக உயிர் பிடிக்கவும், வேகமான வளர்ச்சிக்கும் நடும்போது நாற்றுக்களை கவனமாக கையாள வேண்டும்.
 
                 
                 
                குறைபாடுகள்: 
                
                 
                     - 
                    நடவு செய்தல் சற்று சிரமமான மற்றும் அதிக நேரம் செலவாகும் (30 ஆட்கள்/நாள்/எக்டர்) செயல் ஆகும்.                  
 
                     - உச்ச பருவ காலங்களில் போதுமான வேலை ஆட்கள் கிடைக்காமல்  குறித்த நேரத்தில் நடுவது சற்று சிரமமாக இருக்கும்.                       
 
                     - நிலப்பரப்பைப் பொருத்து ஒப்பந்த முறையில் குறைந்த பயிர்  அடர்வில் நடவு  செய்தல்  மகசூல் அளவைக் குறைக்கிறது.                  
 
                     - மானாவாரி நிலங்களில் மழைப் பொழிவிற்கு முன்பே நாற்றுக்கள்  (முக்கியமாக நவீன இரகங்கள்) முதுமை அடைந்து விடுவதால் சிரமம் ஏற்படுகிறது.
     | 
                
                 
                 
 
                 
                               
  | 
             
            
               
                இயந்திர நடவு: 
                
                   | 
                
                 
                 
                 
 
                | 
             
            
                                | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
          
            
               | 
              நேரடி சேற்று விதைப்பு:  | 
             
            
                | 
              
                
                  
                    - சேற்று நாற்றங்காலுக்கு விதைகளை முன்பே முளைக்க வைக்க  வேண்டும். 
 
                    - உருளை விதைக்கருவியோ அல்லது வீசி விதைத்தல்  மூலமாகவோ மெல்லிய நீர் படலம்  இருக்கும் நிலையில் விதைகளை விதைக்க வேண்டும்.
 
                    - விதைத்து 14-21 நாட்கள் ஆனபிறகு சந்து நிரப்புதல் அல்லது  அதிக பயிர் அடர்த்தியாக இருப்பின் களைத்தல், ஆகியவை செய்ய  வேண்டும்.
 
                    - இருபயிர் முறையில், நெற்பயிரை பசுந்தாள் உரப்பயிருடன் சேர்த்து  பயிரிட்டால், 40 செ.மீ உயரம் வந்தவுடன் அல்லது விதைத்து,  30 நாட்கள் ஆனபிறகு அப்பயிரை உழவு செய்து மண்ணுக்குள் புதைத்து விடவேண்டும்.
 
                    - பசுந்தாள் உரம் அளித்த வயலில், ஒரு வாரத்திற்குப்  பின் சுழற்களையெடுக்கும் கருவியைக் கொண்டு மண்ணுக்கு காற்றோட்டம் அளிக்க வேண்டும்.
 
                   
              
                | 
             
            
                                | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
          
           
          
            
               | 
              நாற்று வீசுதல் முறை: | 
             
            
                | 
              
                
                 
                     - 
                    குறுகியகால இரகங்களில் 20 நாட்களான நாற்றுக்களை வீசுதல் நல்லது.                  
 
                  - வரிசை நடவு செய்வதை விட ஏறக்குறைய 20 சதவிகிதம் நாற்றுக்கள் அதிகமாக தேவைப்படும் அல்லது முறைமையற்ற நடவில்  தேவைப்படும் அளவுக்குச் சமமாக இம்முறைக்கும் தேவைப்படும்.                  
 
                  - நன்கு சேற்றுழவிட்டு சமன்படுத்திய வயலில் நடவு செய்பவர்கள், நாற்றுக்களை வேகம் இல்லாமல் வீசிப் போடுவர்.                  
 
                  - தாளடி அல்லது மிகுந்த மழைப் பருவத்தைத் தவிர அனைத்துப்  பருவங்களுக்கும் ஏற்றது.                  
 
                  - வரிசை நடவோடு ஒப்பிடும்போது 50 சதவிகிதம்  அளவு ஆட்கள் சேமிப்பும், முறைமையற்ற நடவைவிட 35 சதவிகிதம் அளவு ஆட்கள் சேமிப்புத் திறனும் கொண்டது.                  
 
                  - 7-10 நாட்கள்வரை நாற்று வீசுதல் முறை இருப்பின் வயலில் மெல்லியபடலம் நீர்   இருக்குமாறு (சேற்று நெல் போல்)  பாதுகாக்க வேண்டும்.                  
 
                  - மற்ற வளர்ப்பு முறைகள் அனைத்தும் வழக்கமான நடவு வயல் நெல்  முறையைப் போன்றது.                  
 
                  - வரிசை நடவு முறையைப் போன்று இம்முறையிலும் சமமான தானியமகசூல்  கிட்டும். முறைமையற்ற நடவு முறையைவிட 10-12 சதவிகிதம் அதிக மகசூலைப் பெறலாம். 
 
                 | 
             
            
                               | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
         |