முதல் பக்கம் தொடர்புக்கு  

ஆனைக்கொம்பன் ஈ

தாக்குதலின் அறிகுறிகள்:

  • நடுக்குருத்து இலை வெள்ளித்தண்டு அல்லது வெங்காய இலை போன்று காணப்படுவதே முதன்மையான அறிகுறியாகும்.

  • இந்த அறிகுறிகள் நாற்றங்கால் பருவத்திலிருந்து பூக்கும் பருவம் வரை காணப்படும்.

  • தாக்கப்பட்ட துார்களின் அடிப்பகுதியில் வெற்றுத் துளைகள் அல்லது உருண்டை போன்ற முடிச்சு உருவாகும்.

  • தாக்கப்பட்ட துார்களால் இலைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கதிர்கள் உருவாவது தடைபடும் அல்லது கதிர்களே உருவாகாது.

  • பயிர்கள் வளர்ச்சி குன்றி, உருமாறி, வாடி, சுருண்ட இலைகளுடன் காணப்படும்.
வெங்காயத்தாள் (அ) வெள்ளித் தண்டு காணப்படும் குழல் வடிவ முடிச்சுகள் தண்டில் காணப்படும்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

             அறிவியல் பெயர் - ஒர்சியோலியா ஒரைசே

  • முட்டை :
    இந்த ஈயானது நீளமான, உருளை வடிவத்தில், பளப்பளப்பான வெள்ளை அல்லது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இடும்.

  • புழு :
    புழு 1 மி.மீ நீளமுடன் முன் பகுதியில் கூர்மையாக இருக்கும். இவை இலையுறையின் கீழே ஊர்ந்து சென்று, வளரும் மொட்டுக்குள் நுழைகிறது. அவை உண்ட இடத்தைச் சுற்றி ஒரு முட்டைவடிவ உள்ளிடம் உருவாகும்.

  • கூட்டுப்புழு :
    கூட்டுப்புழு வெளிவரும் போது அதன் உணர்கொம்புகள் மூலமாக குழலினைச் சுற்றி, வெள்ளித் தண்டின் நுனிப்பகுதிக்கு சென்று, அதனுடைய பின் பகுதி மட்டும் வெளியே தள்ளிக்கொண்டு நிற்கும்.

  • முதிர் பூச்சி:
    மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், கொசு போன்று சிறியதாக காணப்படும். ஆண் ஈக்கள் சாம்பல் நிறமாக இருக்கும். இலையிலுள்ள பனித்துளிகளை உட்கொள்ளும்.
முட்டை புழு
முதிர் பூச்சி முதிர் பூச்சி

மேலே செல்க

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • எதிர்ப்புத் திறனுடைய இரகங்களான எம்டீயூ 3, சக்தி, விக்ரம், பவித்ரா, பஞ்சமி மற்றும் உமா ஆகிய இரகங்களைப் பயிரிட வேண்டும்.

  • முதல் பயிர் பருவத்தில், தாமதமாக நடவு மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • அறுவடை செய்தவுடன் உடனடியாக நிலத்தை உழவேண்டும்.

  • ஒரு எக்டருக்கு 100 கிலோ என்ற அளவில் விதையை பயன்படுத்தவேண்டும்.

  • சாம்பல் சத்து உரத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்தவேண்டும்.

  • காட்டுநெல், அருகம்புல் வகைகள் போன்ற இணை களை மாற்றுப்பயிர்களை அழிக்கவேண்டும்.

  • விளக்குப்பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
புற ஊதா விளக்கு பொறிகளை வைத்து ஆனைக்கொம்பனை அழிக்கலாம் எம்.டி.யு.3 எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும்
 


இரசாயன முறைகள்:


  • பொருளாதார சேதநிலை: 10 சதவிகித யானைத்தந்த தண்டுகள் (அ) வெங்காய இலைகள்

  • விதைப்பதற்கு முன் முளைவிட்ட விதைகளை 0.2% குளோர்பைரிபாஸ் கரைசலில் 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் 30 நாட்கள் வரை பயிர்களுக்கு தாக்குதல் ஏற்படாமல் தடுக்கலாம்.

  • நாற்றுக்களின் வேர்களை 0.02% குளோர்பைரிபாஸ் கரைசலில் 12 மணி நேரம் நனைய வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

  • பூச்சி தாக்குதல் இருக்கும் வயல்களில், விதைத்த பத்து நாட்களுக்குள் போரேட் 10ஜி (1.5 கிலோ/எக்டர்), கார்போப்யுரான் 3 ஜி (0.5 கிலோ/எக்டர்), குயினைல்பாஸ் (1.5 கிலோ/எக்டர்) அல்லது குளோர்பைரிபாஸ் 10ஜி (0.5 கிலோ/எக்டர்) ஆகியவற்றின் குறுணைகளை இடவேண்டும். வயலில் 2-3 செ.மீ நீர் இருக்கும் நிலையில் இந்த குறுணைகளை வீசித் துாவிவிட வேண்டும். உரம் அளித்து குறைந்தது 4 நாட்களுக்கு வயலிலிருந்து நீர் வெளியேறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

  • ஃபென்தியான் 100 இ.சி. 500மி.லி (அ) எண்டோசல்பான் 35 இ.சி. 1000 மி.லி (அ) குயினால்பாஸ் 25 இ.சி. 1000மி.லி/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
போரேட் குருணைகளை இடவும் குளோர்பைரிபாஸ் கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைக்கவும்
 


உயிரியல் முறைகள்:


  • புழு ஒட்டுண்ணிகளான பிளேடிகேஸ்டெரிட், யூபெல்மிட் மற்றும் டிரோமாளிட் குளவிகள் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுபடுத்துகின்றன.

  • பிளேடிகேஸ்கேஸ்டர் ஒரைசே கேம் என்ற புழு ஒட்டுண்ணியை 10 சதுர மீட்டருக்கு 1 என்ற
    அளவில் நடவு வயலில் நடவு செய்து 10
    நாட்களுக்கு பிறகு வெளியிடவேண்டும்.

  • யூபெல்மிட் குளவிகளின் இரு சிற்றினங்கள் கூட்டுப்புழுவின் மீது ஓட்டுண்ணியாக வாழ்கின்றன.

  • கரையான்கள் ஈயின் முட்டைகளையும், சிலந்திகள் முதிர் ஈக்களையும் உண்கின்றன.

  • இரை விழுங்கியான தரை வண்டுகள் ஆனைக்கொம்பன் ஈயின் தாக்கத்தை கட்டுபடுத்துகின்றன.

  • இரை விழுங்கியான டெட்ராக்னதா மற்றும் அர்ஜியோப் கட்லெளனேடா என்ற சிலந்திகளை நெல் வயலில் வாழ வடுவதால் முதிர் ஈக்களை கட்டுபடுத்தலாம்.
புழு ஒட்டுண்ணி - பிளேட்டிகேஸ்டர் ஒரைசே சிலந்தி இரை விழுங்கி - டெட்ராக்நாத்தா
 
மேலே செல்க