முதல் பக்கம் தொடர்புக்கு  

கருநாவாய்ப்பூச்சி

தாக்குதலின் அறிகுறிகள் :

  • நீர் மட்டத்திற்கு சற்று மேலே தண்டுகளின் அடிப்பகுதியில் நாவாய்ப்பூச்சிகள் காணப்படும்.
  • பயிர் வளர்ச்சி குன்றி, துார்களின் எண்ணிக்கையும் குறைந்து, இலைகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறி பின் காய்ந்துவிடும்.
  • இலைகளின் மேல் வெளிரிய பச்சைநிற புள்ளிகளுடன் காணப்படும்.
  • வளர்ச்சி குன்றிய கதிர்(அ) கதிர்கள் உருவாகமலும், முழுமையற்று வெளிவந்த கதிர்கள், நிரம்பாத பூங்கிளைகள் அல்லது கதிர்ப்பருவத்தில் வெள்ளைகதிர்களும் தோன்றும்.

தாக்குதலின் தன்மை :
  • இளம் பூச்சிகள் மற்றும் முதிர் நாவாய்ப்பூச்சிகள் இரண்டும் பயிரிலேயே இருந்து கொண்டு, பயிரின் அடிப்பகுதியிலுள்ள சாற்றை உறிஞ்சி, பயிர்களைக் குட்டையாக்குகின்றன.
  • இலைகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறுதல் மற்றும் நெல்மணிகள் வளர்ச்சியின்றியும் காணப்படும்.
  • பால் பருவத்திலிருக்கும் கதிர்களை நாவாய்ப்பூச்சிகள் உண்கின்றன. இதனால் கதிர்களில் பழுப்பு நிறப் புள்ளிகள் அல்லது நிரம்பாத நெல் மணிகளுடன் காணப்படும்.
  • தீவிரத் தாக்குதலால் பயிர்கள் மடிந்துவிடும். இதனால் நெல் வயல் முழுவதும் காய்ந்து, கருகிக் காணப்படும். இதுவே “நாவாய்ப்பூச்சிக் கருகல்” அல்லது “எரிந்தது போன்ற தோற்றம்” ஆகும்.
தண்டுகளின் அடிப்பகுதியில் நாவாய்ப்பூச்சிகள் காணப்படும இலைகளின் மீது வெளிரிய நீள் புள்ளிகள் காணப்படும்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

              அறிவியல் பெயர் - ஸ்கோட்டினோபோரா லுாரிடா

  • முட்டை :
    முட்டைகள் உருளை வடிவத்தில், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில், இரு வரிசைகளில், 10 சிறு கூட்டங்களாக இலைகளின் மேல் இடப்பட்டிருக்கும்.

  • இளம்பூச்சி :
    இளம் பூச்சிகள் பழுப்பான மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில், வயிற்றுப் பகுதியில் சில கருப்புப் புள்ளிகளுடனும் காணப்படும்.

  • முதிர்பூச்சி :
    தட்டையாக, 7-9 மிமீ நீளமுடன், பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில், தெளிவான முக்கோண வடிவ நெஞ்சுப்பகுதி மற்றும் முன்நோட்டத்துடன் அமைந்து, இருபுறமும் முள்ளினைக் கொண்டிருக்கும்.
கருநாவாய் பூச்சி
 
கருநாவாய் பூச்சி  

மேலே செல்க

மேலாண்மை :
  • துார்வைக்கும் பருவத்தில் 10% சேதம் (அ) ஒரு குத்துக்கு 5 நாவாய்ப்பூச்சிகள் என்ற எண்ணிக்கை.
  • வயலிலுள்ள களைகளை அகற்றவும். உழவு மேற்கொள்ளும்போது வயலை நன்கு உலர விட வேண்டும்.
  • ஒரே முதிர்ச்சிப்பருவம் கொண்ட நெல் இரகங்களைப் பயிரிடுவதால், பூச்சியின் சுழற்சியை அழிக்க முடிகிறது.
  • நேரடி விதைப்பு நெற்பயிரில் குறைந்த துார்கள் மட்டுமே காணப்படுகிறது. எனவே நெற்பயிர் வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.
  • வயலை வெள்ளப்பாசனம் செய்வதன் மூலமும் அதிகளவில் முட்டைகளை மடிய செய்யலாம்.
  • பெளர்ணமி தினத்தன்று விளக்குப்பொறியை வயலில் வைப்பதன் மூலம், அதிக அளவிலான நாவாய்ப்பூச்சிகளை அவை கவர்கிறது.
  • சிலந்திகள், பொறி வண்டுகள் மற்றும் குளவிகள் போன்ற இரை விழுங்கிகளை பாதுகாக்க வேண்டும்.
  • வாத்துக்களை நெல் வயலில் விட வேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் @ 100 மிலி/எக்டர் (அ) அசிப்பேட் 625 கிராம்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5% தெளிப்பதால் கருநாவாய்ப்பூச்சிகளைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடிகிறது.
வாத்துகளை வயலில் விடவும் இரைவிழுங்கி சிலந்திகளை பாதுகாக்கவும்
விளக்குப்பொறியை வயலில் வைக்கவும் வேப்பங்கொட்டை சாறு தெளிக்கவும்
மேலே செல்க