`
பக்கக் கன்றுகள்
விதை
நுண் பயிர்ப் பெருக்க கன்றுகள்
பேரினப் பெருக்க கன்றுகள்
  • பயிரிடப்படும் வாழைகளில் பயிர் பெருக்கம் பக்கக் கன்றுகள் மூலம் உருவாக்கப்படுகிறது.

  • ஒரு வாழை மரம் 5-20 பக்கக் கன்றுகளை தன்னுடைய வாழ்நாளான 12-14 மாதங்களில் உருவாக்கும்.

  • பயிர் பெருக்கத்தை அதிகப்படுத்த, வளரும் மொட்டுக்கள் (அ) வேர்க்கிழங்குகளின் துண்டுகள் மற்றும் ஓடு தண்டுகள் மூலமாக உருவாக்கப்படுகின்றன.

  • கிளையில்லாத வேர்க்கிழங்கின் ஒவ்வொரு துண்டிலும் முளைக்கும் மொட்டுப் பகுதி நடுவில் இருக்குமாறு வெட்டி எடுக்க வேண்டும்.

  • புதிய செடிகளை உருவாக்க தகுந்த தாய்ச் செடியை தேர்வு செய்ய வேண்டும்.

  • ஒரே மாதிரியான 1 கிலோ எடையுடைய வேர்க் கிழங்குகள் (அ) துண்டுகளை, முளைக்கும் பகுதியை மட்டும் விட்டு விட்டு மற்ற பகுதிகளை வெட்டி விட்டு, பின் பயன்படுத்த வேண்டும்.

  • இந்தியாவின் சில பகுதிகளில் வெட்டி எடுத்த வேர்க்கிழங்குகளை 2-3 நாட்கள் சூரிய ஒளியில் உலர விட்டு, கன்றுகளை சீவி, நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி பின் நடவேண்டும்.

தாய் மரத்தினைத் தேர்வு செய்தல்

  • தாய் மரம் ஆரோக்கியமாக, பூச்சி மற்றும் நோயற்று இருக்க வேண்டும்.

  • வைரஸ் நோய் எதுவும் இல்லாத மொட்டுக்களை மட்டும் எடுக்க வேண்டும்.

  • தாய் மரங்கள் மேற்கூரையற்ற பூச்சி தாக்காத, நிழல் வலைகளுக்குள் சரியான உயரத்தில் வளர்க்கப்பட வேண்டும்.

  • வைரஸ் நோய் பரவுவதை தடுக்க, தாய் நாற்றங்கால் தோப்பை மற்ற வாழைத் தோட்டங்களிலிருந்து 500 மீ இடைவெளி இருக்குமாறு தனித்து அமைந்திருக்கவேண்டும்.

  • தாய் மரங்கள் நன்றாக பராமரிக்கப்பட்ட நிலைகளில் வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு தாய் மரத்திலும் ரகசிய எண்ணிட்ட அட்டையை கட்டிவிட வேண்டும். இதனால் அதிலிருந்து உருவாகும் கன்றுகளைத் தனியே பிரித்து இனங்காணலாம்.

  • சந்ததிகளின் குறிப்பேடுகள் மற்றும் அதன் ஆதார தாய் வாழைகளின் தகவல்கள் முறையாகப் பேணப்பட்டு பதிவு செய்யப்படவேண்டும்.

  • குறியிடப்பட்ட தாய் பக்கக் கன்றுகளை வயல் (அ) தோட்டத்தில் பராமரிக்க வேண்டும். இதனால் மேலும் பல புதிய கன்றுகளை உருவாக்கலாம்.

பக்கக் கன்றுகள்


அ) ஈட்டி இலைக்கன்று

  • பயிர்ப் பெருக்கம் செய்வதற்கு இவை மிகவும் ஏற்றது.

  • ஈட்டி இலைக்கன்றில் இலைகள் குறுகி, ஈட்டி போன்று கூர்மையான இலைகள், பூ வெளி வந்த தாய் மரத்தில் தோன்றியிருக்கும்.

  • இவ்வாறு தேர்ந்தெடுத்த  ஈட்டி இலைக்கன்றுகள் அடிப்பகுதியில் தாய்க்கிழங்குடன் இணைந்திருக்கும். ஆகையால்,  கவனமாகப் பிரித்தெடுக்கவேண்டும். பொதுவாக இவை நேரடியாக தோட்டத்தில் நடப்படுகின்றன.

  • இக்கன்றுகள் பக்கக்கன்றுகளை நீக்கும் போது, நீக்காமல் அப்படியே விடப்படுகின்றன.  

  • நீர்க் கன்றுகளைக் காட்டிலும் ஈட்டி இலைக் கன்று தான் மிகச் சிறந்தது. ஏனென்றால் அவைதான் அதிக வீரியத்துடன், மிகுந்த விளைச்சலைத் தரும்.

ஆ) நீர் கன்றுகள்

  • ஆரம்ப நிலையில் பக்கக் கன்று தாய் கிழங்குடன் அகலமான இலைகளுடன் இணைந்திருக்கும்.

  • நீர் பக்கக் கன்றுகள் என்பது தாய் மரத்துடன் இணையாமல் தனியே வாழும் இளங்கன்றுகள்.

  • இதில் ஈட்டி போன்ற இலைகள் இருக்காது.

 

இளம் கன்றுகள்

இளம் கன்றுகளைப் பயன்படுத்தும் போது அவை வளர்ச்சியடைய அதிக காலம் எடுத்துக் கொள்வதுடன், வாழைகள் வளமானதாகவும் இருப்பதில்லை. குறைந்தது 4 மாத வயதுடைய கன்றுகள் மற்றும் கிழங்குகளிலிருந்து (2 கி.கி. எடையுடையது.) வரும் வாழைகள், இந்த இளம் கன்றுகளிலிருந்து வருபவற்றை வி அதிக எடையுடைய குலையை ஈனுகின்றன.

கிழங்குகள்

இடைக்கன்றுகள் இல்லாத போது முழு அல்லது பகுதி கிழங்கினையும் பயன்படுத்தலாம். 2 கிலோ அல்லது அதற்கு அதிகமாக உள்ள கிழங்குகளை நாற்றங்காலில் முளைப்பதற்கு விடலாம் அல்லது நிலத்தில் நேரடியாக நடலாம். ரகத்தினை வேகமாக உற்பத்தி செய்ய கிழங்கு துண்டுகளை பயன்படுத்தலாம். இருப்பினும் பழங்கள் விடுவதற்கு இம்முறையில் சிறிது அதிக நாட்கள் ஆகும்.

மேலே செல்க

காட்டு இரக வாழை பழம்

விதை

  • காட்டு இரக வாழைகளில் சாதாரண மியாசிஸ் நிலையால் இரண்டு செல்கள் உருவாகி, இனப்பெருக்கம் மூலம் விதை உருவாகின்றது.

  • விதை உருவாவது அந்தந்த இனங்களின் முளைப்புத் திறன், விதை உறங்கு நிலையைப் பொறுத்து அமைகிறது.

  • என்செட்டி எனும் மியூசேஸியே தவிர மற்ற பேரினத்திற்கு, சந்ததி நிலைக்க விதைப்பெருக்கம் மட்டுமே ஒரே வழி. ஏனெனில், இதில் பக்கக் கன்றுகள் தோன்றுவதில்லை.

  • விதைகள் பழுப்பு முதல் கருப்பு நிறமாக இருக்கும். 2-6 செ.மீ விட்டத்துடன், உருண்டை (அ) முக்கோண வடிவில், அமுங்கியது போன்ற தோற்றத்துடன் காணப்படும்.

  • காட்டு இன வாழைகளின் பழங்கள் உண்பதற்கு ஏற்றவையல்ல. முழுவதும் விதைகளால் ஆன பழங்களில் சதைப்பகுதி குறைவாகவே இருக்கும்.

  • இந்தியாவில் பயிரிடப்படும் வாழைகள் அனைத்தும் கருச்சேர்க்கை நடைபெறாமலேயே கரு உருவாகும் முறையைச் சேர்ந்தவை. ஆதலால் இம்முறை பின்பற்றப்படுவது இல்லை.  

மேலே செல்க

முன்னுரை

தற்பொழுது நுண் பெருக்க நுட்ப முறை மூலம் வாழை பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. திசு வளர்ப்பு வாழை என்பது தாய் மரத்திலிருந்து திசுத் துண்டை எடுத்து வளர்ப்பு அறையில், நவீன திசு வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி, அதிக அளவில் செடிகளை உற்பத்தி செய்யும் முறையாகும்.

திசு வளர்ப்பு வாழையின் படிநிலைகள் :

  1. தாய் மரத்தை தேர்வு செய்தல்.

  2. தாய் நாற்றங்காலை விரிவுபடுத்துதல் மற்றும் பராமரித்தல்.

  3. திசு வளர்ப்பிற்காக சிறந்த கன்றுகளை தேர்வு செய்தல்.

  4. பெருக்க நிலையின் பல்வேறு நிலைகளில் வேண்டாத செடிகளை களைதல்.

  5. வேர் விடுதல், முதல் நிலை கடினமாக்குதல் மற்றும் களைதல்.

  6. இரண்டாம் நிலை கடினமாக்குதல் மற்றும் வேண்டாத செடிகளை களைதல்.

  7. திசு வளர்ப்பின் பல்வேறு நிலைகளில் வைரஸ் நோய் குறியிடுதல் மற்றும் மரபியல் வளத்தன்மையை ஆய்வு செய்தல்.

திசு வளர்ப்பின் வரையறைகள்

சிறந்த கன்றினை தேர்வு செய்தல்

  • முதலில், மிக நீளமான, தரமான தாரைக் கொண்டுள்ள மற்றும் வைரஸ் நோய்களற்ற தாய் மரத்தை தேர்நதெடுக்கவும்.

  • இதில் வாளிப்பான ஈட்டி இலைக்கன்றை தேர்வு செய்து, அதை கடப்பாறை அல்லது மண்வெட்டியால் தாய் மரத்திலிருந்து கவனமாக பிரித்தெடுக்கவேண்டும்.

  • பின்பு, இதன் கிழங்கிலிருந்து 15 செ.மீ.தூரம் வரையுள்ள தண்டுப்பகுதியை விட்டு விட்டு, மீதி தண்டுப்பகுதியை நீக்கிவிட வேண்டும். இப்படி சேகரித்த கிழங்குகள் அனைத்தையும், தண்ணீரில் நன்றாக கழுவிய பின்பு, சோப் தண்ணீரில் கழுவவேண்டும்.

  • இந்த கிழங்குகளை ஆய்வுக்கூடத்துக்கு கொண்டு சென்று, அங்கே கிழங்கின் மேற்தோல் மற்றும் வேர்களை கத்தி கொண்டு சீவி, பின்பு 0.05 சதவீதம் ஸ்ரெப்டோசைக்லின் கரைசலில் கிழங்களை மூடியுள்ள பல அடுக்கு இலை அடி உறைகளை நீக்கி, 2.5 முதல் 3.5 செ.மீ. நீளமுள்ள வளரும் திசுத்துண்டை எடுக்கவேண்டும்.

  • வளரும் திசுத்துண்டு, பழுப்பு நிறமாக மாறி கெடாமல் இருப்பதற்கு, இலை அடி உறைகளை மேற்கூறியவாறு நீக்கும் பொழுதே, கிழங்கனை அடிக்கடி அஸ்கார்பிக் அல்லது சிட்ரிக் அமிலக் கரைசலில் சில நிமிட நேரம் மூழ்க வைத்து எடுக்கவேண்டும். திசுத்துண்டை எடுத்த பின்பும், ஊடகத்தினுள் உட்செலுத்தும் வரை மேற்குறிப்பிட்டவாறு செய்யவேண்டும்.

  • ஆக்ஸின்கள் மற்றும் சைட்டோகைனின் போன்றவை வேர் விடவும், தண்டு வளர்ச்சிக்கும் உதவுகிறது.

  • பொதுவாக பயன்படுத்தப்படும் ஆக்ஸின்கள் ஐ.ஏ.ஏ., என்.ஏ.ஏ. மறறும் ஐ.பி.ஏ.. தண்டுக்கிளை வளர்ச்சிக்கு பி.ஏ.பி. என்ற சைட்டோகைனின் பயன்படுத்தப்படுகிறது. கார அமிலத் தன்மை 5.8 ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

  • திசு வளர்ப்பு அறையில் 24-26° செ. வெப்பநிலை இருக்குமாறு வைக்கவேண்டும். ஒளியின் அளவு 1500-3000 லக்ஸ் அளவு இருக்குமாறு பராமரிக்கவேண்டும்.

  • திசு வளர்ப்பு வாழை மண்ணிற்கு மாற்றும் போது அது உயிர் வாழ 3000-10000 லக்ஸ் அளவு அதிகமாக இருக்கவேண்டும்.

வளர் ஊடகத்தில் திசு உருவாக்கம்

  • ஆக்கத் திசுக்களை கொண்ட திசு தண்டுகள் 1-4 இலைகளை கொண்டு, 2-5 மி.மீ. உயரமும், விட்டமும் கொண்டிருக்கவேண்டும்.

  • இந்த மாதிரி ஆக்க திசுக்கள் தான் தண்டு பெருக்கமடைய உதவும் சிறந்த தொடக்கப் பொருளாகும்.

  • திசுத் தண்டுகளின் நுனியை வெட்டுவதால் பக்க மொட்டுக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். குறுக்குவெட்டாக வெட்டும் பொழுது, வளரும் நுனி மொட்டுக்களில் காயம் ஏற்படலாம்.

  • காயமாவதால் பினால்கள் அதிகளவு உற்பத்தியாகும். அதை கட்டுப்பாட்டில் வைக்க ஆக்ஸினேற்றத்திற்கு எதிரான பொருட்களை பயன்படுத்தவேண்டும்.

  •  கண்ணாடி குடுவைகள் கையாளவதற்கு எளிதாகவும், அதிக கொள்ளளவு கொண்டதாகவும், எளிதில் சுத்தம் செய்யவும் முடிகிறது.

  • ஒரு குடுவைக்கு 50 மி.லி. அளவு ஊடகத்தை செலுத்தி, பின் கட்டுப்பாட்டு அறையில் வைக்கவேண்டும்.  

வளர் ஊடகத்தில் திசு பெருக்கம் அடைதல்

 

  • திசு வளர்ப்பு அறையில் வைக்கப்பட்டு நான்கு வாரங்களுக்கு பிறகு, முதல் நிலை திசு வளர்ச்சி உருவாகும். இந்த சமயத்தில், திசுத் தண்டின் வளர்ச்சி இரட்டிப்பாகும். மேலேயுள்ள கருப்பு நிற மேற்பரப்பை சுரண்டி, கிழங்கின் அடிப்பகுதி 0.5 செ.மீ. தடிமனுக்கு குறைக்கப்படும்.

  • கிழங்கு திசுவின் அடிப்பகுதியின் தடிமனை குறைப்பதால், கருப்படைவதும் குறைகிறது. அதே சமயத்தில் ஆக்கத்திசுக்களின் வளர்ச்சியும் வெளிப்புறத்தில் வளர ஆரம்பிக்கும். நுனியில் உள்ள வளரும் தண்டுப் பகுதியை வெட்டவேண்டும். இதனால், பக்கத்திலுள்ள மொட்டுக்களும் வளர ஆரம்பிக்கும். முதல் நிலை திசு வளர்ப்பின் முடிவில், திசுத் தண்டுகள் 1-3 பக்க மொட்டுக்களை கொண்டிருக்கும். கருப்பு நிற மேற்பரப்பு சுரண்டப்பட்டு, முதல் நிலை திசு வளர்ப்பு தண்டை நேர்குத்தாக கிழங்கின் அடிப்பகுதி வரை வெட்டுவதால், நான்கு சமமான பகுதிகளை பெறலாம். இரண்டாவது திசு வளர்ப்பின் முடிவில், இந்த சுழற்சி நான்கு வார இடைவெளி விட்டு திரும்ப திரும்ப செய்வதால் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். 5-6 திசு வளர்ப்பு சுழற்சி முடிந்தவுடன், வளரும் மொட்டுக்களை புதிதாக தயாரிக்கப்பட்ட எம்.எஸ் ஊடகத்தினுள் உட்செலுத்தி, மீண்டும் சீதோஷ்ண கட்டுப்பாடு அறையில் வைக்கவேண்டும். இந்த முறைகள 5 முதல் 6 தடவை செய்யும் பொழுது, ஏராளமான தண்டுகளை ஒரு திசுத் தண்டிலிருந்து பெறலாம். ஒரு மாதம் கழித்து, வேர் விட்ட செடிகள் கடினப்படுத்த தயாரகின்றன.

கடினப்படுத்துதல்

  • திசுக்கன்றில் வேர் வளர்ச்சி ஏறபட்ட பின்பு, வேர், தண்டு மற்றும் இலைகள் நன்றாக வளர்ந்து உள்ள ஒவ்வொரு திசுக்கன்றுகளையும், வளர் கண்ணாடி குழாயிலிருந்து எடுத்து, பின்பு அகார் அகார் கடற்பாசியை வேரிலிருந்து நீக்குவதற்கு, தண்ணீரில் கழுவி பின், 0.1கார்பெண்டசிம் மருந்து கரைசலில் மூழ்க வைத்து எடுக்கவேண்டும். செம்மண், மணல் மற்றும் தொழு உரங்கள் கலந்த அல்லது மணல், செம்மண் மற்றும் மண்புழு உரம் முறையே 3:1:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை நிரப்பபட்ட 20 செ.மீ.x 15 செ.மீ. அளவுள்ள கருப்பு பாலீத்தீன் பையில் நடவு செய்யவேண்டும். இந்த பாலித்தீன் பையின் அடி மற்றும் பக்கவாட்டில் ஓட்டைகள் இடவேண்டும். இந்த ஓட்டைகள் தேவைக்கு அதிகமாக உள்ள தண்ணீரை பாலித்தீன் பையிலிருந்து வெளியேற்ற உதவி செய்கிறது.

  • இவ்வாறு நடவு செய்த பாலித்தீன் பைகளை காற்றின் ஈரப்பதம் 90க்கு மேல் உள்ள பனிப்படும் அறையில் வைத்து வளர்க்கவேண்டும. நாளாக நாளாக, இந்த ஈரப்பதத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தல்வேண்டும். பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை, வளர்கின்ற திசுக்கன்றிற்கு கொடுக்கவேண்டும. பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்த, வேப்பம் புண்ணாக்கு நீரையும், இந்த பாலித்தீன் பைகளில் ஊற்றலாம். (இதற்கு 5 பங்கு தண்ணீர் சேர்த்து, பினவு உபயோகிக்கவும்.) அவ்வப்பொழுது தேவைக்கேற்ப 00.1சதவீதம் எமிசான் மற்றும் 0.1 சதவீதம் கார்பெண்டசிம் ஆகிய மருந்து கரைசலை முறையே கிழங்கு அழுகல் நோய் மற்றும் இலை அழுகல் நோய் போன்றவற்றை தடுக்க பயன்படுத்தலாம். 1 அடி உயரமும், 5 முதல் 10 செ.மீ. தண்டு சுற்றளவும், 4 முதல் 5 இலைகளையும் உடைய திசுக்கன்றுகளை நடவிற்கு பயன்படுத்தலாம்.

  • இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் போது, முக்கியமாக சிலவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.

  1. வேர் உள்ள ஊடகம் 100 சதம் நோய்களற்று இருக்கவேண்டும்.

  2. தண்ணீர் பாய்ச்ச பயன்படும் நீர் கிருமி மற்றும் நூற்புழு இன்றி இருக்கவேண்டும்.

  3. 7 நாட்களுக்கு ஒரு முறை பயிற்சி பெற்ற ஆட்களை கொண்டு மாறுபட்ட கன்றுகளை அகற்றவேண்டும்.

  4. ஒவ்வாரு பிரிவு மரங்களிலிருந்தும மாதிரி எடுத்து, வைரஸ் குறியீடு செய்யவேண்டும். ( ஒவ்வொரு பிரிவிலும் 10 செடிகள்) இருக்கவேண்டும்.

  5. முதல் நிலை கடினப்படுத்திய கன்றுகளை மாற்றும் போது, இரண்டு நீள்வாட்டு வெட்டு தருவதால், கிழங்கு வளர்ச்சிடைய உதவி செய்யலாம்.

நாற்றங்காலில் உரமிடுதல் மற்றும் பயிர் பாதுகாப்பு
  • 2-3 வாரங்கள் வயதான கன்றுகளுக்கே உரமிடவேண்டும். ஒரு கன்றிற்கு 0.5 கிலோ யூரியா, 2 கிராம் சூப்பர் பாஸ்பேட், 1 கிராம் மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகியவற்றை 100 மில்லி தண்ணீரில் கலந்து இடலாம்.

  • மூன்று வாரங்களுக்கு பிறகு இந்த அளவை இருமடங்காக்கி தொடர்ந்து தரவேண்டும். ஆறாவது வாரத்தின் போது நுண்ணூட்டக் கலவையை தெளிப்பது நாற்றங்காலில் நோய் மற்றும் பூச்சி தொற்றினை தவிர்க்க சுகாதார முறைகளை தீவிரமாக பின்பற்றவேண்டும். கடினப்படுத்தும் போது ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களுக்கு தகுந்ந நேரத்தில் உரிய கவனம் செலுத்தவேண்டும்.

  • குறிப்பாக மண்ணின் நூற்புழுக்கள் மற்றும் வாழை முடிக்கொத்து வைரஸ் பரப்பும் அசுவுனி பூச்சிஆகியவற்றை நன்கு கவனிக்கவேண்டும். அதிகபட்சமாக 7 அல்லது அதற்கு குறைவான மறுவளர்ப்பு செய்வது மாறுபட்ட ரகங்களை குறைந்த அளவு வைக்க உதவும்.

சிறந்த திசு வளர்ப்பு கன்று என்பது
  1. நன்கு கடினப்படுத்தப்பட்ட கன்று 30 செ.மீ. உயரமுடையதாகவும், 45-60 நாட்கள் கடினப்படுத்தப்பட்ட பிறகு பொய்த்தண்டின் 5-6 செ.மீ. இருக்கவேண்டும்.

  2. கன்றில் 5 ஒளிச்சேர்க்கை வீரியமுள்ள இலைகள் மற்றும் உட்புற இலை இடைவெளி 5 செ.மீ. க்கு குறையாமல் இருக்கவேண்டும்.

  3. இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் போது கள்றில் சுமாராக 25-30 செயல்மிகு வேர்கள் இருக்கவேண்டும்.

  4. இந்த செயல்மிகு வேரின் நீளம் 15 செ.மீ. அதிகமாகவும், பக்கவாட்டு வேர்கள் அதிக எண்ணிக்கையிலும் இருக்கவேண்டும்.

  5. தொட்டிக் கலவையை முக்கால் பாகம் வரை பாலித்தீன் பையில் (அளவு 20 செ.மீ. நீளம், 16 செ.மீ. விட்டம்) நிரப்பவேண்டும்.

  6. உலர் எடை அடிப்படையில் தொட்டிக் கலவையின் எடை தோராயமாக 750- 800 கிராம் இருக்கவேண்டும்.

  7. கன்றுகள் இலைப்புள்ளி, தண்டு அழுகல், உடல் உருமாற்றம் போன்ற அறிகுறிகள் இன்றி இருக்கவேண்டும்.

  8. கன்றுகள் வேர்க் கிருமிகள், கிழங்கு அழுகல் நோய், நூற்புழு புள்ளிகள், வேர் முடிச்சு போன்றவை இன்றி இருக்கவேண்டும். கன்றுகளை வாங்கும் போது, நன்கு வேரினை பரிசோதித்து வாங்கவேண்டும்.

  9. ஒழுங்கற்ற வளர்ச்சி உள்ள கன்றுகளை அகற்றவேண்டும்.

இரண்டாம் நிலை கடினப்படுத்தலில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

எர்வினியா உச்சி அழுகல் நோய்

  • உலகின் வாழை பயிரிடப்படும் பகுதிகளில் இந்நோய் பரவலாக காணப்படுகிறது. இந்நோய்க்கான காரணி எர்வினியா கரடோவோரா (ஜோன்ஸ்) ஆகும். திசு வளர்ப்பின் இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் போது இந்நோய் காணப்படுகிறது.

  • தண்டின் கழுத்துப் பகுதி அழுகுவது இந்நோயின் பொதுவான அறிகுறி ஆகும். நோய் பாதித்த இலை வளைந்தவாறு தோன்றும், திடீரென்று காய்ந்து விடும். பாதித்த கன்றினை இழுக்கும் போது கழுத்துப் பகுதி மட்டும் முறிந்து விடும்.

  • கிழங்கும் வேரும் அப்படியே இருக்கும். நூற்புழு பாதித்த கன்றினை இழுக்கும் போது வேரும் கிழங்கும் வந்துவிடும். இது மென் அழுகல் நோயின் குறிப்பிடத்தக்க அறிகுறி ஆகும்.

  • நோயின் ஆரம்ப நிலையில் கரும் பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீர்த்த புள்ளிகள் தண்டின் மேற்பரப்பில் தோன்றும். 0.1 சதவீத எமிசன் அல்லது 2 சதவீத பிளிச்சிங் பவுடர் உள்ள கரைசலில் பாலித்தீன் பையை நனைப்பது நோயை கட்டுப்படுத்தும்.

ஒட்டுண்ணி நூற்புழுக்களின் தாக்கம்

 

  • ஒட்டுண்ணி நூற்புழுக்களான வேர் முடிச்சு நூற்புழு (மெலை டோசைன் இன்காக்னிடா), வேர் அழுகல் நூற்புழு (பிராட்டிலென்கஸ் காப்பியே), வேர் குடையும் நூற்புழு (ரேடோபோலஸ் கிமிலிஸ்) மற்றும் சுருள் வடிவ நூற்புழு (ஹெலிக்கோடைலன்கஸ் மல்டிசிங்டஸ்) ஆகியவை திசு வளர்ப்பு வாழையை எளிதில் தாக்கும்.

  • இந்த நூற்புழுக்கள் கன்றின் வேரினுள் மாசுபட்ட தண்ணீர் அல்லது திசு வளர்ப்பு கன்றினை கடினப்படுத்த பயன்படும் தொட்டிக் கலவை ஆகியவற்றின் மூலம் நுழைகிறது. பாதிக்கப்பட்ட கன்றின் இளம் வேர்கள் பலவீனமாவதுடன், வேர்கள் சேதமடைவதால் சத்துக்களையும் உறிஞ்ச முடிவதில்லை.

  • வேர் முடிச்சு புழுக்கள் முதல் நிலை, இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் போது அதிகமாக காணப்படுகின்றன. வேர் அழுகல் மற்றும் வேர் குடையும் நூற்புழு தொற்று இருக்கும் போது வேரினை நீளவாக்கில் வெட்டினால் மேற்பரப்பில் செம்பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். நூற்புழு தொற்று இல்லாத மண், தண்ணீர், தொட்டிக் கலவையை பயன்படுத்தவேண்டும்.

  • புகை மூட்டப்பட்ட தொட்டிக் கலவையை இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் போது பயன்படுத்தவேண்டும். 2-3 கிராம் கார்போபியூரானை கன்றிற்கு இரண்டாம் நிலை கடினப்படுத்திலின் போது அளிப்பது ஊடுறுவும் நூற்புழுவிற்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும். வேர் உட்பூசணம், வேப்பம் பிண்ணாக்கு பயன்படுத்துவது கன்றின் வீரியம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மாறுபட்ட வகை உருவாவதற்கான காரணிகள்
  1. மாறுபட்ட வகை வளர்ச்சியின் எந்த கட்டத்திலும் வரலாம்.

  2. பக்கவாட்டு அரும்புகளை தூண்டுவதன மூலமும் வரலாம்.

  3. வளர்ச்சி சீராக்கிகள் திடீர் மாற்றத்தை நேரடியாக தூண்டுவதில்லை. ( அது மறைமுக விளைவை ஏற்படுத்துகிறது).

  4. மாறுபட்ட கன்றுகளை அகற்றுவதற்கு என்றே முறைகள் உள்ளன.

  5. கேவண்டிஷ் ரகங்களை புறத்தோற்றத்தை வைத்தே கண்டறியலாம்

  6. மூலக்கூறு குறிப்பான்களைப் பயன்படுத்தலாம்.

திசு வளர்ப்புக் கூடம்

கட்டமைப்பு

ஆய்வுக்கூட வசதிகள்

  1. கழுவும் அறை

  2. ஊடகம் தயாரிக்கும் அறை

  3. உட்புகுத்தும் அறை

  4. வளர்ப்பு அறை

கடினப்படுத்தும் வசதிகள்

  1. இடமாற்றும் அறை

  2. பசுமைக் கூடம் / நிழல் பகுதி

  3. நாற்றங்கால்

தரக்கட்டுப்பாடு

  1. மூல வகையை தேர்வு செய்தல்

  2. வளர்ப்பு ஊடகத்தில் வைக்கப்படும் செடியின் பாகம்

  3. வைரஸ் குறியிடுதல்.

  4. வளர்ச்சி பெருக்க சுழற்சியின் எண்ணிக்கை.

  5. கன்றுகளின் ஒட்டுமொத்த தரம்

தொழில் நுட்ப மேற்பார்வையிடுதல்

  1. உற்பத்தி செய்யும் முறை மற்றும் ஆட்களை மேற்பார்வையிடுதல்.

  2. தயாரிப்பு மேற்பார்வை ஊழியர்களின் தொழில்நுட்ப திறமையை கண்காணித்தல்.

  3. இயக்குபவர்கள்.

நன்மைகள்
  1. வேகமாகவும், மிக அதிக அளவிலும் உற்பத்தி செய்து விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

  2. திசு வளர்ப்பு மூலம் பெறப்படும் கன்றும் மரபுத்தன்மை மற்றும் புறத்தோற்ற தன்மையிலும் ஒன்று போல உள்ளன.

  3. கன்றுகள் அதிக மகசூல் தருகின்றன. ஏனெனில் அதிக மகசூல் தரும் தாய் மரத்திலிருந்து மூல வகைகள் தேர்வு செய்யப்படுகின்றன. எனவே அம்மரத்தின் கன்றுகளும் அதிக எடையுள்ள சீரான குலை தருபவையாகவும் ஒத்த முதிர்ச்சி தன்மை உடையனவாகவும் இருக்கும்.

  4. மண்ணில் இருந்து தாக்கக்கூடிய பூஞ்சாணங்கள், நூற்புழுக்கள் மற்றும் நச்சுயிரி நோய்கள் ஆகியவை இல்லாத திசு வளர்ப்பு கன்றுகளை, விவசாயிகளுக்கு கொடுக்க முடியும். ஆனால், திசு வளர்ப்பு கன்றுகளை உற்பத்தி செய்யம் போது கவனம் இல்லையென்றால், அனைத்து திசுக்கன்றுகளும், நோய் மற்றும் நூற்புழுக்களினால் தாக்கப்பட்டிருக்கும்.

  5. வழக்கமாக பயன்படுத்தப்படும் பக்கக்கன்றுகளை காட்டிலும் விலை மலிவாகவும், தொலை தூரங்களுக்கு எடுத்து செல்ல எளிதாகவும் உள்ளன.

  6. பக்கக் கன்றுகளை போல் அல்லாது, திசு வளர்ப்பு கன்றுகள் வருடத்தின் எந்த நேரத்திலும், எந்த வேளாண் பகுதிகளிலும் உற்பத்தி செய்யலாம்.

  7. திசு வாழைக்கன்றுகள், சொட்டுநீர் பாசனம் மற்றும் சொட்டு நீர் உரப்பாசன முறையில் அதிக மகசூலைத் தருகின்றன.

  8. ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் வரை வயது குறைவதால், அதாவது விரைவில் திசு வளர்ப்பு வாழை அறுவடைக்கு வந்துவிடுவதால், நிலம் அடுத்த பயிருக்கு விரைவில் தயாராகிறது. இதனால், மற்ற இடுபொருட்களின் செலவும் குறைகிறது.  

குறைபாடுகள்
  1. திசு வளர்ப்பு வாழை முறையில் மிக அதிக செலவாகும்.

  2. சில கன்றுகளை பூஞ்சாண் தாக்குதலற்று வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று.

  3. சில ரகங்களில் மாறுபட்ட கன்றுகள் அதிக எண்ணிக்கையில் தோன்றுவதை குறைக்க இயலுவதில்லை.

  4. உட்புறம் தோன்றும் பாக்டீரியா அல்லது பாக்டீரியா போன்ற மாசுக்கள் தரும் குறிப்பிடத்தக்க அளவு இழப்பை, வளர்க்கும் போது அல்லது பிறகும் கட்டுப்படுத்த இயலுவதில்லை.

மேலே செல்க

முக்கியத்துவம்

  • நோயுற்ற தோட்டங்களில் வாழைக் கன்றுகளை நீக்கிவிட்டு மறுநடவு செய்யவும், புதிய இரகத்தை உருவாக்கவும் இந்த முறை அதிகளவில் கன்றுகளை பெருக்கம் செய்கிறது.

  • ஆரோக்கியமான தாய் மரத்திலிருந்து பக்கக் கன்றுகளை தேர்வு செய்திருந்தால் இந்த முறையிலும் ஆரோக்கியமான கன்றுகளை அதிகம் பெறலாம்.

  • குறைந்த செலவில் தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்ய உதவும் இது ஒரு சிறந்த முறையாகும்.

  • அதிக செலவு இல்லாமலும், அதிக பயிற்சி இல்லாமலும் இந்த பயிர்ப் பெருக்கத்தை செய்யலாம்.

  • இது பயிர் எப்படி ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்ற விழிப்புணர்வை தருகிறது.

  • இம்முறையில் 4-5 மாதங்களுக்குள் ஒரு பக்கக் கன்றிலிருந்து 50-60 குருத்துக்களை உருவாக்கி விடலாம். இது இரு வழிகளில் செய்யப்படுகிறது. ஒன்று வயல் வெளிகளில், மற்றொன்று நாற்றங்காலில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் பெருக்கம் செய்யப்படுகிறது.

  • இவ்வினப் பெருக்க முறையில் நுனி நீக்குதல், தோல் நீக்குதல் மற்றும் கடினப்படுத்துதல் என மூன்று நிலைகள் உள்ளன.  

நுனித் தண்டை நீக்குதல்
  • 4-6 மாத வயதுடைய பக்கக் கன்றினை எடுத்து அதன் தண்டினைத் தனியே வெட்டி அதில் பக்க மொட்டுக்களை உருவாக்க குறுக்காக வெட்டி விடவேண்டும்

  • இம்முறையில் குறுகிய காலத்தில் ஒரு கன்றிலிருந்து 9-15 சீரான குருத்துகள் கிடைப்பதால் குறு மற்றும் சிறு நில விவசாயிகளுக்கு இம்முறை மிகவும் ஏற்றது. நமக்கு வேண்டிய ரகத்தின் கன்றுகளை உமித்துகள் படுகை அல்லது பெரிய அடிப்பகுதியற்ற கான்கிரீட்டால் ஆன பானைகளைப் பயன்படுத்தி நாற்றங்கால் அமைக்கலாம்.

  • இம்முறைக்கு எடுத்துக் கொள்ளும் பக்கக் கன்றுகள் வயலில் பூச்சித் தாக்குதல் அற்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்பட்டதாகவும், நோய் மற்றும் நச்சுத் தாக்குதல் அற்றதென சான்றிதழ் வழங்கப்படுவதும் அவசியம்.

வளர் திசுவை பக்கக் கன்றிலிருந்து எடுத்தல்

தேர்ந்தெடுக்கப்படும் தாய்க் கிழங்கு/ஈட்டிக் கன்றின் கழுத்துப் பகுதியிலிருந்து 2 செ.மீ. குறுக்காக வெட்டி நுனி ஆக்க திசு எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுத்தபின் 2 செ.மீ. விட்டமும் 4 செ.மீ. ஆழமும் கொண்ட குழிப்பகுதி காணப்படும். இவ்வாறு நுனி நீக்குதல் மற்றும் தோல் நீக்குவதால் பல பக்க மொட்டுகள் உருவாக்கப்படும். பொதுவாக இம்முறையில் பூ பூத்த கிழங்குகள் பூப்பருவமெய்தாத கிழங்குகளை விட நல்ல உற்பத்தி கொடுக்கின்றன. எனவே அறுவடை செய்யப்பட்ட, ஆரோக்கியமாக உள்ள தாய் மரங்களைக் கூட பேரினப் பெருக்கத்திற்கு வயல் வெளிகளிலோ அல்லது ஆய்வுக் கூடத்திற்கு எடுத்து வந்தோ பயன்படுத்தலாம்.

வயல்வெளி சூழ்நிலையில் பேரினப் பெருக்கம்

இம்முறையில் நுனி நீக்கப்பட் கன்றுகளில் பக்க மொட்டு வளர்ச்சியைத் தூண்ட 40 பி.பி.எம். கலவையின் 4 மி.லி. டி.ஏ.பி. கரைசலை குழிகளில் ஊற்றவும். இக்குழிகளை சம அளவு மணல் கலந்த பசளை மண் மற்றும் கோழிக் குப்பை கலவையைக் கொண்டு தரையிலிருந்து 5 செ.மீ. உயரம் வரை அடைக்கவும். இவ்வாறு இராசயனக் கலவையின் மூலம் பக்கக் கன்று வளர்ச்சியைத் தூண்டுதல் முதல் வாழையிலிருந்து மூன்றாம் தாம்பு (தலை முறை) வாழை வரை செய்யலாம். குறுகிய காலத்தில் இம்முறையில் 40-50 குருத்துக்களை உருவாக்கலாம். தாய்க் கிழங்கிலிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகளை இடைக்கலப்பு முறையில் மலட்டுத்தன்மையுள்ள மண் ஊடகத்தில் வைத்து வளர்க்கப்படுகிறது.

இரண்டாம் நிலை தண்டு நீக்குதல்

Development of multiple shoots

முதல் தண்டு உரித்து 30-35 நாட்களுக்கு பிறகு, ரகத்தினை பொறுத்து தாய் கிழங்கிலிருந்து 3-4 அரும்புகள் வெளிவரும். பக்கவாட்டு தண்டு 3-4 இலைகளுடன் கூடிய 15-20 செ.மீ. தடிமனாகும் போது, ஒரு கூரிய மத்தி கொண்டு 3-4 குறுக்காக வெட்டப்பட்டு இரண்டாம் கட்ட தண்டு உரிக்கப்படுகிறது. இது பல தண்டுகள் உற்பத்தியாவதை ஊக்குவிக்கிறது. மூன்றாம் கட்ட தண்டு உரிப்பது 20-25 நாட்களுக்கு பிறகு அதிக கவனத்துடன் செய்யப்படுகிறது. ஏனெனில் அரும்புகள் அருகருகே இருக்கும். எனவே 140-150 நாட்களுக்குள் மொத்தம் 50-60 இலைகள் ஒரு கிழங்கிலிருந்து தோன்றும்.

கடினப்படுத்துதல்

கடினப்படுத்துதல்

கடினப்படுத்துதல்

கடினப்படுத்துதல்

 

பக்கவாட்டு முளைப்பு 8-10 செ.மீ. நீளமானவுடன், அவை சம அளவு கோகோ தாவர மட்கு மற்றும் வெர்மிகுலைட் உள்ள குழித் தட்டுக்கு மாற்றப்பட்டு, போதுமான அளவு தண்ணீர் விட்ட பின்பு 70 சதம் நிழல் உள்ள, 80-90 சதம் ஈரப்பதம் உள்ள நிழல் கூடத்தில் வைக்கப்படுகிறது. அதிக ஈரப்பதம் விட்டு விட்டு தண்ணீர் தெளிப்பதன் மூலம் பெறப்படுகிறது. முளைப்புகள் பொதுவாக குழித்தட்டில் 15-20 நாட்கள் வரை வைக்கப்பட்டு பின்பு மாற்றப்படுகிறது. இந்த நிலையில் கன்றுகள் 50 சதவீத நிழலில் , 40-50 சதவீத ஈரப்பதத்தில் பராமரிக்கப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடப்படுகிறது. 30-40 நாட்களில் கன்றுகள் நிலத்தில் நட தயாராக இருக்கும்.

கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் பேரினப் பெருக்கம்

ஈட்டிக் கன்றுகளின் கிழங்குப் பகுதியைச் சுற்றிச் சீவி விடவேண்டும். கூரான கத்தி கொண்டு வளர் பகுதிகளை செதுக்கிவிடவேண்டும். பின்பு கிழங்குகளை கிருமிகள் நீக்கம் செய்ய 0.3 சதம் பெவிஸ்டின் கலவையில் 15 நிமிடம் ஊற வைத்தப் பின் 24 மணி நேரம் உலர்த்தி வளர்ப்பு ஊடகத்தில் நடவும். பொதுவாக நெல் உமி அல்லது மரத்தூள் ஆரம்ப ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதிகளவில் மரத்தூள் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. இந்த ஆரம்ப ஊடகமானது பயிருக்கு நல்ல வேர்ப் பிடிப்பு, ஈரப்பதம் மற்றும் நல்ல காற்றோட்டத்தைக் கொடுக்கிறது. ஊடகமாக பயன்படுத்தும் முன்பு மரத்தூள் ஈரப்படுத்தப்பட்டு 2-3 வாரங்களுக்கு நன்கு மட்க வைக்கப்படுவதால், பயிர் வளர்ச்சியின் போது நன்கு மட்குதல், தூள் சிதறுதல் போன்ற பிரச்சனைகள் எழுவதில்லை. மேலும் இதனுடன் கிருமி நீக்கம் செய்யப்பட்ட மண்புழு உரம், உயிர் உரங்கள், வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களை ஐ.பி.ஏ. (2500 பி.பி.எம்.) கலந்து பயன்படுத்தலாம். 200 கராம் வேம் (VAM) / அஸோஸ்பைரில்லம் 10 கி.கி. மண்புழு உரத்துடன் கலக்கப்பட்ட விகிதத்தில் கிழங்கு ஒன்றிற்கு 500 கராம் ஊடகம் தேவைப்படும். இம்முறையில் சூடோமோனஸ்/ அஸ்பெர்ஜில்லஸ் போன்ற நுண்ணயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் இவை பக்க மொட்டுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும், ஐ.பி.ஏ. உருவான கன்றுகளில் வேர் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றது.

மேலே செல்க