Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

வேளாண் மருந்தகம்

தொடக்கம்

அரசாங்கத்தின் மூலம் தேசிய வேளாண்மை கொள்கையானது தெரிவிக்கப்படும் அதன் பின் முதன்மை அறிவியல்களான உயர் தொழில்நுட்பம், முந்திய மற்றும் பிந்திய அறுவடைத் தொழில் நுட்பங்கள், போதுமான மற்றும் சரியான நேரத்தில் தரமான உள்ளீட்டு பொருட்களான விதைகள், உரங்கம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், உயிர் பூச்சிக்கொல்லிகள் ம்றறும் பாதுகாப்பு பொருட்கள் போன்றவற்றையும் மற்றும் வேளாண்மை இயந்திரம் வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்புகளின் வலிமை மற்றும் பரந்த வரிவாக்க அமைப்பிற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து இந்த கொள்கையின் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

வேளாண்மை தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பரவச் செய்வது மற்றும், ICAR, தேசிய வேளாண்மை தொழில்நுட்பத் திட்டமானது உலக வங்கியுடன் இணைந்து மாதிரி விவசாய முறையினைப் பற்றி ஆராய்ச்சியை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் வரிவாக்கப் பணியானது வேலையாட்கள் மற்றும் கருவிகளின் பற்றாக்குறையாலும், பயிற்சி மற்றும் பயணத்திட்டத்தின் பயன்பாடு மற்றும் திறனின் சரிவாலும் மற்றும் தொழில் நுட்பங்களின் பற்றாக்குறையும் பாதிக்கப்படுகிறது.

9வது ஐந்து ஆண்டுத் திட்டத்தின் மூலம் அலுவலர்களின் தகுதி மற்றும் திறனை உயர்த்துவதன் மூலம், அவர்கள் வேளாண்மையின் உலக மயமாக்குதல் மற்றம் வர்த்தக மயமாக்குதலில் ஏற்படுத் சவால்களை எதிர்த்து நிற்கின்றனர். அரசாய்ச விரிவாக்கத் திட்டத்தின் மூலம் வேளாண் நுட்பம் இது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு  வெளியிருப்பு பொருட்கள் / மூலப்பொருட்களை வாங்குவது மற்றும் அதன் பணி மிகவும் முக்கியமானது. விவசாயிகள் இப்பொழுது பொது மக்கள் பகுதி முகாமை பொருத்துள்ளனர் மற்றும் இவர்கள் தேவையான பணியை (மனதிருப்தி அளிக்கும் பணி) விட குறைவாகவே பெறுகின்றனர்.

சுதந்திர பலம் கழகமானது, 11 கட்டுப்பர்ட கொண்ட கல்வியை இளநிலை வேளாண் பட்டப்படிப்பில் வேளாண், கால்நடை அறிவியல், தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்த்தல், வனவியல், மீன்வளர்ப்பு, பால் பண்ணை தொழில்நுட்பம், வேளாண்மை பொறியியல், வேளாண்மை வியாபாரம், உணவுத் தொழில்நுட்பம் மற்றும் மனை அறிவியல் போன்ற தலைப்புகளில் புகுத்துகிறது. தேசிய வேளாண் பல்கலைக்கழகத்தில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,000 மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் சேர்கின்றனர். அனைத்துப் பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் மற்ற கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 17,000 வேளாண் பட்டதாரிகள் பட்டம் பெறுகின்றனர். பொது அல்லது தனியார் பகுதிகளில் உள்ள வேளாண்மை சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புக்களில் சுமார் 7000 மற்றும் 8000 பட்டதாரிகள் மட்டுமே வேலைவாய்ப்பினை பெறுகின்றனர்.

மிக அதிகமான பட்டதாரிகள் புதிய மற்றும் தோன்றிய வேளாண்மை பகுதிகளில் உள்ளனர். இதனை எதிர்நோக்கு யாதெனில் விவசாயிகளுக்கு பல்வேறு பணிகளை வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்கள் அரசாங்க மற்றும் பொது பகுதி முகாம்களின் முயற்சிகள் மூலம் இக்கட்டான இடைவெளிகளை திர்த்து வைக்கிறது. அதாவது சுமார் 10,000 இளம் பட்டதாரிக்ள மற்றும் மற்ற பட்டதாரிகள் ஏற்கெனவே வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தங்களுடைள தொழிலை விவசாயிகளுக்கு சேவை அளிக்கும்படி அமைக்கின்றன.

ஆனால் வாய்ப்புகள் கிடைக்கும் போது வேளாண் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களில் ஈடுபடுகின்றனர்.
இதன் மூலம் தெரிவது யாதெனில் வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்களை உருவாக்குவதற்கு உதவுகிறது. வேளாண்மை பட்டதாரிகளின் பணிகளையும் மற்றும் திறன்களையும் முழுவதுமாக பயன்படுத்துவதன் மூலம் வேளாண் மற்றும் மற்ற வேளாண் செயல்பாட்டில்  முன்னேறி அரசாங்கத்தின் முயற்சிகளை பூர்த்தி செய்கிறது மற்றும் SPS இந்திய வேளாண் மதிப்பீட்டை வளர்க்கிறது.

இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சரவையானது நபார்டு உடன் இணைந்து  நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் செய்கையை பற்றிய நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் அரசாங்கமானது வேளாண்மை மற்றும் மற்ற வேளாண்மைப் பாடங்களான தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை அறிவியல், வனவியல், பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன் பண்ணை போன்ற பட்டதாரிகளும் பயிற்சி அளிக்கிறது. பயிற்சி காலம  ்முடிந்த பின் பட்டதாரிகள் புதிய தொழிலை நடத்துவதற்கு சிறப்புக் கடனைப் பெற விண்ணப்பிக்கலாம்.

குறிக்கோள்கள்

  • அரசாங்க விரிவாக்கத் திட்டத்தின் முயற்சிகளை வலுவாக்குதல்
  • வலுவான ஆதாரமான மூலப்பொருட்களின் வினியோகம் மற்றும் அதன் பணி தேவைப்படும் விவசாயிகளுக்கு கிடைக்குமாறு செய்தல்.
  • வளர்ந்து வரும் வேளாண்மை பகுதியில் வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை அளித்தல்.

வரையறை

வெளாண் மருந்தகமானது வல்லுநர்களின் பணிகள் மற்றும் ஆலோசனைகளான பயிர் வளர்ப்பு பயிற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, பூச்சிகள் மற்றும் நோய்களில் இருந்து பயிர் பாதுகாப்பு, வியாபார போக்கு, வெவ்வேறு பயிர்களின் சந்தை விலை மற்றும் மருந்தக பணியான விலங்குகள் ஆரோக்கியம் மற்றும் பல போன்றவற்றினைப் பற்றி விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலம் பயிர்கள் / விலங்குகளின் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது.

வேளாண் வணிக மையம் கொடுக்கும் சேவைகள் மூலம் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருவாய் ஆனது அதிகரிக்கப்படுகிறது. இந்த மையமானது விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பின் மதிப்பினை உயர்த்துதல், சில வேளாண்மை தகவல் (இதனுடன் இணையதளத்தில் காலநிலையை அறிதல்), விலைப் போக்கு, சந்தைச் செய்தி, ஆபத்தினை குறைத்தும் மற்றும் பயிர்க் காப்பீடு, கடன் மற்றும் வருவாய் நிலை இக்கட்டான சுகாதார மற்றும் பயிர் சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டும், மேலும் விவசாயிகளின் எண்ணத்தில் உள்ளவைகளுக்கு ஆலோசனைத் தருகிறது.

துணிகரச் செயல்களின் பட்டியல்

  • மண் மற்றும் நீரின் தன்மை மற்றும் உள்ளிருப்பு மூலப் பொருட்களின் சோதனை ஆய்வுக்கூடங்க்ள உடன் அணு உட்கிரகிக்கும் ஸ்ப்ட்ரோபோட்டோ மீட்டர்.
  • வேளாண்மை இயந்திரம் மற்றும் பயன்படுத்தும் கருவிகளை பாதுகாப்பது பழுது பார்ப்பது மற்றும் வழக்கமாக வாடகைக்கு எடுப்பது, இதனுடன் நுண்ணிய நீர்ப்பாசனம் திட்டமும் அடங்கும் (தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம்).
  • மேலே கூறப்பட்ட மூன்று செயல்களை உள்ளடக்கிய வேளாண் சேவை மையங்கள்.
  • விதைச் செயலகம்
  • தாவர திசு வளர்ப்பு கூடம் மற்றும் கடினப்பபடுத்துதல் பகுதிகள் மூலம் நுண் பயிர்ப்பெருக்கம்.
  • மண்புழு உரம் பகுதி, உயிர் உரங்கள் உற்பத்தி உயிர் பூச்சிக்கொல்லி உற்பத்தி, உயிர் கட்டுப்பாட்டு பொருட்கள் போன்றவை தயார் செய்தல்.
  • தேனீ வளர்ப்பு, தேனீ மற்றும் தேனீ செயலகம் அமைத்தல்
  • விரிவாக்க ஆலோசனை பணி வசதி
  • வேளாண்மைக்கு காப்பீட்டு சேவைக்கான உதவி மற்றும் பணிமனை
  • இனப்பெருக்கம் மற்றும் மீன் குஞ்சுகளைக் கொண்ட மீன் உற்பத்தி பண்ணை.
  • வளர்ப்புப் பிராணிகளின் ஆரோக்கிய வசதி, கால்நடை மருந்தகம் அமைத்தல் இதனுடன் உறைந்த விந்தணு வங்கி மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம்.
  • கிராமங்களில் தகவல் தொழில்நுட்பம் சிறு துறையினை அமைப்பதன் மூலம் வெவ்வேறு வேளாண் வலைதளத்தினை அணுகுதல்.
  • உணவு பதப்படுத்துதல் மற்றும் சோதனை பகுதி
  • மதிப்பு கூட்டு மையம்
  • விளைநிலம் மட்டத்திலிருந்து குளிர் சங்கிலியை அமைத்தல்
  • ஒழுங்குபடுத்துதல், தரம் பிரித்தல், மதிப்பீடுதல், சேமிப்பு மற்றும தொகுப்பு போன்றவற்றின் உள்ளடக்கிய பிந்திய அறுவடை மேலாண்மை மையம்.
  • உலோகம் மற்றும் உலோகமற்ற சேமிப்பு கட்டமைப்பினை அமைத்தல்
  • சில்லறை வர்த்தகத்தில் வேளாண்மை பொருட்களின் கிளைகள்.
  • ஊரக / கிராம் சந்தையின் வியாபார நோக்கமான விளை நிலத்தின் உள்ளீடு மற்றும்  வெளியீடு.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான செயல்கள் மற்றும் ஏதாவது பொருளதாதாரச் செயல்களை பட்டாாரிகள் தேர்ந்தெடுத்து இணைக்கும் பொழுது வங்கியானது ஏற்றுக்கொள்கிறது.

மண், நீரின் தன்மை மற்றம் உள்ளீட்டுப் பொருட்களின் சோதனை ஆய்வுக்கூடம் சேவை மையங்கள்
இதன் குறிக்கோள் யாதெனில் சரியான செலவில் மண் பரிசோதனை, பாசன தரத்தின் பரிசோதனை, சில உள்ளீட்டு பொருட்களில் சோதனை நடத்தி சரியான உரத்தை  பரிந்துரைத்தல் மற்றும் வளம் மேலாண்மை, பொருத்தமான உயிர் உரங்களை ஏற்பாடு செய்தல், மண் பண்படுத்துதல் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப இடங்கள் போன்றவற்றிற்கு வழிகாட்டுதல், தொழில் நுட்பப் பகுதியின் மண் வளம் வளர்ச்சி பற்றிய விவசாயிகளுக்கு பயிற்சி / செய்முறை விளக்கம் / கல்வி கற்பிப்பது போன்றவற்றினை விளக்குகிறது. (உள்ளீட்டு மூலப்பொருட்களின் பயன், கலப்பு உரம் உற்பத்தியின் மேம்பாடு).

பயிர் பாதுகாப்பு சேவை மையம்

இதன் குறிக்கோள் யாதெனில் விவசாயிகளுக்கு பூச்சிகள் மற்றும் நோய்கள் , நூற்புழுக்கள் மற்றும்  களைகள் போன்றவற்றினைக் கட்டுப்படுத்தப்படுவது பற்றி நியாயமான செலவில் வழிகாட்டி மற்றும் ஆலோசனைகளை தருகிறது. மேலும் அறிவுறுத்தலின் படி தவறாமல் பார்க்கச் செல்லுதல், விசாரணை நடத்தித் தேவைகளுக்கு ஏற்ப பதில் கொடுத்தல், சொந்த கருவி மற்றும் உள்ளீட்டு மூலப் பொருட்களின் செயல்பணிகளின் கட்டுப்பாடு பற்றி நியாயமான கட்டணத்தில் விவசாயிகளிடம் விதையிலிருந்து அறுவடை வரைக்கும் பயிர் பாதுகாப்பு பணிக்கு உதவுவது போன்றவற்றினை இந்த மையமானது செய்து தருகிறது.

மண்புழு உரம் பிரிவு

இதன் குறிக்கோள் யாதெனில் விருப்பப்பட்ட இரகங்களில் மூலப்பொருட்களை கொடுப்பது மற்றும் விவசாயிகளக்கு பயிற்சி அளிப்பது மற்றும் தொழில் தொடங்கியவர் / முனைவோர்கள் மூலம் உற்பத்தி பற்றி செய்முறை விளக்கங்களை அளிப்பது மற்றும் மண்புழு உரம் பிரிவினை நடைமுறைப்படுத்துவது பற்றிய செயல்கூறுகளை அளிப்பதாகும்.

தோட்டக்கலை மருந்தகம்

தொழில்நுட்பம் பற்றிய வழிகாட்டுதலுக்கு முன்னேற்பாடு செய்வது, ஒரு கூரையில் பழ உற்பத்தியாளர் தரம் பிரித்தல் மற்றம தொகுத்தலுக்கான உதவியை வழக்கமான வாடகையில் செய்வது, கிராமத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு அவர்களின் கிராமத்திலே வேலைவாய்ப்பினை உருவாக்குதல், தோட்டக்கலை மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்குமாறு செய்வது மற்றம் பழ உற்பத்தியாளர்களின் உற்பத்திளை உயர்த்துவதள்கான தொழில்நுட்ப விரிவாக்க சேவைகள் போன்றவை முக்கிய குறிக்கோள் ஆகும்.

வேளாண் சேவை மையம் - பண்ணை இயந்திர சாதனங்கள்

காளை மாடுகள் அல்லது மற்ற பண்ணை இயந்திரச் சாதனங்கள் இல்லாத விவசாயிகளுக்கு இந்தச் சேவை மையமானது வாடகைக்கு கொடுப்பதன் மூலம் விளை நிலத்தினை மேம்படுத்துவது, ஒரே இடத்தில் பண்ணை இயந்திர சாதனங்கள் வழக்கமாக வாடகைக்கு கிடைக்குமாறு செய்வது, விவாசாயிகளின் சொந்த இயந்திர சாதனங்களை பழுது பார்ப்பது மற்றும் பாதுகாப்பது போன்றவை இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
வேளாண் சேவை மையம் - பண்ணை இயந்திரச் சாதனம் மற்றும் முதன்மைச் செயல்பாடு
விவசாயிகளுக்குத் தேவைப்படும் சாதனங்களை வழக்கமான வாடகையில் கொடுப்பது. சரியான நேரத்தில் வேளாண்மை செயல்பாடுகளை செய்வதனை அதிகரிப்பது, இந்திய வேளாண்மையின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது அறுவடைக்கப் பிந்திய செயல்பாடுகளின் வசதிகளை அதிகரிப்பது மற்றும் விவசாயிகளுக்கு லாபகரமாக மாற்றுவது போன்றவை இவற்றின் முக்கியக் குறிக்கோள் ஆகும்.

தனியார் கால்நடை மருந்தகத்துடன் சிறிய பால் பண்ணைப் பிரிவு

இதன் குறிக்கோள் யாதெனில், விவசாயிகள் சிறந்த தரமுடைய கால்நடைகளை வளர்ப்பது மற்றும் அவற்றினை நோய்களில் இருந்து பாதுகாப்பது மற்றும் ஆரோக்கியம் குன்றிய / நோயுற்ற மற்றும் இறப்பு வீதத்தினை குறைப்பது, அதிக இனப்பெருக்கம் செய்யக்கூடிய கால்நடைகளின் பரம்பரைத் தனத்தை அதிகரிப்பது போன்றவை ஆகும்.

தனியார் செயற்கை கருத்தரிப்பு மையம்

விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று கால்நடைகளின் கருத்தரிப்பினை அதிகரிக்க செய்வதே இதன் குறிக்கோள் ஆகும்.

  • வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையத்தின் பண்டு முகாம்கள்
  • பயிற்சி அமைப்புகளை அறிந்து கொள்ளும் பட்டியல்
  • வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள

வேளாண் மருந்தகம் (Agri Clinic) மற்றும் வேளாண் வணிக (Agri Business) மையங்கள் (AC&ABC)

பயிற்சி அமைப்பகளை அறிந்து கொள்ளும் பட்டியல்

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு