அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த பனியாரம்

      தேவையான பொருட்கள்

அரிசி 80 கி
பனங்கிழங்கு மாவு   20 கி
உளுந்து 10 கி
வெந்தயம் 2 கி
வெங்காயம் 15 கி
பச்சை மிளகாய் 4 கி
சீரகம் 2 கி
கருவேப்பிலை 2 கி
எண்ணெய் 10 மிலி
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை :

  • அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனியாக 4 மணி நேரம் ஊரவைத்து தண்ணீரை வடித்துவிட்டு நயமாக அரைத்துக் கொள்ளவும்.

  • உப்பு சேர்த்து ஓர் இரவு முழுவதும் புளிக்கவிடவும்.

  • இத்துடன் பனங்கிழங்கு மாவை சேர்த்து கொள்ளவும்.

  • நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  • பனியார குழியில் எண்ணை ஊற்றி சூடானதும் பனியார மாவு ஊற்றவும்.

  • இருபுறமும் வெந்தவுடன் சட்னியுடன் பரிமாரவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015