பாரம்பரிய வேளாண்மை :: பஞ்சாங்கம்

ஆராய்ச்சிகள்/ஆய்வுகள்
வேளாண் வானிலையியல் துறை

இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, ஞானிகளால் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவுடன் வழங்குவதே பஞ்சாங்கம். இந்த அறிவானது, அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதை வழி நடப்பவர்களுக்கு பொதுவாக்கப்பட்டு, பரப்பப்பட்டது தற்சமயம் பஞ்சாங்கமானது, சோதிடர்களால் வடிவமைக்கப்படுகிறது. பஞ்சாங்கம் என்ற வார்த்தையானது சமஸ்கிருத வார்த்தைகளான ‘பஞ்ச்’ (ஐந்து) மற்றும் ‘ஆங்’ (உடல்) என்றதிலிருந்து உருவாக்கப்பட்டது. நாள் மற்றும் மாதங்கள் காலண்டர் அடங்கியது பஞ்சாங்கம். பல்வேறு வகையான கோள்களின் நிலைகளால், இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு, அவை, மனித செயல்களில் மாறுதல்களை உருவாக்குகிறது.
அதன் அடிப்படையில், வாரந்திர அடிப்டையில் மழையளவு அளவானது கணக்கிடப்பட்டது. ஆண்டு வாரியாகவும், மாத வாரியாகவும் மழையளவு கணக்கிடப்பட்டது. வசந்தகாலம் 33.77% கோடைக்காலம் 21.6% மழைக்காலம் 57.33% என அறியப்பட்டது. பஞ்சாங்கத்தைக் கொண்டு மழையளவு கணக்கிடுதல் எப்போதும் அளவு உயர்ந்ததாகவே அமைந்துள்ளது. அதன்படி, மேம்பாட்டு பணிகளுக்கு, பஞ்சாங்கத்தின் உபயோகம் அதிகமாகவே உள்ளது.

தமிழ்நாட்டு வேளாண் பல்கலைக்கழகம்:
விவசாயிகள் காலநிலை பற்றிய பராம்பரிய அறிவு மற்றும் நம்பிக்கைகள், எப்போதும் மிகவும் சரியானதாகவே வானிலை முன்னறிவிப்பில் உள்ளது. பஞ்சாங்கம் ஒரு மதிப்பு மிக்க, வானிலை முன்னறிவிப்பு தகவல்களை தருகிறது. மேலும் அநேக விவசாயிகள் நம்பிக்கையும் வைத்துள்ளனர். பூமத்திய ரேகையிலிருந்து சூரியனின் இருப்பிடத்தையும் பூமியை சுற்றி வரும் சந்திரனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. அறிவியல் பூர்வமான, தொடர்புகளை மேல்நோக்கு நாள் மற்றும் கீழ்நோக்கு நாள் அனைத்திலும், அனைத்து மாதங்களிலும் மழையானது கிடைக்கப்பெற்றது ஆனால் பிப்பரவரி மற்றும் மார்ச் மாத மேல்நோக்கு நாள் மழை கிடைக்கவில்லை. மேலும் ஏப்ரல்,மே,ஜ¤ன் மற்றும் அக்டோபர் மாதங்களில் கீழ்நோக்கு நாளில் அதிக அளவு மழையும், அதே மாதங்களில் மேல்நோக்கு நாளில் குறைந்த அளவு மழையே கிடைக்கப்பெற்றது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014