பாரம்பரிய வேளாண்மை :: பஞ்சாங்கம்
 moon
சந்திரன் - சூரியன் எதிர் எதிரான நிலையில்
பூமி, சந்திரன் மற்றும் சூரியன் இவை மூன்றும் 29.5 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர் கோட்டில் வரும். அதாவது சந்திரனும் சூரியன் ஒன்றுக்கொன்று எதிரான திசையில், பூமி நடுவிலும் வரும் அப்படிப்பட்ட நாட்களில், பயிரான சந்திரன் மற்றும் சூரியனின் பிடியிலேயே இருந்து, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறனை பெறும். மேலும் அந்நாட்களில், விதைப்பு, நடவு, ஒட்டு கட்டுதல், பதியம் இடுதல், தெளிப்பு, உரம் இடுதல், அறுவடை செய்தல் மற்றும் கவாத்து வெட்டுதல் போன்றவைகளை செய்யலாம்.

சந்திரனின் நிலைகள்

பெளர்ணமி
இது 29.5 நாட்களுக்கு ஒரு முறை வரும். அந்த நாட்களில் சந்திரனானது, சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை முழுவதுமாக பிரகாசிக்கும். அச்சமயம் விதைப்பு - குளிர் காலத்தில் செய்ய  விதை நன்கு முளைக்கும், தெளிப்பு - உரத்தெளிப்பு, பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லி தெளிப்புகளை செய்யலாம்.


அமாவாசை:
இது 29.5 நாட்களுக்கு ஒரு முறை வரும். அச்சமயம், நாம் சந்திரனை பார்க்க முடியாது. ஏனெனில் சந்திரனின் இருண்ட பகுதியே  பூமியைநோக்கி இருக்கும். அந்த சமயத்தில் விதை விதைப்பு கோடைகாலத்தில் செய்தால் நல்ல முளைப்புத்திறனுடன் வலிப்பான வளர்ச்சி கிடைக்கும், நாற்று நடவுச்செய்தல், மண்ணில் தொழுஉரம், பிண்ணாக்கு மற்றும் மண்புழு உரம் இடுதல், கவாத்து செய்தல் மற்றும் வேர் பகுதியை (root cups) அறுவடை செய்யலாம்.

சந்திரன் வளர் பருவம்
சந்திரனானது வானத்தில் உயரமான இடத்திலும் அதிக நேரமும் இருக்கும். உதயமாகும் சந்திரன் கிழக்கிலிருந்து நகர்ந்து வடகிழக்குமாக 13 - 14 நாட்கள் வரை இருக்கும் சமயமே சந்திரன் வளர்பிறைநாள். அச்சமயம் விதை விதைப்பு, தெளிப்பு (உரம், பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள்) அறுவடை செய்யலாம்.

சந்திரன் தேய் பருவம்:
வானில் சந்திரனானது கீழாகவும், குறைந்த நேரத்திற்கு மட்டுமே தெரியும். அச்சமயம் சந்திரனானது வடகிழக்கு திசையிலிருந்து தென்கிழக்காக  13 - 14 நாட்கள் நகரும் அச்சமயம் நாற்று நடவு செய்தல், நடவு துண்டுகளை நடவு செய்தல், கவாத்து செய்தல், அறுவடை செய்தல் (பயன்தரும் வேர் செடிகள்) தொழு உரம் தயாரித்தல் மட்டும் இடுதல், தெளிப்பு, உரத்தெளிப்பு, உரம் தயாரிக்க கொம்புகளை புதைத்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.

முடிச்சு நாள்
நிலநடுக்கோட்டு பகுதியில், சந்திரனானது, சூரியனின் பாதையை கடக்கும் போது எந்த விவசாய வேலையையும் செய்யக்கூடாது.

அப்போஜி
சந்திரன் பூமியைச் சுற்றி வரும் நீள்வட்ட பாதையில், பூமியிலிருந்து தொலைவில் இருக்கும்போது, அமாவாசை அன்று செய்யக்கூடிய எல்லா விவசாய வேலைகளையும் செய்யலாம். அச்சமயம் உருளைக் கிழங்கு நடவு செய்ய மிகவும் ஏற்றது.

பொரிஜி
பூமியைச் சுற்றி வரும் நீள் வட்ட பாதையில், சந்திரனானது, பூமிக்கு அருகில் வரும் அந்த நாள்களே அச்சமயம் பெளர்ணமி அன்று செய்யக்கூடிய வேலைகளை செய்யலாம்.

விதை/பழநாள்
சந்திரனானது தன் சுற்றுப்பாதையில் ‘நெருப்பு’ போன்ற பொருட்களில் தாக்குதல் விளைவினால், பூமியின் மீது முழுவதுமாக தன் பெற்றதை பிரதிபலிக்கிறது. அச்சமயம் விதை மற்றும் பழம் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் அந்த நாட்களில் விதை மற்றும் பழம் உற்பத்திக்கான விதைப்பு மற்றும் நடவுகளைச் செய்யலாம்.

வேர்நாள்:
சந்திரனின் சுற்றுப்பாதையின் பூமியின் பாதிப்பு அதிகமாக நாட்களே இவை. இவை பூமியின் மீது முழுவதுமாக பிரதிபலிக்கிறது. இந்த நாட்கள், எந்த தாவரத்தின் வேர்பகுதி உருவாகவும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனவே அந்த நாள்கள் விதைப்பு மற்றும் நடவுக்களை வேர் பயனுள்ள தாவரங்களைச் செய்யலாம்.

பூநாள்:
சந்திரனின் சுற்றுப்பாதையில் காற்று அல்லது ஒளியின் தாக்குதல் காணப்படும். அவை பூமியின் மேலே முழுவதுமாக பிரதிபலிக்கிறது. இவை, எந்த செடியின் பூ உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது. அப்போது, பூ பயன்தரும் செடிகளை விதைப்பு அல்லது நடவுச் செய்யலாம்.

இலைநாள்:
சந்திரனின் சுற்றுப்பாதையில் நீரின் தாக்குதல் காணப்பட்டு, அவை பூமியின் மேலே முழுவதுமாக பிரதிபலிக்கப்படுகிறது. அந்நாட்களில், இலைப்பகுதியான உருவாகவும் வளரவும் உதவுகிறது. எனவே, அந்த நாள்களில், இலை பயன்தரும் செடிகளை விதைப்போ அல்லது நடவோ செய்யலாம்.

சூரியனின் சுற்றுப்பாதை
சூரியனின் சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தாக்குதலினால், குறிப்பிட்ட பகுதிகள் செடிகளில் வளர உதவுகிறது.

சரியான நேரத்தில் பயிரில் செய்யக்கூடியவை:

  1. அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம்.
  2. பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற தரைக்கு கீழே பயன்தரக்கூடிய இரு பருவப் பயிரை நடலாம்.
  3. சந்திரன் முதல் கால் பாகத்தில், தரைக்கு மேலே பலன் தரக்கூடிய,  இலைச் செடிகளையும், பழத்திற்கு வெளியே விதை தரக்கூடிய செடிகளான, அஸ்பராகஸ் ப்ரோகோலி, முட்டைகோசு, காலிப்பிளவர், மக்காச்சோளம், லிட்டுஸ், வெங்காயம் மற்றும் கீரை வகைகளை நடலாம்.
  4. சந்திரன் இரண்டாம் கால் வளாகத்தில் இருக்கும் போது ஒரு பருவத் தாவரமான  தரைக்கு மேல் பலன் தரக்கூடிய கொடி வகைகளையும், பழத்தின் உள்விதை இருக்கும் செடிகளான பீன்ஸ், கத்திரி, பட்டாணி, மிளகு, தக்காளி மற்றும் தர்பூசணி போன்ற செடிகளை நடலாம்.
  5. சந்திரன் மூன்றாம் கால் பாகத்தில் இருக்கும் போது இரு பருவச் செடிகள், பல்லாண்டு தாவரங்கள், தண்டு மற்றும் வேர் பலன்தரக்கூடிய தாவரங்கள் போன்ற, பீட்åட், பூண்டு, கேரட், வெங்காயம் விதை, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பெரிஸ், டர்னிப், கோதுமை மற்றும திராட்சை போன்ற செடிகளைப் பயிரிடலாம்.
  6. சந்திரனின் நான்காம் கால் பாகத்தில், எதுவும் நடவு செய்ய கூடாது, அச்சமயம் களை எடுப்பு, பூச்சிக் கட்டுப்பாடு போன்ற விவசாய வேலைகளைச் செய்யலாம்.

http://vegetablegardens.suite101.com/article.cfm/vegetable_gardening_by_the_moon

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014