நன்னெறி ஆய்வக முறைகள் ::ஆய்வுக்கூட  இடையூறுகள்


ஆய்வுக்கூட  இடையூறுகள்

  • இரசாயனங்களின் மூலம் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் ஏற்படலாம். வெளிப்புற காயங்கள் என்றால் அது தோலில் சொறி அரிப்பு போன்ற பாதிப்பை இந்த இரசாயணங்கள் ஏற்படுத்தும் (அமிலம் காரம் எதிர்வினை உப்பு).

  • கவனக்குறைவாக உள்ள ஊற்று மற்றும் தண்ணீர் மற்றும் கருவியின் அரிப்பை முடிந்தவரை பாதுகாக்க வேண்டும்

  • உட்புற காயங்கள் என்பது இரசாயனங்கள் தெரியாமல் மேலே பட்டால் அதனை உடல் உறிஞ்சிக் கொள்ளும் பின் நச்சுப்பண்பு அல்லது அரிப்புத் தன்மையை ஏற்படுத்தும்

  • கரிமமற்ற அமிலங்கள் மற்றம் காரங்களில் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு எல்லை உள்ளது. புகையினால் கண் எரிச்சல் அல்லது சேதம் ஏற்படும், தோல் சேதாரம் மற்றம் மூச்சுத் தினறல் பிரச்சனையும் உண்டாக்கும்.

  • சூடான அமிலங்கள் தோலின் மேல் உடனடியாக செயல்படத்துவங்கும். அமிலங்களையும், காரங்களையும் தனியாக நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். ஆவியாகக்கூடிய கரிமம் மற்றும் ஆக்சிஜனேற்றம் அடையக்கூடிய பொருள்களிடம் இருந்து தள்ளி வைத்து சேமிக்க வேண்டும்

  • தெளிப்பை கட்டுப்படுத்த மெதுவாக திடமான அமிலத்தையும், காரத்தையும் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். தோலில் பட்டிருந்தால் உடனடியாக மாசுபட்ட இடத்தை தண்ணீரில் நன்றாகக் கழுவவும். கழுவிய பின் மருந்துகளை போடவும்.

  • பெர்குளோரிக் அமிலத்தை கரிம பொருட்களுடன் சேர்த்தால் கொடுமையான வெடிக்கக்கூடிய அளவிற்கு மாறும்

  • கரிம வினைபொருளுடன் பெர்குளோரிக் அமிலத்தை உபயோகப்படுத்தக் கூடாது. குறிப்பாக கரையும் கரைப்பான் ஒரு பகை முடியுடன்

  • சோடியம் ஹட்ராக்சைடு மற்றும் மற்ற இரசாயனங்கள் மிகுதியான சூட்டை உருவாக்கி உருக்கினால் அது எரியக்கூடிய தன்மை உடையது.

  • உசோகங்கள் (உள்ளியம், நிக்கல், பாதரசம்) அதிகமான நச்சுப் பண்பு உடையது மற்றும் புற்றுநோய்யையும் உண்டாக்கும் தன்மை உடையது. உள்வாங்குவது, உண்ணுதல் மற்றும் தோலின் தொடர்பை தவிர்க்கவும்.

  • அனைத்துக் கரிம கரைப்பான்களும் இடையூருகள் ஏற்படுத்தக்கூடியவை. இதில் ஒரு சில கரிம கரைப்பான்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. இதனை அதிக எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும்.

  • பிப்பட்டை வாயில் வைத்து உறிஞ்சுவதை தவிர்க்கவும். தானியங்களின் பிப்பட்டை உபயோகிப்பது நல்லது

  • மின் ஆற்றலுக்குரிய பொருள்களும், எரிவாயு கலன்களிடம் இருந்து பொருளியல்புசார் இடரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்

  • ஹைட்ரோப்ளூரிக் அமிலத்தை கண்ணாடிக் கருவியில் பயன்படுத்தக்கூடாது

  • கண்ணாடிக் கருவியை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாகப் பயன்படுத்தவும், ஏன்னென்றால் சூடான கண்ணாடிக் கருவியும் பார்ப்பதற்கு குளிர்ந்த கண்ணாடிக் கருவி போல் தென்படும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013