| பயிர் பாதுகாப்பு  :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
     
        
          
            
              இலைச்சேர்க்கும் புழு: நோசினோ ஜீயாமிட்ராலிஸ்  
                சேதத்தின் அறிகுறிகள்  
              
                - புழுக்கள்,      இலைகளையும், கிளைகளையும் ஒன்றாக      பிணைத்துவிடும்.
 
                - பிணைக்கப்பட்ட      இலைகளை அரித்துத் தின்பதால் அவை சல்லடைபோல் ஆகியிருக்கும். 
 
               
              பூச்சியின் விபரம்  
              
                - புழு :      பச்சையாகவும், மெல்லிய மயர்கற்றைகளுடனும்,      மார்புப் பகுதியில் கருப்புக் கோடுகளுடனும் இருக்கும்.
 
                - அந்துப்பூச்சி      : இளம் பழுப்பு இறக்கையில்      வெள்ளைப்புள்ளிகளுடன் இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறைகள்  
              
                - தாக்கப்பட்ட      மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும். 
 
                - விளக்குப்பொறி      அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். 
 
                - வேப்பங்கொட்டை      வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
 
                - 1 லிட்டர் தண்ணீரில்      2 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
 
                - செடிகளை சீரான      கவாத்து செய்து, தோட்டத்தை      சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
 
               
              | 
            
              | 
           
         
         
 |