பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைச்சேர்க்கும் புழு: நோசினோ ஜீயாமிட்ராலிஸ் 
சேதத்தின் அறிகுறிகள்

  • புழுக்கள், இலைகளையும், கிளைகளையும் ஒன்றாக பிணைத்துவிடும்.
  • பிணைக்கப்பட்ட இலைகளை அரித்துத் தின்பதால் அவை சல்லடைபோல் ஆகியிருக்கும்.

பூச்சியின் விபரம்

  • புழு : பச்சையாகவும், மெல்லிய மயர்கற்றைகளுடனும், மார்புப் பகுதியில் கருப்புக் கோடுகளுடனும் இருக்கும்.
  • அந்துப்பூச்சி : இளம் பழுப்பு இறக்கையில் வெள்ளைப்புள்ளிகளுடன் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
  • விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
  • 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
  • செடிகளை சீரான கவாத்து செய்து, தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015