| பயிர் பாதுகாப்பு  :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            பிணைக்கும் புழு: எலாஸ்மோபால்பஸ் ஜாஸ்மினோஃபேகஸ்  
                சேதத்தின் அறிகுறிகள்
                  - புழு பூ மொக்குகளைத் துளைத்து சேதப்படுத்தும்.
 
                  - இளந்துளிர்களும்,       பூ       மொக்குகளும் சேர்ந்து பின்னப்பட்டிருக்கும்.
 
                  - மேலும் புழுக்களின் கழிவுப்பொருள்களும் அவற்றின் மேல்       இருக்கும்.
 
                 
               
              
              
               பூச்சியின் விபரம்
                
                  - புழு : பச்சை நிறமாகவும், சிவப்புத் தலையுடன் உடலின் பக்கவாட்டில் பழுப்பு நிறக்கோடுகளுடன் இருக்கும்.
 
                - அந்துப்பூச்சி : சிறியதாகவும், சாம்பல் நிறத்துடனும் இருக்கும்.
 
               
               
            
              கட்டுப்படுத்தும் முறைகள்
                
                  - தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து       அழிக்கவும்.
 
                  - விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து       அழிக்கலாம்.
 
                  - வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
 
                  - 1 லிட்டர்       தண்ணீரில் 2 மிலி       மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
 
                  - செடிகளை சீரான கவாத்து செய்து, தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
 
                 
  | 
              
                
             
  | 
           
         
         
 |