தேயிலைக் கொழுந்து பறிக்கும் கத்திரி வகை கருவி  
              செயல்பாடு: தேயிலை இலைகள் பறித்தலுக்கு உதவுகிறது.  
              சுருக்கமான  விளக்கம்  
              தேயிலை பறிக்கும் போது விரல்களில் தோல் விட்டு மற்றும்  காயங்கள்   ரசாயனம் காரணமாக ஏற்படலாம்  இக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கத்திரி வகை தேயிலைக்  கொழுந்து பறிக்கும் கருவி பயன்படுத்த்துவதால்   கை / விரல் தொடர்பு குறைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்படும் தோல் பிரச்சினை  தவிர்க்கப்படுகிறது.  
  கொள்ளளவு: 8.6 கிலோ / மணி 
  நன்மைகள்  
              
                - பொருளாதார நன்மை: ரூ. 1000  / அலகு / ஆண்டு
 
                - வெளியீடு கை பறிக்கும் வழக்கமான முறையை ஒப்பிடும் போது 40% அதிகமாக உள்ளது.
 
                - மொத்த செலவில் தேநீர் இலைகள் பறிக்கும் செலவு வழக்கமான முறையை காட்டிலும்  குறைக்கப்படுகிறது. 
 
                - முடிவில் சேமிப்பில்  32% மற்றும் நேரத்தில் 40% வரை வழக்கமாக கையால் பறிக்கும் முறையுடன்   ஒப்பிடும் பொது சேமிக்கப்படுகிறது.
 
               
              விலை: ரூ. 450 /  - 
                உருவாக்கப்பட்டது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 
                கிடைக்கக்கூடிய  ஆதாரம்  
                பண்ணை  இயந்திர துறை, 
                விவசாய  பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,  
                தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழகம்,  
            கோயம்புத்தூர்  - 641 003.  |