மகளிர்  மட்டி சேகரிப்பவர் (உயிர் ஊட்ட செயலி):  
        
          - திருமதி நவீதம் காஞ்சிபுர  மாவட்டத்தைச் சேர்ந்த கோவலத்தைச் சேர்ந்தவர். இவர் மட்டி சேகரித்து மட்டிகளைச்  சந்தைப் படுத்துதலை முக்கியத் தொழிலாகச் செய்கின்றார். 
 
          - உணவகங்களுக்கும்  பொரிப்பகங்களுக்கும் மட்டிகளை கொண்டு செல்கின்றார் 
 
          - உணவகங்கள் மற்றும்  பொரிப்பகங்களிடமிருந்து மட்டிகளுக்கான தேவை ஏற்பட்டால் இவர்கள் மட்டிகளைச்  சேகரிக்க செல்வர். 
 
          - காலை ஆறு மணி முதல் மதியம் மூன்று  மணி வரை இந்தத் தொழிலில் ஈடுபடுவர் 
 
          - மட்டிகளைச் சேகரிக்கச்  செல்லும்பொழுது மிக மெல்லிய ஆடைகளை உடுத்தி உணவு உண்ணாமல் உவர்நீருக்கு செல்வர் 
 
         
        மட்டி சேகரித்தலில் பெண்களின்  ஈடுபாடு:   
        
          - மட்டி சேகரிப்பதற்கு வெவ்வேறு  இடங்களுக்கு செல்கின்றனர். இடங்களைக் கண்டு கொண்டபிறகு வேறு இடங்களுக்கும் செல்வர் 
 
          - திருமதி நவநீதம் மற்றும் அவர்களது  குழுவினர் வரிசையாக உவர்நீர் கால்வாய்கள் அல்லது ஓடைகளுக்கு செல்வர் 
 
          - நீச்சல் தெரிந்ததால் மேலோட்டமான  பகுதிகளுக்கு நீந்தி மட்டிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிவர் 
 
          - கரைக்கு வந்த பிறகு உணவை உண்பார்கள்  சில சமையங்களில் வாந்தி வரும் என்பதனால் உணவை உட்கொள்ளாமல் வெறும் வயிற்றுடன்  நீந்துவர் 
 
          - கூர்மையான கடற்காய் கிளிஞ்சல்கள்  பொதுவாக காலில் காயத்தை ஏற்படுத்தும் 
 
          - காயங்களைப் பொருட்படுத்தாமல்  இவர்கள் வேலை செய்வர் 
 
          - உணவகங்களுக்கும்  பொரிப்பகங்களுக்கும் மட்டிகளைக் கொண்டு செல்வதற்கு மோட்டார் பைக்குளில் ஒரு  நாளைக்கு அறுபது கிலோ மீட்டர் செல்வர் 
 
          - திருமதி நவநீதம், கிராமத்தில்  வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறார் 
 
          - கிராமப்புர கடலோர பெண்களின்  முன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து போராடுகின்றார் 
 
          |