Seed Certification
சூரியகாந்தி
நிலத்தேர்வு
  • விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
  1. விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து (வயலைச் சுற்றி) 200 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
நிலத்தேர்வு

பயிர் இடைவெளி
  • 45×30 செ.மீ.
விதைப்பிற்கு முன் விதை நேர்த்தி
  1. விதைகளை சமஅளவு தண்ணீரில் (1:1) 16 மணி நேரம் ஊற வைத்து ஒரு கிலோவிற்கு 2.5 கிராம் என்ற அளவில் பின் திரம் கொண்டு விதை நேர்த்தி  செய்த விதைப்பதால் வயலில் முளைப்புத் திறன் அதிகரிப்பதுடன், செடி நன்கு தழைத்து வளரும்.
  2. விதைகளை 2 சதவிகிதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 16 மணி நேரம் ஊற வைத்து (ஒரு பங்கு விதைக்கு 1 பங்கு கரைசல்) பின் பாலிமர் பூச்சு (ஒரு கிலோவிற்கு 3 கிராம்) கொடுத்து மற்றும் கார்பென்டசிம் (ஒரு கிலோவிற்கு 2 கிராம்) இமிடாகுளோபிரிட் ( ஒரு கிலோவிற்கு 5 மிலி) மற்றும் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஜ் கொண்டு (ஒரு கிலோவிற்கு 10 கிராம்) விதை நேர்த்தி செய்தல்.
  3. விதைகளை சம அளவு 2 சதவிகிதம் பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைத்து பின் உலர்த்தி விதைத்தல் வேண்டும்.
பயிர் இடைவெளி

உரமிடுதல்
  • தழை, மணி, சாம்பல் சத்தை ஒரு ஹெக்டேருக்கு 60:45:45 கிலோ அளிவல் அடியுரமாக இட வேண்டும்
இவைழி உரம் தெளித்தல்:
  1. விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து (வயலைச் சுற்றி) 200 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
உரமிடுதல்
வயல்வெளி தோற்றம் சூரியகாந்தி மலர் விதை முற்றிய நிலை

செயற்கை  மகரந்த சேர்க்கை

  1. மலர்கள் மலர்ந்த நாட்களில் (7- 10 நாட்கள்) மஸ்லின் துணிகளை கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மகரந்த தூள்கள் நன்கு ஒட்டும் வண்ணம் மலர்களை ஒன்றுடன் ஒன்று தேய்க்க வேண்டும்.

அறுவடை

  • தலாமஸ் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும்  போது அறுவடை செய்ய வேண்டும்.
  • இந்த நிலையில், விதைகள் கருமை நிறமாக மாறி ஈரப்பதம் 25 சதத்தில் இருக்கும்.
  • அறுவடை செய்தபின்,  விதைகளை உடனடியாக 15- 16%  ஈரப்பததிற்கு உலர்த்த வேண்டும்.

விதைச் சுத்திகரிப்பு

  • நல்ல தரமான, விதைகளைப் பெறுவதற்கு 3/64”(.6 மி.மீ) வட்ட கண் அளவு கொண்ட சல்லடைக் கொண்டு சலித்தல் வேண்டும்.
  • ஒப்பு அடர்த்தி பிரிப்பானை பயன்படுத்தியும் விதை சுத்திகரிப்பு செய்யலாம்
  • உடைந்த விதைகளை அகற்ற வேண்டும்

விதை நேர்த்தி

  • காய்ந்த விதைகளை கார்பென்டசிம் மருந்தினை (2 கிராம்/ ஒரு கிலோ விதை) கார்பரில் ( 200 மி.லி/ ஒரு கிலோ விதை) மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைச் சேமிப்பு

  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 6 முதல் 7 சதமாகக் குறைத்து பின் பாலித்தீன் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய /இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதையின் ஈரப்பதத்தினை 7 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால ( 15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்காக சேமித்து வைக்கலாம்

தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

Update On: April, 2016

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam