விதைகளை நேர்த்தி செய்யவேண்டிய நிலைமைகள் 
        காயமடைந்த விதைகள் 
      
        
          - விதையுறையில் ஏற்படக்கூடிய       விரிசல் முதலியவை பூஞ்சாண் தாக்குதல் ஏற்படவும் அவற்ிறல் இருந்து முளைக்கும்       நாற்றை தாக்கியும் சேதம் விளைவிக்கிறது. கதிரடித்தல் மற்றும் விதை       சேமித்தல்  போன்ற செயல்பாடுகளாலும்       விதைகள் காயமடைய வாய்ப்புண்டு. சுற்றுப்புறச் சூழல் தாக்குதல் மற்றும் தவறான       சேமிப்பு முறைகள் போன்றவையும் விதைகளை காயப்படுத்துகின்றன.
 
         
     
      நோயுற்ற விதைகள் 
      
        
          - அறுவையின் போது ஏற்படும்       நோய்க் கிருமி தாக்குதல் (அ) சுத்திகரிப்பின் போது ஏற்படும் தொற்றுதல் (அ)       சுத்திகரிப்பு சாதனங்கள் மூலம் பரவும் கிருமிகள் (அ) கிருமி தாக்கியுள்ள       கிடங்குகள், கொள்கலன்கள், போன்றவற்றில் சேமித்தல் ஆகியவை விதைகளில்       நோயினைப் பரப்புகின்றது.
 
         
     
      சாதகமில்லாத மண்ணின் தன்மைகள் 
      
        
          - விதைகள் சில சமயம் சாதகமில்லாத       மண் தன்மைகளான, குளிர்ந்த மற்றும் ஈரமான மண் (அ) மிகவும் வறண்ட மண்       போன்றவற்றில் விதைக்கப்படும். அச்சமயம் சில பூஞ்சாண் வித்துக்களின்       வளர்ச்சிக்கு இவ்வகை மண்ணின் தன்மைகள் சாதகமாக இருப்பதால் அவை விதைகளைத்       தாக்கி சேதப்படுத்துகின்றன.
 
         
     
      நோயற்ற விதைகள் 
      
        
          - விதைகள் குறைந்த பட்ச சேதம்       முதல் பலத்த சேதம் விளைவிக்கக்கூடிய கிருமிகளால் தாக்கப்படுகின்றன. விதை       நேர்த்தி செய்வது நோய்களிடமிருந்து பாதுகாத்தும், மண் மூலம் பரவும்       கிருமிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தியும், நலிந்த விதைகளை முளைக்கச்       செய்யவும் பயன்படுகிறது.
 
         
       
      விதை நேர்த்தியின் போது தேவையான  முன்னெச்சரிக்கை 
         
  விதை  நேர்த்தி முறைகள் மனிதர்கள் மற்றும் விதைகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை  ஆகும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயவாக  பயன்படுத்தக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். இதைத் தடுப்பதற்காக,  நேர்த்தி செய்யப்பட்ட விதைகளின் மேல், இதனை உட்கொண்டால் ஆபத்தானது என்ற விவரச்  சீட்டை பொருத்தவேண்டும். விற்கப்படாத நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உண்ணும்  உந்துதலைத்  தடுக்க விற்பதற்குத் தேவையான  அளவ விதைகளையே நேர்த்தி செய்யவேண்டும். 
நேர்த்தி  செய்யப் பயன்படுத்தும் முறைகளில் சரியான அளவு உபயோகிப்பதில் கவனம் தேவை. ஏனெனில்  அதிகமாகவோ / குறைவாகவோ உபயோகிக்கும் அளவு, நேர்த்தி செய்யாத விதைகளில் ஏற்படும்  பாதிப்பை விட அதிகமாகும். அதிக ஈரப்பதம் உள்ள விதைகளை திடமான திரவ இராசயனங்களில்  நேர்த்தி செய்யும் போது விதைகள் பாதிப்பிற்கு அதிக வாய்ப்புள்ளது. 
      நுண்ணுயிர்  கலவைகளில் விதைகளை நேர்த்தி செய்யும் போது கீழ்க்கண்ட முறையில் செய்ய வேண்டும். 
      
        
          - இராசயன நேர்த்தி
 
          - பூச்சிக்கொல்லி மற்றும்       பூஞ்சாணக் கொல்லி நேர்த்தி
 
          - சிறப்பு விதை நேர்த்தி
 
         
        |