தரமான  தக்காளி விதை உற்பத்தி முறைகள் 
      விதை  உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு 
          
  தக்காளி பெரும்பாலும் தன் மகரந்தச்சேர்க்கையுடைய  காய்கறிப் பயிராகும். பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரக வயல்களிலிருந்து  குறைந்தது 25 மீட்டர் தூரம் தனிமைப்பட்டிருக்கவேண்டும். இவ்வாறு செய்வதால்  அறுவடைக்காலங்களில் ஒரு இரகம் மற்றொரு இரகத்துடன் கலந்துவிடாமல் விதைகளின்  பாரம்பரியத் தூய்மையை நாம் பாதுகாக்க முடியும். 
      J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன? 
                 
  வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து  முளைக்கும் பயிர்களே தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ  பயிர்களில் இருந்து கீழே விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து  வளரக்கூடியவை என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 
      விதை  உற்பத்திக்கு ஏற்ற பருவம் 
          
  “பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி.  விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு  ஏற்ப அமைகிறது. தக்காளி எல்லா பருவங்களிலும் சாகுபடி செய்தலும், விதை உற்பத்திக்கு  ஏற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பதுதான் மிக அவசியம். விதை எடுப்பதற்கான பயிர் அறுவடைகளை  முடித்து விதைகளைப் பிரித்து நன்கு உலர வைக்க ஏதுவான உலர்ந்த சூழ்நிலை இருத்தல்  அவசியம். விதை உற்பத்தி செய்வதற்கு சிறந்த பருவம் ஜீன்- செப்டம்பர் மற்றும்  டிசம்பர் - மார்ச் மாதங்கள் ஆகும். அப்பருவங்களில் விதைகளை பிரித்தெடுத்த பின்  உலர்த்துவதற்கு ஏற்று சூழ்நிலைகள் அமைகின்றன. 
      வளமான  நாற்றுக்களைப் பெறும் வழிமுறைகள் 
          
  “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற பழமொழிக்கு  ஏற்ற நல்ல தரமான விதைகளைதத் தேர்ந்தெடுப்பதுடன் அவ்விதைகளை நல்ல வீரியமுள்ள  நாற்றுக்களை நடுவதால் அந்நாற்றுக்கள் நன்றாக தழைத்து பூச்சி மற்றும் நோய்களின்  தாக்குதல்களை எதிர்த்து வளர உதவுகிறது. அத்துடன் நாற்றுக்கள் நடவு வயல்களில்  அடியுரமாக இடப்பட்ட உரங்களை வெகுவாக பயன்படுத்தி வளர உதவுகின்றன. நாற்றுக்களை வீரியத்துடன்  நடுவது நடவு வயல் பராமரிப்பில் அதிக நாற்றுக்கள் வீணாகாமல் தழைக்க ஏதுவாகிறது.  அதனால், நாற்றுக்களை வீரியத்துடன் வளரச் செய்ய நாற்றாங்கால் பராமரிப்பில் அதிக  கவனம் செலுத்தவேண்டும்.  
      விதை  தேர்ந்தெடுத்தலின் நன்மை 
          
  வளமான நாற்றுக்களைப் பெற தரமான தக்காளி விதையை பயன்படுத்தவேண்டும்.  நாம் பயிரிடும் பயிர் மகசூல் விதையின் தரத்தை பொறுத்தே அமையும். விதை உற்பத்தி செய்யும்  பயிரில் மகசூலுடன் இரகத்தினுடைய பாரம்பரிய குணாதிசயங்களையும் பராமரிப்பது மிக முக்கியம்.  அது விதைக்கும் விதையின் தரத்தைப்பொறுத்தே இருக்கும். எனவே விதை உற்பத்தி பயிர்  விதைப்பிற்கு விதைகளாக இருப்பது மிக முக்கியம். 
      நாற்றாங்கால்  தேர்வு மற்றும் பராமரிப்பு 
      நாற்றாங்கால்  அமைப்பு 
          
  நல்ல தரமான விதைகளை பெற்ற பின் நல்ல நாற்றுக்களை  தயாரிப்பது மிக முக்கியம். ஆதலால் நல்ல வீரியமுள்ள நாற்றுக்களைப் பெற நன்கு  பண்படுத்திய ஒரு சென்ட் நிலத்திற்கு 200 கிலோ வரை மக்கிய தொழு உரம் அல்லது  கம்போŠட் போட்டு படத்தில் உள்ளது போல அமைத்த மேட்டுப்பாத்திகளில் நற்றுவிட  வேண்டும். 
  விதைப்பு 
          
  ஒரு ஏக்கருக்குத் தேவையான 150 கிராம் விதையை விதைக்க 3  சென்ட் நாற்றாங்காலில் விதைப்பு போதுமானது. மேட்டுப்பாத்திகளில் படத்தில் உள்ளது  போல 10 செ.மீ இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை பரவலாக விதைக்கவேண்டும். 
      கோடிடப்பட்ட  பாத்திகள் 
          
  பின் படத்தில் உள்ளது போல கோடுகளில் போட்ட விதைகளை  மணல் அல்லது நாற்றாங்கால் மண்கொண்டு மூடிவிடவேண்டும். அதன் பிறகு  மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவிற்கு நீர் பாய்ச்சவேண்டும். நாற்றுக்கள்  முளைத்த பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். நாற்றாங்கால் பராமரிப்பில்  பெண்களின் பங்கு மிக அதிகம். 
      விதைத்தபின்  மணல் இட்டு மூடுதல் 
       
               
      நாற்றாங்காலுக்கு  உரம் 
      எவ்வாறு வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் அவசியமோ அதே போல்  நாற்றாங்காலுக்கும் உரம் அவசியம். இதற்கு ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கும் உரம்  அவசியம். இதற்கு ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி உரம் இடுவதால்  நாற்றுக்கள் நன்கு ஊட்டத்துடன் வளர்கின்றன. மேலும் நாற்றுக்களைப் பிடுங்கும் போதும்  வேர் அறுபடாமல் சுலபமாக வரும். டி.ஏ.பி உரம் இல்லாவிட்டால், 6 கிலோ யூரியாவும், 12  கிலோ சூப்பர் பாŠபேட்டும் சேர்த்து இடலாம். வேர் அறுபடாத நாற்றுக்களை வயலில்  நடும்போது எளிதில் அவை நிலத்தில் பிடிப்பு கொள்கின்றன. இதைத்தான் கிராமங்களில்  “நாற்று திரும்பிடிச்சு” என்று கூறுகிறோம்.  
      நாற்றின்  வயது 
      விதைப்பயிர் செழித்து வளர்வதில் நாற்றின் வயது  முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது குறைந்த நாற்றையோ அல்லது வயது அதிகமான  நாற்றையோ நடுவதால் மகசூல் குறைகின்றது என்பதை நாம் அறிவோம். தக்காளி நாற்றுக்களை,  நாற்றுவிட்ட 25-30 நாட்களில் எடுத்து நடவேண்டும். 
            
          நடவு  பாத்தி தயார் செய்தல் மற்றும் பராமரிப்பு 
          
  நடவு செய்ய நீங்கள் தேர்ந்தெடுத்த நிலத்தை இரண்டு  அல்லது மூன்று முறை நன்கு உழுது விடவும். கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு 20 வண்டி  மக்கிய தொழுவுரத்தை போட்டு நன்கு உழுது விடவும். அதற்கு பின் நடவு பாத்திகளில்  இரகங்களுக்கு ஏற்றவாறு கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டு உள்ள இடைவெளிகளில் பார்கள்  அமைத்துக் கொள்ளவேண்டும். 
      
       
        
          
            
              இரகம்  | 
              பார்களின்    இடைவெளி  | 
             
            
              கோ1,கோ3  | 
              60  | 
             
            
              பிகேஎம்1  | 
              75  | 
             
            
              கோ2  | 
              80  | 
             
            
              பூசாசரூபி  | 
              80  | 
             
                 
       
      இவ்வாறு பார்கள் அமைத்த பின்பு, பார்களின் கீழ்  பகுதியில் யூரியா, சூப்பர் பாŠபேட் மற்றும் பொட்டா‰ உரங்களை அடியுரமாக இடவேண்டும்.  நடவு பாத்திகளில் அடியுரம் இடுவது செடிகளின் முன் பருவ வளர்ச்சிக்கு மிக  முக்கியமான ஒன்றாகும். செடிகள் ஆரம்ப காலத்தில் நன்கு தளிர்த்து வீரியத்துடன் வளர  மிகவும் அவசியமாகிறது. இவ்விதை பயிர்க்கு ஒரு ஏக்கருக்கு கீழ்க்கண்ட அளவு அடியுரம்  இடவும். 
      நடவு 
      நன்கு பராமரிக்கபட்ட நாற்றாங்கால்களில் இருந்து  எடுக்கப்பட்ட வீரிய நாற்றுக்களையே நடவிற்கு பயன்படுத்துங்கள். பார்கள் முழுவதும்  நன்கு நனையும் அளவிற்கு நீர் பாய்ச்சி இரகங்களுக்கு ஏற்றவாறு கீழ்க்கண்ட  அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடைவெளிகளில் நாற்றுக்களை நடவேண்டும். நாற்று நடவில்  பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நட்ட பின்பு மூன்றாவது நாள்  மறுபடியும் நீர் பாய்ச்சவேண்டும். அதை உயிர் தண்ணீர் என்போம். இவ்வாறு நீர்  பாய்ச்சுவதால் நட்ட நாற்றுக்கள் நன்கு வேர்விட்டு தளிர்க்க ஏதுவாக இருக்கிறது. 
      
        
            
              இரகம்  | 
              செடிக்கு    செடி இடைவெளி (செ.மீ)  | 
             
            
              கோ1, பிகேஎம்1  | 
              60  | 
             
            
              கோ2  | 
              75  | 
             
            
              பூசாசரூபி  | 
              70  | 
             
            
              கோ3  | 
              30  | 
             
               
       
      களைக்கட்டுப்பாடு 
      தக்காளி விதைப்பயிரில் களைகளை ஆரம்பத்திலிருந்தே  கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்காக நாற்றுக்கள் நட்ட மூன்றாவது  நாளுக்குள் ஒரு ஏக்கருக்கு 400 மில்லி மீட்டர் பென்டி மெத்தாலின் களைக்கொல்லியை  நாப்சாக் கைதெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும். மேலும் 35-40 நாட்களுக்குள் ஒரு  கை களை எடுப்பது அவசியம். களை எடுத்து நடவு பாத்தி பராமரிப்பிலும் பெண்கள் மிகச்  சிறப்பாக செயல்படுகிறார்கள். 
      மேலுரம் 
          
  விதைப்பயிர் தானியப் பயிரில் இருந்து மாறுபடுவதால்  விதைப் பயிர்களுக்கு மேலுரம் இடுவது மிகவும் அவசியமாகிறது. யூரியாவை இரண்டு  மேலுரங்களாக இடவேண்டும். முதல் மேலுரமாக   ஒரு ஏக்கருக்கு 33 கிலோ யூரியாவை நட்ட 40வது நாளில் இடுவது அச்சமயத்தில்  செடிகளில் அதிக பூக்கள் பூத்து காய்கள் பிடிக்க உதவுகின்றன. இரண்டாவது மேலுரமாக ஒரு  ஏக்கருக்கு 33 கிலோ யூரியாவை நட்ட 60வது நாளில் இடுவது செடிகளில் பிடித்த  காய்களும் பின் அவற்றில் உள்ள விதைகளும் நன்கு முதிர்ச்சி அடைய உதவுகின்றன. 
      பயிர்  பாதுகாப்பு 
          
  விதைப் பயிர்களை நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது  தரமான விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே,   அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த  பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். 
      தரமான  விதை உற்பத்தியில் கலவன்களை நீக்குதலின் முக்கியத்துவம் 
                 
  இனக்கலப்பில்லாத, தரமான தக்காளி விதை உற்பத்திக்கு விதைப்  பயிரைத் தனிமைப்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றி நாம் முன்பே பார்த்தோம். இப்பொழுது,  விதை உற்பததியில் கலவன்கள் எப்படி விதையின் தரத்தைப் பாதிக்கின்றன, அவற்றை நீக்குவதால்  விதையின் இனக்கலப்பு மற்றும் தரம் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பவைப் பற்றி தெரிந்து  கொள்வோம். 
          
  சாதாரணமாக, தக்காளி வயல்களில் சில பயிர்கள் மிகவம்  சீக்கிரமாகவே பூத்திருப்பதையும், சில பயிர்கள் மிகவும் காலதாமதமாகி  
  பூத்திருப்பதையும் மேலும் செடிகளின் வளர்ச்சியில் மாறுபட்டிருப்பதையும் நீங்கள்  அனுபவத்தில் அறிவீர்கள். அவை, ஒரே இரகத்தைச் சேர்ந்த பயிராக இருந்திருந்தால் அந்த  வயலில் வேறுபாடுகள் எப்படி வந்திருக்கமுடியும்? விதை உற்பத்தி ஆகியிருப்பதையே இது  நமக்குத் தெரியபடுத்துகிறது அல்லவா? இதனால், நாம் உற்பத்தி செய்யும் தக்காளி  இரகத்தின் இனத்தூய்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, இந்த வயல் விதை உற்பத்திக்கே  தகுதியற்றதாக ஆகிவிடுகிறது. 
          
  எனவே, தக்காளி விதைக்காக நடவு செய்யப்பட்ட  பாத்திகளில் அந்தக் குறிப்பிட்ட தக்காளி இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து மாறுபட்டுத்  தெரிகின்ற எல்லாப் பயிர்களையும், களைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட முக்கியமாக  படத்திலுள்ளது போல வைரŠ நோய் தாக்கப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது  அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்னரே நீக்கிவிடுதல் மூலம் உற்பத்தி செய்யலாம்.  
          
  கலவன்களை தக்க தருணத்தில் நீக்கி தரமான விதை  உற்பத்தியில் பெண்கள் மிகச்சிறப்பாக செயல்படமுடியும். 
      
        
            
              கலவன்கள்    நீக்கும் தருணம்  | 
              நீக்க    பயன்படும் தன்மைகள்  | 
             
            
              பூப்பதற்கு முன்  | 
              செடிகளின் உயரம் கிளைகளின் எண்ணிக்கை தண்டு மற்றும்    இலைகளின் நிறம்  | 
             
            
              காய்த்த பின்  | 
              பழத்தின் வடிவம், நிறம் மற்றும் பருமன்  | 
             
            
              அறுவடைக்குப் பின்  | 
              பழத்தின் வடிவம் மற்றும் பருமன்.  | 
             
               
       
      உதாரணத்திற்கு பிகேஎம்1 தக்காளி இரக செடிகள்  குட்டையாக  சுமார் 45 செ.மீ உயரம் வளரக்கூடியது.  தண்டு மற்றும் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். இக்குணாதிசயங்கள் இல்லாமல்  அதிகம் வளர்ந்தும், படர்ந்தும் தண்டுப் பகுதிகளில் ஊதா நிறங்களுடன் இருக்கும்  செழகளை அகற்றிவிட வேண்டும். காய்க்கும் தருணத்தில் பிகேஎம்1 தக்காளி இரகத்தில்  பழங்கள் கொத்துக்களாக, கொத்து ஒன்றிற்கு  4 முதல் 5 பழங்கள் இருக்கும். காய்கள் சிறிதளவு  தட்டையாகவும், பழங்களின் காம்பு பகுதியில் லேசான 4-5 மேடுபள்ளங்களைக் கொண்டு  இருக்கும். காயின் காம்புப் பகுதியில் காய் பருவத்தில் அடர் பச்சையாகவும்,  பழுக்கும் தருணத்தில் காம்புப் பகுதி பச்சையாகவும் இதரப் பகுதிகள் இரத்த சிவப்பு  நிறத்துடனும் காணப்படும். இக்குணாதிசயங்களில் இருந்து மாறுபட்ட அதாவது, பழங்கள் உருண்டையாகவோ,  காம்பு பகுதியில் அடர் பச்சை நிறம் இல்லாமலோ, 4-5 மேடுபள்ளங்களுக்கு அதிகமாகவோ  இருந்தால் அச்செடிகளை அகற்றிவிடவேண்டும். 
      அறுவடைக்கு  ஏற்ற தருணம் 
      தக்காளியில் தானியப் பயிர்கள் போல் ஒரே அறுவடையாக  இல்லாமல் 8 முதல் 10 அறுவடைகள் வரை செய்ய வேண்டி உள்ளது. அவற்றில் முதல் மற்றும்  கடைசி ஓரிரு அறுவடைகளை காய்கறிக்காக அறுவடை செய்து கொண்டு இடைப்பட்ட அறுவடைகளில்  இருந்து வரும் பழங்களையே விதை எடுக்க பயன்படுத்தவேண்டும். இவ்வறுவடைகளில் இருந்து  கிடைக்கும்  விதைகளில் மட்டுமே அதிக  முளைப்புத் திறனும், வீரியமும் உடையதாக இருக்கும். மேலும், அறுவடைகளை  செய்யும்போது பழங்கள் நன்கு பழுத்து நடுத்தரம் முதல் பெரிய பழங்களை மட்டுமே விதை  எடுப்பதற்காக உபயோகிக்கவேண்டும். 
      விதைத்தரம்  பராமரிக்க சில வழிமுறைகள் 
          
  பழங்களை அறுவடை செய்தபின் விதை பிரித்தெடுக்கும் முன்பு  தேர்ந்தெடுத்த இரகத்திலிருந்து வேறுபட்ட பழங்களையும் சிறிய பழங்களையும்  படத்திலுள்ளதுபோல நோய் மற்றும் காய்ப்புழு தாக்கிய பழங்களையும் அகற்றிவிட்டு நல்ல  தரமான பழங்களையே விதை எடுக்க பயன்படுத்தவேண்டும். 
      விதை  பிரித்தெடுக்கும் முறைகள் 
          
  அறுவடை செய்தபின் விதைப் பிரித்தெடுக்க சரியான  முறைகளைக் கையாளுவது மிக முக்கியமானது. ஏனெனில், விதைகளின் வீரியம் மற்றும் அதன்  சேமிப்புத் தன்மைகள் இரண்டும் விதை பிரித்தெடுக்கும் முறையைச் சார்ந்துள்ளன. எனவே,  சரியான முறையில் விதைகளைப் பிரித்தெடுக்கவேண்டும். தானியப் பயிர்கள் போல் அல்லாமல்  தக்காளியின் விதைகள் 100 சதவீத ஈரப்பத சூழ்நிலையில் இருக்கின்றன. 
          
  தக்காளியில் விதை பிரித்தெடுக்க அமில முறையைக்  கையாளுவது மிகச்சிறந்தது. இம்முறையில் விதை பிரித்தெடுக்க தேர்ந்தெடுத்த பழங்களை  நன்கு கசக்கிக் கூழாக்கி பிளாŠடிக் அல்லது சிமெண்ட் தொட்டியில்  எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பின்  ஒரு  கிலோ பழக்கூழுடன் 10-20 மில்லி சாதாரண ஹைடிரோ குளோரிக் அமிலம் சேர்த்து நன்கு  கலக்கி  விடவேண்டும். இவ்வாறு கலந்து அரை  மணி நேரம் வைத்திருக்கவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஓரிரு முறைகள் நன்கு  கலக்கிவிடவேண்டும். இவ்வாறு வைத்திருந்தால் விதைகள் பிரிந்து தொட்டியின்  அடிப்பாகத்தில் தங்கிவிடும். பின்பு அதிக அளவு நீர் சேர்த்து நீரின் மேல்  மிதக்கும் கூழ் பகுதியை அகற்றிவிடவேண்டும். பின் நீரில் மூழ்கி உள்ள  விதைப்பகுதியை மட்டும் எடுத்து மீண்டும் இரண்டு  மூன்று முறை அதிக நீர் விட்டு நன்கு கழுவிவிடவேண்டும். 
       
               
      அதிகப்பரப்பளவில் தக்காளி விதைப்பயிர் சாகுபடி  செய்பவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட  படத்தில் காட்டப்பட்டுள்ள தக்காளி விதைப்பிரித்தெடுக்கும் கருவியைப்  பயன்படுத்தலாம். இக்கருவி மூலம் பிரித்தெடுத்த விதையுடன் ஒரு கிலோ விதைக்கு 2-3  மில்லி ஹைடிரோ குளோரிக் அமிலம் என்ற விகிதத்தில் கலந்து 3-5 நிமிடங்கள் நன்றாக  கலக்கி வைக்கவும். பின் விதைகளை நன்கு கழுவி விடவேண்டும். 
      விதைகளை அமிலநேர்த்தி செய்வதால் விதைகளை உலர வைப்பது  எளிதாவதுடன் விதைகளின் மேல் பூஞ்சாணங்களினால் ஏற்படுகின்ற அழுக்கு நிறம்  அகற்றப்பட்டு விதைகளின் நிறம் மற்றும் வீரியம் கூடுகிறது. அமில நேர்த்தி செய்யாத  விதைகளின் மேல் பூஞ்சாணம் எளிதில் தோன்றி விதைகளின் நிறம் மற்றும் வீரியத்தை  குறைக்க வழி உண்டாகும். 
      விதையை  உலர்த்துதல் 
          
  பிரத்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர வைக்கவேண்டும்.  ஏனெனில், தக்காளியில் விதைகள் 100 சதவீத ஈரப்பத சூழ்நிலையில் இருக்கின்றன. நன்கு  கழுவிய விதைகளை சேகரித்து கித்தான் சாக்குகளின் மேல் லேசாக பரப்பி நிழலில் 8 முதல்  10 மணி நேரம் வரை ஓரிரு நாட்கள் நிழலில் உலரவைக்கவேண்டும். பின் சூரிய ஒளியில் உலர  லவக்கவேண்டும். விதைகளை வெய்யிலில் உவர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி  வரையிலும், பின்னர் 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துவது நல்லது. 12 முதல் 3 மணி  வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின்  புற ஊதாக்கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெய்யிலின் வெப்பநிலை உச்சத்தில்  உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. விதைகளை உலர்த்தும்போது  விதைகள் கட்டி சேராமல் நன்கு கிளறிவிடவும். 
         
      விதை  சுத்திகரிப்பு 
      விதைகளை நன்கு உலர்த்திய பின்பு விதைகளை  சுத்திகரிப்பது மிக முக்கியம். அவ்வாறு விதை சுத்திகரிப்பு செய்வதால் முதிராத  பொக்கு மற்றும் சிறிய விதைகளை அகற்றுவதால் விதைகளின் வீரியம் மற்றும்  சேமிப்புத்திறன் கூடுகின்றன. விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த,  கெட்டுப்போன விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், தூசி  முதலியவற்றையும் அகற்றிவிடவேண்டும். தக்காளி விதைகளை பிஎŠஎŠ 10 நம்பர் கம்பி வலை  கைச் சல்லடைகள் கொண்டு சுத்திகரிப்பு செய்யவேண்டும். 
         
      விதை உலர்த்துல் மற்றும் விதை சுத்திகரிப்பில்  பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  
விதை  சேமிப்பு 
          
  விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே  அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும்  தேவைப்படுகிறது.  
விதையின்  ஈரப்பதம் 
          
  விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம்  மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை  விரையில் இழக்கின்றன. குறைந்த காலசேமிப்புக்கு விதைகளை 7-8 சத ஈரப்பதத்திற்கு காய  வைத்து, துணிப்பைகளில் நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின்  ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து  வையுங்கள். 
விதை  நேர்த்தி 
          
  விதைகளை சேமிப்புக்கு முன் பூஞ்காணக் கொல்லி கொண்டு  விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ  விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். இதற்குப் பதிலாக விதைகளை  குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்சிகுளோரைடு  (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இராசயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற  பொருளுடன் சமவிகிதத்தில் சலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து  பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து  கலந்து பின்பு சேமியுங்கள். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை  நேர்த்தி முறையாகும். 
விதை  சேமிப்புப் பைகள் 
          
  விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை  என்பது  உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால்  காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி ஓரங்களில் விதைகளை  சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். அதாவது 700 அடர்வுள்ள  பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள். 
இடைக்கால  விதை நேர்த்தி 
          
  உங்கள் தேவைக்கென சேமித்து வைத்திருக்கும் குறைந்த  அளவு விதைகளை 5 அல்லது 6 மாத கால சேமிப்புக்குப்  பின் “ஊறவைத்து உலர வைக்கும் முறை” மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு டை-சோடியம்  பாஸ்பேட் என்ற இராசயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற விகிதத்தில்  கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல்)  விதைகள் 3 மணி நேரம் ஊற வைத்து பின்பு பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து விடுங்கள்.  இவ்வாறு செய்வதால் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது.  
விதைச்  சான்றளிப்பு 
          
  இதுவரை நாம் தரமான தக்காளி விதை உற்பத்திக்கு  என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பது பற்றி நன்கு தெரிந்து  கொண்டோம். நாம் ஒவ்வொரு முறையும் தரமான விதைகள் என்று சொல்லிக் கொண்டு  வருகிறோம். தரமான விதைகள் என்றால் என்ன, அவற்றின் குணாதிசியங்கள் என்னென்ன என்பது  பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். 
          
  பாரம்பரியத் தூய்மையில் இருந்து சிறிதும்  குறையாததும், பிற இனக் கலப்பில்லாததும், பிற பயிர்களை விதை கலப்பு இன்றி, தூசு  துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத் திறனும் வீரியமும்  மற்றும் நோய் தாக்காமல் விதைகளையே நாம் தரமான விதைகள் என்று சொல்கிறோம்.  புதிதாகத் தெரிந்து கொண்ட தொழில்நுட்ப வழிமுறைகளைச் சரியாக பின்பற்றுகிறோமா?  நாம் உற்பத்தி செய்யும் விதைகள் தரமானவைதானா? என்பதை நாம் தெரியப்படுத்துவார்கள்?  என்பது பற்றி அறிந்து கொள்வது விதை உற்பத்திக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
          
  விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத்  தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும். விதை உற்பத்திக்கு  தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றளிப்பு  ஆகும். “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூடச்சொல்லலாம். மிக  உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக  சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளான விவசாயிகளுக்குக் கிடைக்கச்  செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும். 
          
  விதைச்சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது.  விதைக்கு உபயோகிக்கும் விதைகள் அங்ககீரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து  வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம்,  பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு,  மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகிறது.  மேலும் முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை  உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 
          
  ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம்  குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட  விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.  
          
  எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச்  சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான  விதைகளை உற்பத்தி செய்ய முடியும். நம் தமிழகத்தில் அரசின் விதைச் சான்றளிப்புத்  துறை நன்கு செயல்பட்டு வருகின்றது. 
          
  சான்று  விதை உற்பத்திக்கு பரிந்துரைக்கபட்பட வயல் மற்றும் விதைத்தரம்  
வயல்  தரம் 
  (அதிகபட்சம்) 
  
    - விதை நோயால் தாக்கப்பட்ட  செடிகள்          0.5 சதம்
 
   
 
விதைத்  தரம் 
         (குறைந்தபட்சம்) 
  
  
    - பிற இனப்பயிர்கள் விதைகள்                   10/கிலோ
 
   
 
    (அதிகபட்சம்)      
  
    - களைவிதைகள் (அதிகபட்சம்)                  எதுவும் இருக்கக்கூடாது
 
   
 
  
  
    - முளைப்புத்திறன்  (குறைந்தபட்சம்)        70 சதம்
 
   
 
  
காற்றுப்புகும்  பை                          8.0 சதம் 
  காற்றுப்புகாத  பை                         6.0 சதம் 
        
  நீங்களும் உங்கள் தக்காளி விதை உற்பத்தி வயல்களை  விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்தி தரமான விதைகளை உற்பத்தி செய்து அதிக லாபம்  பெறலாம். தனியார் விதை உற்பத்தியாளர்களும் உற்பத்தி வயல்களை விதைச்  சான்றளிப்புக்கு உட்படுத்தி, நல்ல தரமான விதை உற்பத்தி செய்து விநியோகம்  செய்யலாம். 
          
  விதைச் சான்று பெறுவதற்கு நீங்கள் உங்கள்  அருகாமையிலுள்ள விதைச் சான்றளிப்பு அலுவலர்களை அணுகி மேலும் விபரங்களைப் பெற்றுக்  கொள்ளலாம்.          |