அங்கக வேளாண்மை என்றால் என்ன? 
       
      அங்கக வேளாண் முறை இந்தியாவில் தொன்று  தொட்டு பின்பற்றப் பட்டு வரும் முறையாகும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை  நன்றாக மட்கச்செய்து, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு அளிக்கிறது. அதை பயிர்கள்  கிரகித்து கொள்கின்றன. நுண்ணுயிர்கள் மெதுவாகவும் சீராகவும் ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன.  இதனால் மாசற்ற சுற்றுச் சூழலில் நல்ல மகசூலினை பெற முடிகிறது. 
       
      அமெரிக்க அங்கக வேளாண் ஆராய்ச்சி குழுவின்  விளக்கப்படி “அங்கக வேளாண்மை என்பது செயற்கை ஊக்கிகள் உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை  முடிந்த அளவில் தவிர்த்து பயிர்சழற்சி, இயற்கை மற்றும் அங்கக உரம் பயன்படுத்துதல் இவற்றின்  மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் நல்ல மண்வளம் அடைவதாகும்” 
        உணவு மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின்  கூற்றுப்படி “அங்கக வேளாண்மை என்பது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல்  செயல்பாடுகள் அங்கக கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தைக்  காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகம். இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலான உழவியல், உயிரியல்,  இயந்திர முறைகளை பின்பற்றுதல் இதின் தனித்தன்மையாகும்”. 
        
      அங்கக வேளாண்மை ஏன் தேவை? 
         
        வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக,  வேளாண் உற்பத்தியை நிலைப் படுத்தல் மட்டுமல்லாது அதை சீரான முறையில் உயர்த்துதலும்  தற்போதைய தேவையாகிறது. 
         
      அதிக இடுபொருட்கள் மூலம் வேளாண்மையில்  பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன்மூலம் தன்னிறைவை அடைந்திருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள்  உணர்ந்துள்ளனர். ஆகையால் தாக்கமான பின்விளைவுகளைக் கொண்ட இரசாயன வேளாண் முறையை தவிர்த்து,  இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு  நாம் செய்யும் மகத்தான சேவை என்று கூறுகின்றனர். அங்கக வேளாண் முறையில் அதிக மகசூல்  பெறும் வழியினை அறிதல் மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். 
      அங்கக வேளாண்மையின் சிறப்பியல்புகளானது: 
      
        
          - மண்ணின்  அங்கக தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், கவனமாக  இயந்திர ஊடுருவல் - இவைகளின் மூலம் மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல்.
 
          - மறைமுகமாக  பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அங்கக கழிவுகள் வழங்கும். இவ்வூட்டச்சத்துக்களை நுண்ணுயிர்களின்  உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன.
 
          - நிலத்திற்கு  தகுந்த பயிர் வகை உபயோகித்தல் உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தல் மற்றும் அங்கக பொருட்களின்  சுழற்சி முறை மூலமாக தழைச்சத்து தன்னிறை அடையப் பெறுகிறது.
 
          - களை,  பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு, நோய் பாதுகாப்பு - இவை மூன்றையும் பயிர் சுழற்சி இயற்க  எதிரிகள் பயன்பாடு, அளவான ரசாயன தலையீடு, எதிர்ப்புசக்தி மிக்க பயிர்களை பயன்படுத்துதல்,  அங்கக எருவூட்டல் போன்றவற்றின் மூலம் அடைதல் இதன் சிறப்பாகும்.
 
          - இயற்கை  (அங்கக) வேளாண் முறையில் கால்நடைகளுக்குக் கிடைக்கும் தீவனங்கள் நச்சின்றி இருப்பதோடு  மட்டுமல்லாமல் கால்நடைகளின் கழிவுகள் வீணாகாமல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.
 
          - வேளாண்  முறையில் கவனம் செலுத்தல் மூலம் வனவாழ்வு மற்றும் இயற்கை உறைவிடைத்தை பாதுகாத்தல் சாத்தியமாகிறது.
 
           
         
      |