பூண்டு அங்கக  பயிர் சாகுபடி
      
       
      இரகங்கள்:
        உள்ளூர் இரகம்,  ஊட்டி1, பார்வி, இராஜேயே, காடி மற்றும் சிங்கப்பூர் 
         
        பருவம்: ஜீன் -ஜீலை,  அக்டோபர்-நவம்பர் 
         
        மண் மற்றும்  வானிலை:
        நன்கு நீர்  வடியும், களிமண் கலந்த வண்டல் மண் 
        சாகுபடிக்கு  உகந்தது. குளிர்ந்த வானிலை இருந்தாலே சாகுபடி செய்ய போதுமானது. 
         
        விதை  மற்றும் விதைப்பு: 
        நிலத்தை நன்கு  உழ வேண்டும். 15 செ.மீ. இடைவெளியில் ஆழம் குறைந்த பள்ளம் தோண்ட வேண்டும். விதைக் குமிழ்களான  குளோங்களை 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். 
         
        விதையளவு:        500-600 கிலோ  /ஹெக்டேர் 
         
        விதை  நேர்த்தி 
           
        3 சதவிகித தசகாவ்யாவை  30 நிமிடங்கள் விதையுடன் கலந்து வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து  சூடோமோனஸ் ப்ளோரோங்சென்ஸ் 5% உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம்  மற்றும் பாஸ்போ பாக்டீரியா 500 கிராம் /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து அரிசிக் கஞ்சியுடன்  கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 
         
        உரமிடுதல் 
      
        
          - லுபினுடன்       பசுந்தாள் உரத்தை பயிரிடும் 15 நாட்களுக்கு முன்பு அளிப்பதால் மண்ணில் தழைச்சத்து       அளவை அதிகரிக்கலாம்.
 
          - நன்கு       சிதைந்த தொழு உரம் 30 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது       அளிக்க வேண்டும்
 
          - கம்போஸ்ட்       5 டன்  /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை       தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
 
          - மண்புழு       உரம் 2.5 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
 
          - உயிர்       உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 5 கிலோ / ஹெக்டேர் என்ற       அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
 
          - மாட்டு       குழம்பு உரம் 75 கிராம் /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 40 லிட்டர் நீரில் கரைத்து       நிலத்தைத் தயார் செய்யும் பொழுது தெளிக்க வேண்டும்.
 
           
         
      வளர்ச்சி  ஊக்கிகள் 
      
        
          - 10%       மண் புழு உர தெளிப்பை விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை       தெளிக்க வேண்டும்
 
          - மாட்டு       சாணக்குழிக்குப்பையை 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 300 லிட்டர் நீரில்       கரைத்து, விதைத்து 45,60,75 வது நாளுக்கு பிறகு தெளிக்க வேண்டும்
 
          - மாட்டுக்       கொம்பு சிலிக்கா: 2.5 கிலோ  /ஹெக்டேர்       என்ற அளவில் எடுத்த 50 லிட்டர் நீரில் கரைத்து பயிரிட்ட 65வது நாளுக்குப் பிறகு       தழைத் தெளிப்பாக  தெளிக்க வேண்டும்
 
          - மஞ்சூரியன்தேயிலை       சாற்றை (5%) விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தழைத்       தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்
 
           
         
      பாசனம்:
        பூண்டு சாகுபடி  பாசன சாகுபடியாகவும், மானாவாரி சாகுபடியாகவும், செய்யப்படுகிறது. பாசன சாகுபடியில்,  பயிரிட்ட அன்றும், அதற்கு பிறகு 3 நாட்களில் கழித்தும் பாசனம் செய்ய வேண்டும்.  
         
        பயிரிட்ட பின்னர்  செய்யப்படும் சாகுபடி முறைகள்:        மாதம் ஒரு முறை  களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறைகளை எடுக்கும் போது பூண்டுக் குமிழ்கள் வெயிலில்  படுவதைப் பொறுத்து மண் அணைக்க வேண்டும். 
         
        பயிர்  பாதுகாப்பு 
           
        பூச்சிகள் 
           
        இலைப்பேன் 
           
        1.வேப்பஎண்ணெய்  3% தெளிக்க வேண்டும் 
        2.10% வேப்பங்கொட்டை  சாற்ற பயிரிட்ட 45,60,75வது நாட்களில் தெளிக்க வேண்டும் 
        3.10%பூண்டு  மிளகாய் சாற்றை தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும் 
         
        வெள்ளை  வண்டுகள் 
      
        
          - கோடை       உழவு செய்வதால் கூட்டுப்புழு மற்றும் தாய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்
 
          - விளக்குப்       பொறியை ஏப்ரல்- மே மாதங்களில் இரவு 7 முதல் 9 மணி வரை வயலில் பொருத்த வேண்டும்
 
          - காலை       வேளைகளில் வண்டுகளை கையால் எடுத்த அழிக்க வேண்டும்
 
          - 3வது       நிலை வண்டுகளை ஜீலை-ஆகஸ்ட் மாதங்களில் கையால் எடுத்து அழிக்க வேண்டும்
 
          - மெட்டாஹார்சியம்       அனிசோபிலே 20 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க       வேண்டும்
 
           
         
      நோய்கள் 
         
        கருகல்  நோய் 
           
        அக்ரி ஹோட்ரா  சாம்பலை (200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து  15 நாட்கள் வைத்திருந்து பின் 10 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்) பயிரிட்ட ஒரு  மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். 
         
        மண்  வழியே பரவும் நோய்கள் 
      
        
          - டிரைக்கோடெர்மா       விரிடி 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் அளிக்க வேண்டும்
 
          - சூடோமோனஸ்       ப்ளோராஸ்சென்ஸ் 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் அளிக்க வேண்டும்
 
           
               அறுவடை 
           
          பூண்டு செடியின்  இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக, பின் இலைகள் முழுவதும் காய்ந்து விடும். இந்த நிலையில்  பூண்டுக் குமிழ்களை கைகளால் பிடுங்கி, குவித்த வைக்க வேண்டும். இலையுறைகளை குமிழ்களுக்கு  அருகில் 1-2 செ.மீ. அளவு இருக்குமாறு வெட்ட வேண்டும். வேர்களையும் வெட்ட வேண்டும்.  பிறகு வெயிலில் ஒரு வாரத்திற்கு உலர்த்தி, அளவு மற்றும் எடையைப் பொறுத்து தரம் பிரிக்க  வேண்டும். 
           
        விளைச்சல்:        10-15 டன்கள்  /ஹெக்டேர்  |