பூச்சிகளைக் கட்டுப்படுத்த சில இயற்கை தீர்வுகள் உள்ளன  நாம் அவற்றின் செயல்படும்  அடிப்படை தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். நாம் அவ்வாறு செய்தால், நம்முடைய பயிர்கள் எந்த பூச்சி தாக்குதலைum தாங்கும் வகையில் உதவ முடியும். அங்கக வேளாண்மையில்  ஒவ்வொரு வாழ்க்கை வடிவம் சில வழியில் நமக்கு உதவுகிறது என்று பார்க்க வேண்டும். 
           
            பின்வரும் இலைகள் பூச்சிகள் தடுக்க உதவுகிறது : 
            
              - கால்நடைகள் உண்ணக்கொடிய  இலைகள்- உதாரணம்- ஆடுதொடா
 
              - உடைந்த தண்டிலிருந்து பால் சுரத்தல் – உதாரணம் – எருக்கு, ஊமத்தங்காய்
 
              - கசப்பான சுவையுடைய இலைகள்  - உதாரணம்- வேம்பு, கற்றாழை.
 
              - உப்பு தன்மையுடைய இலைகள்  - உதாரணம் – காட்டாமணக்கு.
 
              - கசப்பான அல்லது உப்பு ருசியுடைய விதைகள் . உதாரணம்- வேம்பு, சீதாப்பழ , எட்டி விதைகள்.
 
             
            இலைகள் மற்றும் விதைகளிலிருந்து உருவாக்கப்பட்ட நொதித்த கரைசல் மற்றும் அமிலங்கள்   விரும்பத்தகாத வாசனை மூலம் சிறந்த பூச்சி தடுப்பானாக செயல்படுகிறது. தெளிக்கும் போது இந்த கரைசல் பூச்சிகள் தாவரங்களை உண்ணுவதை தடுக்கின்றது.
பொதுவாக, புழுக்கள் உண்ணக்கூடிய தாவரங்கள் அடையாளத்தை வாசனை மூலம் உணர்ந்து கொள்கிறது.  சாணம் / சிறுநீரை தாவர கரைசலாய் தெளிக்கும்  போது,  புழுக்கள் மற்றும் பூச்சிகள் வாசனை உணர்வு இடையூறு செய்யலாம்.  இவ்வாறு தெளிக்கப்பட்ட பயிர்களை பூச்சிகள் தவிர்த்துவிடும்  ஏனென்றால்  தெளிக்கப்பட்டஇலைகளை சாப்பிடும் போது, வயிற்று பிரச்சினைகள் பூச்சிகள்இறந்து விடும் .இதனால்  கணிசமாக முட்டையிடும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.  இடப்பட்ட முட்டைகள்   வேட்டையாடும் பறவைகளால் எடுத்துக் கொள்ள படுகிறது.
 
               
              தயாரிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து பிரிவுகளில் இருந்து 2 கிலோ இலைகள் / விதைகள் ( வழக்கமாக இருக்கலாம்) எடுக்க வேண்டும்.   
            நொதித்தல் முறை :  12-15 லிட்டர் கோமியம் சேர்க்கவும். ( தேவைப்பட்டால் மேலும் சேர்க்கவும் தாவர பொருள் முற்றிலும் கோமியத்தில் முழுமையாக மூழ்கும் ).  3-5 கிலோ சாணம் (பசு கோமியம்) மற்றும் 100-250 கிராம் மஞ்சள் தூள் (இருந்தால்). இதனை 7-15 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும். இலைகள் நொதித்த உடன் கரைசல்  பயன்படுத்த தயாராகி விடும். 
              பயன்பாடு: - 500- 1000 மில்லி கரைசலை 10 லிட்டர் நீரில்  கலந்து தெளிக்கலாம். 
               
             கொதிக்கும் முறை : 
             10 kg இலைகள் / விதைகள்  மற்றும் 25 லிட்டர் தண்ணீரில் ஊற விட வேண்டும்.  தாவர பொருள் முழுமையாக நீரில் மூழ்கியிருபதை உறுதி செய்ய வேண்டும். நிலையான வெப்பத்தின் கீழ்  கொதிக்க விட வேண்டும். இதனை வடிகட்டி மற்றும் ஒரு தனி கொள்கலனில் பிரித்து வைக்க வேண்டும். வடிகட்டிய பின்னர்  திட பொருட்களுடன் தண்ணீர் 25 லிட்டர் சேர்க்க வேண்டும். இதனை கொதிக்க விடவும். அதை வடிகட்டி மற்றும் இரண்டாவது கொள்கலன் ( இது வடிகட்டப்பட்டு தீர்வு முந்தைய சேர்க்கப்பட்டது) திரவத்துடன் சேர்க்க வேண்டும் . இந்த திரவத்துடன் 200 கிராம் மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் நோதித்தலுக்கு  அனுமதிக்க வேண்டும். 
              பயன்பாடு: நூறு லிட்டர் கரைசல் வருமாறு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்.  |