இந்த கரைசல் சுலபமாக தயாரிக்கலாம், தாவர வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது, பூச்சிகள் தடுக்கிறது, காளான் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும், இது தாவரங்களின் பூக்கும் தன்மை மேம்படும். இந்த கரைசல் சைட்டோசைம்/ பயோசைம் போன்று அதே வளர்ச்சி அதிகரிக்கும் சாத்திய கூறுகள் உள்ளது. (இவை வர்த்தக பெயர்கள்). 
             
            தேவையான பொருட்கள்: 5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 தேங்காய், 500மிலி-1லிட்டர் கழிவுகளிலிருந்து பெறப்படும் சாறு   (அல்லது 500 கிராம் - 1 கிலோ பழ கழிவுகள் சாறு பிரித்தெடுக்கும் முறை எளிதானது இல்லை என்றால் ). 
             
            தயாரிப்பு:  
            
              - தேங்காய் உடைத்து ஒரு பாத்திரத்தில் இளநீர் சேகரிக்க வேண்டும். இதனுடன் மோர் சேர்த்து நன்றாக கலக்கவும், தேங்காயை இதனுடன் சேர்த்து இதனை ஊற விட வேண்டும்.  
 
             
              - அல்லது, தேங்காய் மற்றும் பழ (சாறு வடிவத்தில் இல்லை என்றால்) கலந்து, ஒரு நைலான் வலையில் வைத்து கட்டி, மோர் திரவத்தில் மூழ்கடித்து வைக்கவும். 
 
              - இந்த கரைசல் ஏழு நாட்களில் நன்கு புளித்து விடுகிறது. 
 
              - நைலான் பையில் உள்ளடக்கங்களை ஒவ்வொரு முறையும் தேங்காய் ஒரு சிறிய அளவு சேர்ப்பதன் மூலம் அடுத்தடுத்த  ஒரு சில முறை பயன்படுத்தலாம். 
 
             
            பயன்பாடு: 300-500 மில்லி கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது ஏக்கருக்கு 5-10 லிட்டர் என்ற விகிதத்தில் பாசன நீ ரிலும் பயன்படுத்தலாம்.  
               |