கோடை காலத்தில் வெப்பத்தின் அளவு கூடும் போது மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் அதிக அளவில் தண்ணீர் அருந்தவும், எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். இதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது. 
            கோடையில் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:
            
              
                | இளநீர்:இளநீர் வெப்பத்தைப் போக்குவதோடு நல்ல ஊட்டச்சத்தையும் கொண்டது. இளநீரில் உள்ள வழுக்கையில் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், இணையற்ற பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளதால் அவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். | 
                  | 
               
              
                | நெல்லிக்காய்:புத்துணர்ச்சியையும், வயது மூப்பையும் தடுக்கவல்ல நெல்லிக்காயானது கடும் வெப்பகதிர்களிலிருந்து நம்மை காக்கின்றது. அது இதயத்திற்கும், தலைமுடிக்கும் சிறந்த ஊட்டச்சத்தை தருகின்றது. | 
               
              
                | ஆப்ரிகாட்:இதில் சிறந்த அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்சத்து நிறைந்துள்ளதால் வெப்பத்தால் ஏற்படும் வேர்குரு, கட்டிகளை நீக்குகிறது. உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ள சிறந்த உணவாகும். | 
               
             
            
              
                | தக்காளி:தக்காளி சாலடாக எடுத்துக்கொள்வது சிறந்தது. இயற்கையான வெப்பத்தில் இருந்து நம் தோலை காக்கும் தன்மையும் உடையது. | 
               
              
                | தர்பூசணி:கோடை காலங்களில் பிரியமான உணவான தர்பூசணி 92% தண்ணீரை கொண்டதால் நீரிழப்பிலிருந்தும் கடுமையான வெப்பத்திலிருந்தும் காக்கிறது.  | 
               
              
                | செரி: இந்த சிறிய பழங்கள் தூக்கமின்மைக்கு சிறந்த உணவாகும். கொழுப்பு சத்தையும் குறைக்கவல்லது. | 
               
              
                | ஏலக்காய்:வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு ஏலக்காய் டீ சிறந்தது. இது நச்சு நீக்கும் தன்மையுடையது. | 
               
               
           |