தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: ஊட்டச்சத்து :: உணவு சத்துக்களை மேம்படுத்துதல்

செறிவூட்டுதல்:
உணவு சத்துக்களை சிறப்பான சமையலைக்கொண்டு செய்வதே உணவு செறிவூட்டுவதாகும்
உணவு சத்துக்களை மேம்படுத்தலின் முக்கியத்துவங்கள்:

  • உடலுக்கேற்ற உணவு சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்தல்
  • சிறந்த உணவு வகை மற்றும் தயாரிப்பு மேற்கொள்ளுதல்
  • சமச்சீரான உணவை நுகர்தல்
  • உணவுகளின் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்துதல்
  • விதவிதமான உணவு வகைகளை தயாரித்தல்
  • தினசரி உணவு வகைகளை என்னவென்று திட்டமிடுதல்
  • உடலில் உள்ள நோய் பற்றாக்குறையை அகற்றுதல்
  • நல்ல உணவு பழக்கவழக்கங்களை உருவாக்குதல்

ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தும் முறைகள்:
இணைத்தல்: ஊட்டச்சத்துக்களின் தரத்தை மேம்படுத்த பலவகையான உணவுகளை ஒன்றாக்கும் செயல்கூறுகள் ஆகும்.
பலவகையான உணவு வகைகளை ஒன்றாக இணைப்பதே சத்துக்களை எளிய முறையில் உண்ணுவதாகும்.
(எ-டு) பருப்பரிசி.
தானிய வகைகளில் சில அமினோ அமிலங்கள் குறைந்து காணப்படும். ஆனால் பருப்பு வகைகளில் அதிகம் காணப்படும். அதே போல் பருப்பு வகைகளில் சிலவகை அமினோ அமிலங்கள் இருக்காது. அவை தானியங்களில் நிறைந்திருக்கும். எனவே இவை இரண்டையும் இணைத்து தயாரிக்கும் உணவுகள் ஊட்டச்சத்துக்கள் மேம்படுத்தும்.

நொதித்தல்:
நொதித்தல் என்பது உணவு வகைகளோடு சில பயன்தரும் நுண்ணுயிர்களை சேர்ப்பதாகும். அவை ஏற்கொனவே உள்ள சத்துக்களை எளிதாக மாற்றி உண்ணுவதற்கு ஏதுவாக்கும். நொதித்தல் இட்லி மாவு அரைத்த பின் பொங்க செய்து இரண்டு மடங்காக்கும்.
(எ-டு) ரொட்டி, தயிர், இட்லி

நன்மைகள்:

  • உணவு ஜீரணிக்கும் சக்தியை மேம்படுத்தும்.
  • சில வகை தானியங்கள் பயிறு வகைகளில, தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்பு சத்துக்கள் மாற்றப்பட்டு உடலுக்கும் எளிதாக உட்கிரப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
  • நொதித்த உணவு வகைகள் மிகவும் பஞ்சு போல் மெருதுவாக இருக்கும். எனவே இவற்றை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்பர்.

முளைத்தல்:
பயிறு வகைகளை அல்லது தானியங்களை சிறிது தண்ணீரில் ஊர வைக்கும் போது சிறிய தண்டு வெளியில் காணப்படும். இவையே முளைத்தல் என்பதாகும்.
கோதுமை, பாஜ்ரா, ஜோவர் ஆகியவை முளைவிடும் தானியங்களாகும். பின்பு தானியங்களை நிழலில் உலர்த்தி தவாவில் வாட்ட வேண்டும். பின்பு அரைத்து பல வகை பதார்த்தங்கள் செய்ய உபயோகப்படுத்தலாம். பருப்பு வகைகள் முளைத்தபிறகு வேகவைத்து உண்ணலாம். பொதுவாக 8-16 மணி நேரம் உளறவைத்து சுமார் 12-24 மணிநேரம் கழித்து முறைவிடும்.
நொதித்த பிறகு முளைவிடும் அனைத்து வகை தானியங்களிலும் வைட்டமின் அதிகம் இருக்கும்.

நன்மைகள்:

  • உணவின் ஜீரண் சக்தியை அதிகரிக்கும்
  • ஊட்டச்சத்துக்களின் மதிப்பை அதிகரிக்கும்

மூலதனம்: http://www.textbooksonline.tn.nic.in/books/11/nutrition-EM/CHAPTER_2.pdj

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015