| 
              தென்னையில்  சாம்பல்சத்து பற்றாக்குறை 
                அறிகுறிகள் : 
                
                  - 
                    
இலைகளின்       ஒரம் மஞ்சள் நிறமாக மாறி நுனி மற்றும் இலை ஒரங்கள் கருகிக் காணப்படும் 
                   
                  - 
                    
இலையின்       அடிப்பாகம் பச்சை நிறத்துடன் காணப்படும் 
                   
                  - 
                    
வளர்ச்சி குறைவாக இருக்கும். பூக்கும்  பருவத்தில் இலைகள் உதிர்ந்துவிடும். 
                   
                  - 
                    
சிறிய இலைகள் பின் நோக்கிக் காய்ந்துவிடும்.  இலை முனைகள் கருகி காணப்படும். 
                   
                  - 
                    
இலைகளின் மேல் சிறிய பழுப்பு நிற பிசின்  போன்ற புள்ளிகள் தோன்றும். 
                   
                  - 
                    
சிறிய சுருக்கக் கோடுடைய புள்ளிகள்  இலையின் மேல் தோன்றும். 
                   
                  - 
                    
பழங்கள் சிறுத்து காணப்படும். இலைகள்  மஞ்சள் மற்றும் வெண்கல நிறத்திலும், திருகியும், சுருங்கியும், கொம்புகள் வலைந்தும்  காணப்படும். 
                   
                 
                நிவர்த்தி : 
                
                  
                    - மரம்       ஒன்றுக்கு வருடம் ஒருமுறை 2 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இடவேண்டும்
 
                    - 200       மில்லி பொட்டாஷ் கரைசலை (10 கிராம் லிட்டர்) வேர்மூலம் நான்கு மாத இடைவெளியில்       செலுத்த வேண்டும்
 
                    - முயூரேட் ஆப் பொட்டாஷ் (MOP) 2 கிலோ / மரம் / வருடம் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.
 
                   
                 
                 |