Horticulture
||| | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: காபி
 

காபி (காபியா கெனிபோரா / காபியா அராபிகா)
ரூபியேசியே

உலக - காபி உற்பத்தி வரைபடம் இந்தியா - காபி உற்பத்தி வரைபடம்

காபி தோட்டம்

இரகங்கள்
அராபிகா காப்பி இரகங்கள்
இரகத்தேர்வுகள் 7,9,10,காவேரி மற்றும் எச்.ஆர்.சி

ரொபஸ்டா காப்பி இரகங்கள்
இரகத்தேர்வுகள் 274, 270, 3

காபி பீன்

 

   

மண்

காப்பி தோட்டங்களின் மண் 4.5 முதல் 6.5 கார அமில நிலை கொண்டதாகவும், அதிக ஆழமுடையதாகவும், அதிக அங்கக பொருள் நிறைந்ததாகவும் இருத்தல் நல்லது.

இரகங்கள்

உயரம் (மீ)

மழையளவு (மி.மீ)

பரவல்

ரோபஸ்டா

500 - 1000

1000 - 2000

பூக்கும் பருவம் : பிப்ரவரி - மார்ச்

அராபிகா

1000 - 1500

1600 - 2500

பூக்கும் பருவம் : மார்ச் - ஏப்ரல்

ஏப்ரல் - மே மாதங்களில் ஆதரவு மழை இரு இரகங்களுக்கும் அவசியமானது

பருவம் : ஜுன் - டிசம்பர்

விதை

இப்பயிரினை விதை மூலம் உற்பத்தி செய்யலாம். நோயற்ற நன்கு முதிர்ந்த பழங்களை விதைக்கென்று தனியாக அறுவடை செய்யவேண்டும். தண்ணீரில் மிதக்கும் வெற்று விதைகளை நீக்கிவிடவேண்டும். நல்ல பழங்களிலிருந்து சதைப்பற்றினை நீக்கி விதையினை தனியே பிரித்தெடுக்கவேண்டும். பின்பு மரத்தூள் கலந்து நிழலில் உலர வைக்கவேண்டும். நன்கு  திரண்ட விதைகளை பிரித்தெடுத்து அக்ரோசான் என்றும் மருந்துடன் நேர்த்தி செய்வதால் பூஞ்சாணநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

நாற்றாங்கால்

நல்ல வடிகால் வசதி, இருபொறை, மண்ணில் அதிக அளவிலான அங்கக சத்துக்களுடைய மண்வகைகளை தண்ணீர் மற்றும் நிழல் பகுதியில் தேர்வு  செய்யவேண்டும். மேட்டு / மேடை பாத்திகள் தேவையான அளவு நீளமும் 1 மீட்டர்அகலமும் 15 நெ.மீ உயரம் கொண்டிருக்குமாறு அமைக்கவேண்டும். 1 x 6 பரப்பளவு உள்ள பாத்திகளுக்கு 30-40 கிலோ மக்கிய தொழு உரம், 2 கிலோ சலித்த சுண்ணாம்பு மற்றும் 400 கிராம் ராக்பாஸ்பேட் ( பாறை உப்பு) இடவேண்டும். களிமண் மற்றும் இதர மண்வகைகளுக்கு மணல் சேர்ப்பதன் மூலம் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட வசதி கிடைக்கும். நாற்றாங்காலில் விதைக்கும் முன்னர் விதைகளை அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் நேர்த்தி செய்தல்வேண்டும்.

காபியின் முளைப்பு



விதைகளை டிசம்பர் - ஜனவரி மாதங்களில் 1 அங்குல இடைவெளியில் விதையின் தட்டையான பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு விதைக்கவேண்டும். அதன் பின்னர் மெர்ரிய அடுக்குகளான மணல் / கலவை இட்டு பின் வைக்கோலை மூடவேண்டும். பாத்திகளுக்கு தினசரி தண்ணீர் தெளிக்கவேண்டும். மேலும் நேரடியான சூரிய ஒளியினைக் கட்டுப்படுத்த பந்தலிட்டு ஒளியினைக் கட்டுப்படுத்தவேண்டும். விதைத்த 45வது நாளில் விதைகள் முளைத்துவிடும். பின் அவற்றினை இரண்டாம் நிலை நாற்றாங்கால் (அ) பாலித்தீன் பைகளில் நடவு  செய்யவேண்டும்.

காபி நாற்றங்கால்

பாலித்தீன் பைகளில் இரண்டாம் நிலை நாற்றாங்கால்

           
பாலித்தீன் பைகளில் வடிகால் வசதிக்குத் தேவையான துளையிட்டு அதனுள் 6:2:1 என்ற அளவில்  மண், மக்கிய தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையினை நிரப்பவேண்டும். 12 x 8 பரப்பளவில் 5000 நாற்றுக்களை உருவாக்க முடியும்.

பாலித்தீன் பை நாற்றங்கால்

 

பருவம்
ஜூன் - செப்டம்பர்

நடவு

நிழல் தரும் மரங்களைத் தவிர தேவையற்ற மரங்களை நீக்கிவிடவேண்டும். சரிவான நிலப்பகுதியில் அடுக்குப் பாத்தி அமைக்கவேண்டும். கோடை மழைக்குப் பின்னர் 1.25 - 2.5 மீட்டர் இடைவெளியில் 45 x 45 x 45 எடுக்கவேண்டும். குழிகளை நன்கு ஆறவிட்டு பின் மேல் மண்ணுடன் 500 கிராம் பாறை உப்பு (ராக்போஸ்ட்) இட்டு நடவு செய்யவேண்டும்.

நிழல்  தரும் மரங்களை நடவு செய்தல்

சில்வர் ஓக் மற்றும் கல்யாண முருங்கை மரங்களை நிழல் தரும் மரங்களாக நடவு செய்யவேண்டும். இந்த மரங்களை தென்மேற்கு பருவமழை (ஜுன்) தொடங்கும் பொழுது நடவு செய்யவேண்டும். கோடைக்காலங்களில் ஏற்படும் அனல் காற்றினை தடுக்க தண்டுப் பகுதியினை சுண்ணாம்பு (அ) கற்றாலை (அ) பாலித்தீன் பைகள் சுற்றி பாதுகாக்கலாம். மழைக்காலங்களில் தேவையற்ற கிளைகளை வெட்டி நீக்கிவடுதல் வேண்டும்.

நிழல் மரங்கள்


இடைவெளி
அரபி்கா காப்பி : இருபுறமும் 1.5 முதல் 2.0
சேன்ரேமன் (குட்டை இரகம்) : 1 x 1 மீட்டர்
ரோபஸ்டா காப்பி : இருபுறமும் 2.5 மீட்டர்

நீர் நிர்வாகம்

பொதுவாக காப்பிப் பயிரானது மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வரகின்றது. மேலும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தெளிப்பு நீர் (ஸ்பிரிங்ளர்) மூலம் நீர் செலுத்துவதன் மூலம் பூக்கள் மலர ஆரம்பிக்கும்.

உரமிடுதல்


இனங்கள்

பூக்கும் முன் மார்ச்
N:P2O5:K2O

பூத்ததற்கு பின்
 மே
N:P2O5:K2O

பருவமழைக்கு இடையில்
ஆகஸ்ட்
N:P2O5:K2O

பருவமழைக்கு பின்
அக்டோபர்
N:P2O5:K2O

மொத்தம்

அராபிகா

இளம் காபி நட்ட ஒரு வருடத்திற்கு பிறகு

15:10:15

15:10:15

---

15:10:15

45:30:45

நட்ட இரண்டு & மூன்று வருடத்திற்கு பிறகு

20:10:20

20:10:20

---

20:15:20

60:45:60

4 வது வருடம்

30:20:30

20:20:20

---

30:20:30

80:60:80

ஐந்து வருடத்திற்கு மேல் மகசூல் ஈட்டக்கூடிய காபி செடிகளுக்கும்

40:30:40

40:30:40

---

40:30:40

140:90:120

எக்டருக்கு ஒரு டன்னுக்கு மேல் மகசூல் ஈட்டக்கூடிய காபிசெடி

40:30:40

40:30:40

40:30:40

40:30:40

160:120:160

ரோபஸ்டா

எக்டருக்கு ஒரு டன்னுக்கு குறைவான மகசூல் தரக்கூடிய செடிகளுக்கு

40:30:40

---

---

40:30:40

80:60:80

எக்டருக்கு ஒரு டன்னுக்கு மேல் மகசூல் ஈட்டக்கூடிய காபிசெடிகளுக்கு

40:30:40

40:30:40

---

40:30:40

120:90:120

 

பின்நேர்த்தி

தேவையின் போது களை எடுத்தல்வேண்டும். மேலும், காய்ந்த இலைகளை நிலப்போர்வையாக இடவேண்டும். பருவமழை முடியும் தருணத்தில் (அக்டோபர் – நவம்பர்) ஒரு அடி ஆழத்திற்கு கொத்திவிடவேண்டும். இவ்வாறு செய்யும் போது இலை மற்றும் களையினை மண்ணில் புதையச் செய்து அதன் பின் மக்கச் செய்து அங்கக சத்துக்களை செடிகளுக்கு கிடைக்கச் செய்கின்றது. நோய் தாக்கப்பட்ட மற்றும் காய்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டி நீக்குதல் வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

வெள்ளை தண்டு துளைப்பான்

அரபிக்கா காப்பியில் குறைந்த அளவிலான நிழல் இருக்கும் பொழுது இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்குத் தேவையான லிண்டேன் பவுடரை (2 கிலோ) 180 லிட்டர் தண்ணீரில் கலந்த தண்டுப்பகுதியில் படுமாறு தடவுதல் வேண்டும். மேலும் துளைப்பகுதியில் மோனோக்குரோட்டோபாஸ் நனைந்த பஞ்சு கொண்டு மூடவேண்டும்.

வெள்ளை தண்டு துளைப்பான்

ஆண் இனக்கவர்ச்சிப் பொறி

 

காய் துளைப்பான்

சரியான தருணத்தில் அனைத்து காய்களையும் பறித்துவிடவேண்டும். அதிகமான நிழல் பகுதியினைக் குறைத்து விடுதல்வேண்டும். என்டோசல்பான் 35இசி மருந்தினை 3340 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மலர்ந்த 120-150 நாளில் அறுவடை செய்யலாம். எனவே பூச்சிக்கொல்லி பயன்பாட்டினை அதற்கேற்றவாறு செய்யவேண்டும்.

   

காய் துளைப்பான்

அறிகுறிகள்

ப்ரோகா பொறி


மாவுப்பூச்சி மற்றும் பச்சை செதில் பூச்சிகள்

மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த குயினால் பாஸ் 35 இசி 2 மில்லி லிட்டர் (அ) பென்தியான் 1 மிலி (லிட்டர்) (அ) பெனிட்ரோதையான் 1 மிலி x லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 300 கிரிப்டோலிமேஸ் மான்ட்ரோசரி என்றும் கொண்றுண்ணி வண்டுகளை விட வேண்டும்.
வெர்டிசிலியம் லெகானி பூசுண வித்துக்களை 6 x106 எனும் அளவில் தெளிக்கவும் (அ) கீழ் கொடுக்கப்ட்டுள்ள ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்.

பூச்சிக்கொல்லி

அளவு

மோனோகுரோடோபாஸ் 36 % SL

1.5 மிலி/லி.

ஆக்ஸிடெமடான் – மிதைல் 25 % EC

2.5 மிலி/லி.

குயினல்பாஸ் 25 % EC

2.5 மிலி/லி.

இலைத்துளைப்பான்
2.5 மி.லி/ லிட்டர் ஆக்ஸிடெமடான் மிதைல் 25% தெளிக்கவும்
.

பச்சை செதில் பூச்சிகள்

 

நோய்கள்:

ஜீன் மாதத்தில் 0.5% போர்டாக்ஸ் கலவையையும் அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 0.02% டிரையடயோனிபானையும் டிசம்பர் மாதத்தில் 0.5% போர்டாக்ஸ் கலவையையும் தெளிக்கவும்.

துருநோய்

பூக்கும் தருணத்திற்கு முன்னர் (பிப்ரவரி - மார்ச்) போர்டோக்கலவையும் அதனைத் தொடர்ந்து 0.03 சதவிகிததம் ஆக்சிகார்பாக்சின் மருந்தை பருவ மழைக்குப் பின்னர் (மே - ஜுன்) தெளிக்கவேண்டும்.

துருநோய்

கருப்பு அழுகல் நோய்

பருவமழை இடைப்பட்ட காலக்கட்டங்களில்  1 சதவீதம் போர்டோக்கலவை தெளிக்கவேண்டும்.

கருப்பு வேர் அழுகல் நோய்

தாக்கப்பட்ட செடிகளைத் தோண்டி எடுத்த எரித்து விடவேண்டும். தாக்கப்பட்ட செடிகளில் 30 நெ.மீ ஆழக்குழி எடுக்கவேண்டும். பின் அவற்றுள் 18 மாதம் கழித்து நடவு செய்யவேண்டும்.

அறுவடை

அறுவடை நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கும். காப்பி பழங்களை பழுத்த உடன் அறுவடை செய்யவெண்டும். சதைப்பற்ளினை நீக்குவதற்கு முன் பழுக்காத காய்களைப் பிரித்து எடுக்கவேண்டும். இதனைத் தனியாக உலர வைத்து செர்ரி காப்பியாக பயன்படுத்தலாம்.

தேர்ந்தெடுத்து பறித்தல் : அக்டோபர் பிப்ரவரி மாதங்களில் பழுத்த பழங்களை பறிக்கவும்.

முக்கிய அறுவடை: டிசம்பர் மாதங்களில் நன்கு முதிர்ந்த பழங்களை பறிக்கவும்  அதிக மகசூல் இவ்வறுடையில் கிடைக்கும்.

உருவுதல்: மீதம் உள்ள காய் மற்றும் பழங்களை அறுவடை செய்யவும்.

சுத்தப்படுத்துதல் : கீழே உதிர்ந்துள்ள காய் பழங்களை சேகரிக்கவும்.

சதைப்பகுதியினை நீக்குவதற்கு முன் பழுக்காத காய்களைப் பிரித்து எடுக்கவேண்டும். இதனைத் தனியாக உலர வைத்து செர்ரி காப்பியாக பயன்படுத்தலாம்.

முதிர்ச்சியற்ற பழங்கள் முதிர்ந்த பழங்கள்

மகசூல் : ஒரு எக்டரிலிருந்து 750-1000 கிலோ மகசூல் அறுவடை செய்யலாம்.

காபி பதப்படுத்துதல் :

ஈரப் பதப்படுத்துதல்


சுத்தம் செய்தல் உலர்த்துதல் நிறம் பிரித்தல்


காபி - வறுத்த நிறம் காபிக்கொட்டை - வகைகள்

காபி தரங்கள்


காபின் நீக்கிய காபி நறுமண காபி


சந்தை தகவல்

பயிர் செய்யும் மாவட்டங்கள்

திண்டுக்கல், நீலகிரி, சேலம் மற்றும் தேனி

முக்கிய சந்தைகள்

குன்னூர், போடிநாயக்கனூர், மேட்டுப்பாளையம்

வகைகள்

அராபிகா, ரொபஸ்டா

தரம்

கழுவிய, கழுவப்படாத, உலர்த்தப்பட்ட, உடனடி, அரைத்த, வறுத்த, சிறப்புத் தன்மை


 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013