||| | | | | |
தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: மரு

இரகங்கள் : உள்ளூர்

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நன்கு வடிகால் வசதி உள்ள மணல் கலந்து மண்ணில், அதிக நீரும், குளிரான பருவம் உள்ள சூழ்நிலையில் நன்கு வளரும்.
விதையும் விதைப்பும்

இனவிருத்தி மற்றும் நடவு : டிசம்பர், ஜனவரி மாதங்களின்போது முந்திய பருவத்தில் உள்ள செடியிலிருந்து பெறப்பட்ட குச்சிகளை 30 x 15 செ.மீ இடைவெளியில் பார்களில் இருபுறமும் நடவேண்டும்.

நீர்நிர்வாகம்

நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : தழை, மணி, சாம்பல் சத்து 55:110:60 கிலோ / எக்டர் என்ற விகிதத்தில் 25 டன் தொழு உரத்துடன் அடியுரமாக இடவேண்டும்.

மேலுரம் : முதல் அறுவடைக்குப்பின் எக்டருக்கு 55 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

 

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

SSP

மரு

அடியுரம்

55

110

60

231

70

313

 

மேலுரம்

55

0

0

0

120

0

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

அசுவினி - டை மெத்தோயேட் 30 இசி அல்லது மீத்தைல் டெமட்டான் 25 இசி இரண்டு மில்லி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பயிர்க்காலம் : இரண்டு வருடங்கள்

அறுவடை

தழைகளை முதல் அறுவடையாக 100வது நாளில் பறிக்கலாம். அதன் பின்பு 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் அறுவடையைத் தொடர்ந்து செய்யலாம்.

மகசூல் : 10,000 கிலோ தழைகள் / வருடம் / எக்டர்.

 

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014