தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: செண்டுமல்லி

இரகங்கள் : எம்.டி.யு 1, உள்ளூர் மஞ்சள் மற்றம் ஆரஞ்சு வகைகள், பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடன் கூடிய எல்லா வகை மண்களிலும் பயிரிடலாம். கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். களர் மற்றும் உவர் நிலங்கள் சாகுபடிக்குஏற்றதல்ல. செண்டுமல்லிக்கு சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம். இப்பயிரை ஆண்டு முழுவதும் அனைத்துப் பருவங்களிலும் பயிர் செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்னர் 15 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும்

பயிர்ப் பெருக்கம் : விதைகள்

விதையளவு : 1.5 கிலோ விதைகள் / எக்டருக்கு

நடும் பருவம் : ஆண்டு முழுவதுதம் பயிரிடலாம். இருந்தாலும் ஜுன் - ஜுலை மாதங்கள் நடவு செய்ய மிகவும் ஏற்றது.

நாற்றாங்கால் தயாரித்தல் : நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கடைசி உழவின் போது மக்கிய டதொழு உரம் இட்டு மண்ணோடு நன்கு கலக்கிவிடவேண்டும். விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தியாக செய்த பிறகு 15 செ.மீ இடைவெளியில் விதைகளை வரிசையாக பாத்திகளில் விதைத்து மண் கொண்டு மூடி, உடன்நீர்ப் பாய்ச்சவேண்டும். விதைகள் 7 நாட்கள் முளைத்து விடும். 30 நாட்கள் ஆனவுடன் நாற்றுக்களைப் பிடுங்கி நடவு செய்யவேண்டும்.

நடவு : வரிசைக்கு வரிசை 45 செ.மீ,செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியல் நாற்றுக்களை நடவேண்டும். வயதான நாற்றுக்களைத் தவிர்த்து விட்டு நல்ல வாளிப்பான் ஒரு மாத வயதான நாற்றுக்களையே நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒரு எக்டருக்க 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்கள அடியுரமாக இடவேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 45 சிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரத்தினை இட்டு மண் அணைக்கவேண்டும்.

 

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

செண்டுமல்லி

அடியுரமாக

45

90

75

289

35

94

 

45 நாட்கள் கழித்து

45

0

0

0

98

0

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

தேவை ஏற்படும் போது கண்டிப்பாக களை எடுக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் ஒரு தண்ணீர், பிறுக மூன்நாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். நீர் தேங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
நுனி கிள்ளுதல் : நட்ட 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் கிளைகள் அதிகம் தோன்றி அதிகமான பூ மொக்குகள் உண்டாகும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சிவப்பு சிலந்தி : இப்பூச்சிகள் செடிகளின் இலைகள் மற்றும் பூக்களிலிருந்து சாற்றினை உறிஞ்சும். சேதம் அதிகமாகும் போது பூக்கள் காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த கெல்த்தேன் என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய் : முதலில் இலைகளில் வட்டமான சிவப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். பிறகு புள்ளிகள் பெருகி இலைகள் கருகி விடும். இதனைக் கட்டுப்படுத்த பெவிஸ்டின் 1 கிராம் மருன்தை 1 லிட்டர்  தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

வேர் அழுகல் : வளர்ந்த செடிகளையும், நாற்றுக்களையும் தாக்கும். இந்நோய் பாதித்தால் வேர் அழுகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த லிட்டர் நீருக்கு 1 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து செடியினைச் சுற்றி ஊற்றிவிடவேண்டும்.

வயது : 130-150 நாட்கள்

அறுவடை

நட்ட 60ம் நாளில் இருந்து பூக்க ஆரம்பித்துவிடும். 80 முதல் 90 சதவீதம் வரை மலர்ந்த பூக்களை 3 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

மகசூல் : ஒரு எக்டருக்கு 18 டன் பூக்கள் கிடைக்கும்.