||| | | | |
தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: பால்மரோசா

இரகங்கள்
டிரிஸ்னா, பிஆர்சி 1, ஐடபுள்யூ 31245, 3244, ஒபிடி 1,2 மற்றும் ஆர்ஆர்எல் (பி) – 77.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
நல்ல வடிகால் வசதியுடைய பொறை மண் சாகுபடிக்குச் சிறந்தது. மிதமான வெப்பநிலையும், ஆண்டு மழையளவுக்குச் சிறந்தது. மிதமான வெப்பநிலையும், ஆண்டு மழையளவு 150 செ.மீ இருக்கவேண்டும்.

விதை மற்றும் விதைப்பு
விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.

விதையளவு : ஒரு எக்டர் சாகுபடி செய்ய 2.5 கிலோ விதை தேவைப்படுகின்றது. விதைகளை நாற்றாங்களில் 15-20 செ.மீ இடைவெளியில் விதைத்து, நாற்றுக்கள் 3-4 வாரங்கள் ஆன உடன் நடவுவயலுக்கு எடுத்துச்செல்லவும். இப்பயிரினை விதைக்கட்டைகள் மூலம் உற்பத்தி செய்யலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 28,000 வேர்க்கட்டடைகள் தேவைப்படும். விதையினைக் காட்டிலும் இதனின் வளர்ச்சி குறைந்தே காணப்படும்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்பொது ஒரு எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்கவேண்டும். பின் நாற்றுக்களை 60 நெ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : ஒரு எக்டருக்கு 20:50:40 கிலோ தழை, மணி, மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.
மேலுரம் : நடவு செய்த 3,6 மற்றும் 9வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 15 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
நடவு  செய்தவுடனும், நடவு செய்த மூன்றாவது நாளில் நீர்ப்பாசனம் செய்வது அவசியம்.  மேலும் மண்ணின் ஈரப்பதத்திற்குகேற்ப நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி
இனம் வளர்ச்சிப் பருவத்தில் ஓரிரு முறை களையெடுத்தல் அவசியமாகும். பின்பு மண்ணைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு
பூச்சி மற்றும் நோய்கள் இப்பயிரினைத் தாக்குவதில்லை. சாறு உளிஞ்சும் அசுவுனிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 2 மில்லி டைமெத்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை
முதல் அறுவடை நடவு செய்த 3-4வது மாதங்களிலும் அதன் பின்னர் 3-4 மாத இடைவெளியில் அறவடை செய்யலாம்.

மகசூல்

இலைப்பாகம் : ஒரு வருடத்திற்கு 20-30 டன் / எக்டர்
எண்ணெய்
முதல் வருடம்                              -     20 கிலோ / எக்டர்
இரண்டாம் வருடம்                    -     60 கிலோ / எக்டர்
மூன்றாம் மற்றும் நான்காம் வருடம்       -     70 கிலோ / எக்டர்

 

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008