| பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            நாற்றழுகல்:  
               
அறிகுறிகள்  
              
                - நாற்றழுகல் தக்காளியில் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. அதாவது முளைக்குமுன் மற்றும் முளைத்தபின் ஏற்படுகிறது.
 
                - முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்று இறந்துவிடுகிறது.
 
                - முளைக் குருத்து முற்றிலுமாக அழுகிவிடும்.
 
                - முளைத்த பின் நிலையில் இளம் திசுக்கள் நில மட்டத்திலேயே நோய்த் தொற்று ஏற்படுகிறது.
 
                - பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாகவும், நீர்த் தோய்ந்தும் காணப்படும். நாற்று தலை கீழே வீழ்ந்து அல்லது உடைந்து விழுந்துவிடும்.
 
               
              
              
                
                  
                      | 
                      | 
                      | 
                   
                  
                    | ஆரோக்கியமான தாவரம்  | 
                    பாதிக்கப்பட்ட தாவரங்கள் | 
                    பாதிக்கப்பட்ட நாற்று | 
                   
                  | 
               
               
              மேலாண்மை 
              
                - உயர்த்தப்பட்ட நாற்றங்கால் மேடைகளை உருவாக்க வேண்டும்.
 
                - தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் சரியான வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
 
                - காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2% அல்லது போர்டிக்ஸ் கலவை கொண்டு நனைக்க வேண்டும்.
 
                - டிரைக்கோடெர்மா விரிடி (4கி / கிலோ விதை) அல்லது தைரம் (3கி / கிலோ விதை) விதை சிகிச்சை அளிப்பது ஒன்றே முளைக்குமுன் ஏற்படும் நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
 
                - மேகமூட்டமான வானிலை இருக்கும்பொழுது  0.2% மெட்டாலிக்ஸில் தெளிக்கவும்.
                  
 
                 
                | 
           
          |