பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மரவள்ளி மாவுப்பூச்சி: பாராகாக்கஸ் மார்ஜிநேட்டஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:

  • மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்ற இலையின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். சாற்றை உறிஞ்சும்பொழுது மரவள்ளியில் நச்சுப்பொருளை உட்செல்லும்
  • நுணிக்குருத்துகள் உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும்
  • செடியின் நுணியிலுள்ள இலைகள் ஒன்றாக இணைந்து “முடிக்கொத்தாக” தோற்றமளிக்கும்
  • இடைகணுக்குள் நீளம் குறைந்துவிடும். தண்டுகள் சிதைவடைந்து காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • மாவுப்பூச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  • உடல்முழுவது சிறு நூலிழைகள் காணப்படும். மேலும் மெழுகு போன்ற வெண்பூச்சு மூடியிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • மாலத்தியான் அல்லது ஃபெனிட்ரோதியான் @1மி.லி/லிட்டர் தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016