பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மரவள்ளி செதில் பூச்சி: அயோனிடோமைடிலஸ் ஆல்பஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • செடியின் தண்டு பகுதிகளை தாக்கும்
  • தாக்கப்பட்ட இலைகள் நிறம்மாறியும், உலர்ந்தும் விடும்
  • செடியின் வளர்ச்சி குன்றிவிடும்

பூச்சியின் விபரம்:

  • உறுதியான செதில்கள், நீள்வட்டவடிவில் தசைகள் போன்று இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பூச்சிகளற்ற (செதில்பூச்சிகள்) கரணைகளை நடவுக்கு தேர்வு செய்ய வேண்டும்.
  • தாக்கப்பட்ட தண்டினை அழிக்கவும்.
  • வயலில் காக்சோநிலிட் வகை பொறி வண்டுகளின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும்
  • மீதைல் டெமிட்டான் 0.25 சதம் தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016