புகையிலையின்  இலைச்சுருட்டை நோய்: புகையிலை இலைச்சுருட்டை நச்சுயிரி 
              அறிகுறிகள்  
                - நோயினால்  பாதிக்கப்பட்ட செடி குட்டையாக இருக்கும். இலைப்பரப்பளவு பெருகாமல் சிறுத்து விடுவதுடன்  சுருக்கமுற்றுக் காணப்படும்.
 
                - இலையின்  ஒரு பகுதியோ முழுதுமோ சுருட்டையாகியிருக்கும்.
 
                - இலைகள்  தடித்து ஒடியும் தன்மையுடையதாகவும் இலைகளின் ஓரங்கள் கீழ்நோக்கிச் சுருண்டும் இருக்கும்.
 
                - இலை  நரம்புகள் அடர்பச்சையாகவும் பெருத்தும் காணப்படும்.
 
                - இலை  நரம்புகளின் அடிப்பாகத்தில் வெளி வளர்ச்சியும் காணப்படும்.
 
               
              கட்டுப்பாடு 
            
              - இந்நோயினால்  பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் நாற்றுக்களை வயல்களில் பார்த்தவுடன் களைந்தெரிய வேண்டும்.
 
              - நோய்  தாக்காத ஆரோக்கியமான நாற்றுக்களை வைத்து இடத்தை நிரப்ப வேண்டும்.
 
              - அதிகமான  நோய் தாக்கிய இடங்களில் சணப்பையை வேளிப்பயிராக பயிரிட வேண்டும்.
 
              - ஒரு  ஹெக்டருக்கு பண்ணிரெண்டு மஞ்சள் பொறியை (ஆமணக்கு எண்ணெய்யை தடவி) பொருத்த வேண்டும்.
 
              - முதல்  தெளிப்பு : குளோர்பைரிபாஸ் 20% @ 25 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.
 
              - இரண்டாவது  தெளிப்பு : மோனோகுரோட்டோபாஸ் 36% @ 15 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க  வேண்டும்.
 
              - மூன்றாவது  தெளிப்பு : அசிடேட் 75% @ 10 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
 
              - நான்காவது  தெளிப்பு : டெமட்டான் - எஸ் மீதைல் 25% @ 15 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து  தெளிக்க வேண்டும்.
 
              - மாலை  நேரங்களில் இம்மருந்தை தெளிக்க வேண்டும்.
 
           
             | 
             
               
             
               |