பழுப்பு இலைப்புள்ளி நோய்: அல்டர்னேரியா லாங்கிபஸ்  
                அ.டெனுயிஸ் அ.அல்டர்னேட்டா  
                அறிகுறிகள் 
            
              - இந்நோய்  நடவு வயலில் அதிகமாக காணப்படுகிறது.
 
              - இந்நோய்  அடியில் உள்ள இலைகளிலும் பின்பு முதிர்ந்த இலைகளிலும் சிறிய பழுப்பு நிற கோடுகளாக  காணப்படுகின்றன. இவை மேல் உள்ள இலைகளுக்கும் இலைக்காம்புக்கும், காய்களுக்கும் பரவுகின்றன.
 
              - வெப்பமான  காலநிலையில், அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் இப்புள்ளிகள் பெரியதாக பழுப்பு நிறமாக மாறி  வெளிப்புற கோடுகளை தேரற்றுவிக்கின்றன.
 
              - அதிகமாக  பாதிக்கப்பட்ட இலைகளில் புள்ளிகள் பழுப்பு நிறமாகவும், பெரியதாகவும் மாறுகின்றன.
 
              - முதிர்ந்த  நிலைகளை அடையும் இலைகளில் இலைப்புள்ளிகள் அடர்ந்த மஞ்சள் நிறத்தை புள்ளியைச் சுற்றிலும்  தோற்றுவிக்கின்றன. இதற்கு காரணம் அல்டரின் எனப்படும் ஒரு வகை நச்சுத்தன்மை உடைய பொருளை  இப்பூஞ்சான் உற்பத்திசெய்வதால்.
 
           
            கட்டுப்பாடு 
            
              - பாதிக்கப்பட்ட  செடிகளை முதலில் அகற்ற வேண்டும்.
 
              - அதிகமாக  பாதிக்கப்பட்ட வயல்களில் மீண்டும், மீண்டும் புகையிலை விளைவிப்பதை தவிர்க்க வேண்டும்.
 
              - பூசணக்கொல்லியான  மேனப் 0.2% வாராவாரம் தெளிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
 
              | 
             
               
             
               |