கருந்தண்டழுகல் நோய்: ஃபைட்டோ  ப்தோரா பாரசைட்டிகா நிக்கோட்டியானே 
                அறிகுறிகள் 
            
              - இந்நோய்  நாற்றாங்காலிலும் நட்ட வயலிலும் காணப்படுகிறது. இந்நோய் பூசணம் தரை மட்டத்திலுள்ள  தண்டுப் பகுதியைப் பாதிக்கிறது.
 
              - குளுமையாக  உள்ள நேரங்களில் தண்டு அழுகியும் வறட்சி நேரங்களில் நாற்றுக்கள் பழுப்பு நிறமாகிக்  காய்ந்து விழுவதையும் காணலாம்.
 
              - பூசணம்  தண்டிலிருந்து மேலும் கீழும் பரவி நோயினால் நாற்றுக்கள் இறந்துவிடச் செய்கின்றது.
 
              - நோயுற்ற  நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்துவதால் புகையிலை நட்ட வயலில் இந்நோய் ஏற்படக் காரணமாக  அமைகிறது.
 
              - நோயுற்ற  செடியின் அடி இலைகள் மஞ்சளாகி சுருங்கி தண்டிலிருந்து தொங்கிக் காணப்படும். நாளடைவில்  நோயுற்ற செடிகள் காய்ந்த விடுகின்றன.
 
              - நோயுற்ற  செடியில் தண்டின் மூலமானவோ வேரின் மூலமாகவோ தண்ணீரோ உணவுப் பொருட்களோ மற்றும்  பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை.
 
              - நோயுற்ற  செடியைப் பிடுங்கிப் பார்த்தால் அதன் தண்டுப் பகுதியும் வேர்ப்பகுதியும் கருமை நிறமடைந்து  அழுகி இருப்பதை நன்கு அறியலாம்.
 
           
            
            
              - இளம்  பருவத்திலேயே நோய் தோன்றியிப்பின் தரை மட்டத்திலிருந்து தண்டின் முழுப்பகுதியும்  அழுகியிருக்கும். இலைகளில் பெரிய பழுப்பு நிற வட்டங்களை உடையப் புள்ளிகளைக் காணலாம்.  இவ்வறிகுறி இந்நோயினால் ஏற்படும் இலைக்கருகல் காணலாம்.
 
              - இவ்வாறு  கருகிய இலைகள் பதனிட்ட பிறகு தரம் குறைந்து காணப்படுகின்றன. நோயுற்ற செடியிலுள்ள தண்டை  நீளவாக்ிகல் பிளந்து பார்த்தால் அவற்றின் உட்பகுதியில் இருக்கும் தக்கை கருமை நிறமாக  மாறுவதுடன் குறுக்கு வாக்கில் சில்லகளாகக் காணப்படும்.
 
             
            கட்டுப்பாடு 
            
              - நாற்றாங்காலை  0.4 சதவிகிதம் போர்டோக் கலவையினால் விதைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தெளிக்கவேண்டும்.
 
              - அதன்  பின்னர் பூசணக் கொல்லியான காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதம் தெளிப்பதன் மூலம்  இலைக்கருகல் மற்றும் நாற்றழுகல் நோயைக் குறைக்கலாம்.
 
              - நாற்றுக்கள்  நடவு செய்யும் போது நாற்றுக்களின் தண்டுகளில் கருப்பு நிறமுடைய புள்ளிகள் காணப்படுகிறது.
 
              - பாதிக்கப்பட்ட  செடிகளை 0.4 சதவிகிதம் போர்டோக் கலவையினால் தெளிப்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதைக்  குறைக்கலாம்.
 
              - மேங்கோசெப்  0.2 சதவிகிதம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.2 சதவிகிதம் என்ற அளவில் தெளிக்கவும்.
 
              |