பயிர் பாதுகாப்பு :: சர்க்கரைவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
ஆமை வண்டுகள்:  ஆஸ்பிடோமார்ஃபா மிலியாரிஸ், கேசிடா சர்க்கம்டேட்டா, கைரிடா ஃபைஃபங்டேட்டா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இளம் புழுக்கள் இலைகளை அரித்து சல்லடைபோல் செய்திருக்கும்.
  • வளர்ந்த புழுக்கள் மற்றும் வண்டுகள் இலைகளில் வட்டவடிவ துளையிட்டு சாப்பிடும்.

பூச்சியின் விபரம்:

  • வண்டின் புழு: நீள்வட்ட தட்டையான மஞ்சள் நிற வடிவமுடையது. உடல்முழுவதும் முட்கள் கொண்டிருக்கும்.
  • கூட்டுப்புழு: புழுக்களை விட முட்கள் குறைவாக கொண்ட்ருக்கும். இலைகளின் மேற்பரப்பில் ஒட்டியிருக்கும்.
  • வண்டுகள்:
    • ஆஸ்பிடோமாஃபா மிலியாரிஸ் : வண்டு தட்டையாகவும், நீள்வட்ட வடிவில் இருக்கும். உடலின் மேல்பாகத்தில் நடுவே சிவப்பாகவும் சுற்றிலும் நிறமற்றதாகவும் இருக்கும்.
    • கேசிடா சர்க்கம்டேட்டா : வண்டு தட்டையாகவும் நீளவட்டவடிவில் இருக்கும், உடல் பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலும் அதன் மேற்பரப்பில் பச்சை நிறத்தில் பிறை நிலாவடிவ கோடுகள் காணப்படும்
    • கைரிடா பைஃபங்டேட்டா : உலோக பச்சை  நிற  உடலின் மேற்பரப்பில் 6 கரும்புள்ளிகளை   கொண்டிருக்கும்.
Sugar Potato Sugar Potato
Sugar Potato Sugar Potato

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • வண்டின் புழுக்கள் சேகரித்து அழிக்கவும்
  • ஏக்கருக்கு மாலத்தியான் 200மி.லி தெளிக்கவும்
  • பூச்சி தாக்காத கிழங்குகளை உபயோகப்படுத்தவேண்டும்.
  • மஞ்சள் ஒட்டும் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ 21 நாட்களுக்கு ஒரு முறையாக, கிழங்குகள் எடுக்க ஆரம்பித்ததலிருந்த தெளிக்கவேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015