பயிர் பாதுகாப்பு :: சர்க்கரைவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கிழங்கு கூண் வண்டு : சைலஸ ்ஃபார்க்கேரியஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:

  • கொடிகள் வீக்கமடைந்தும், உருக்குலைந்தும் இருக்கும். சிலநேரங்களில் கொடிகளில் வெடிப்புகள் காணப்படும்.
  • தாக்கப்பட்ட கொடிகள், நிறமாறியும், வெடிப்புகளும் இருக்கும் மேலும் வாடியும் காணப்படும்.
  • தாக்கப்பட்ட கிழங்குகளில் குழிகளும், துளைகளும் கொண்டிருக்கும்.
  • தாக்கப்பட்ட கிழங்குகள் நுரைப்பஞ்சு போன்றும், கரும்பழுப்பு நிறத்திலும் தோற்றமளிக்கும்.
  • தாக்கப்பட்ட கிழங்குகள் மேற்பகுதியிலிருந்து அழுக ஆரம்பிக்கும். மேலும் துர்நாற்றத்தையும் கசப்பான சுவையும் உருவாக்கும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: மஞ்சள் கலந்த வெண்ணிற, நீர்வட்ட வடிவில் இருக்கும். கொடி மற்றும் வேர்களில் சிறு குழியை ஏற்படுத்தி அதனுள் முட்டையிட்டு மேற்படுகுதியை தாய் வண்டின் கழிவுகளால் மூடி விடும்.
  • புழு: வெண்ணிற கால்களற்ற பழுப்பு நிறத்தலையுடன் உடைய வண்டினப்புழு.
  • கூட்டுப்புழு: வெண்ணிறத்தில் கொடிகளின் துளைகளில் இருக்கும்.
  • வண்டு: வண்டு எறும்பைப் போல் உடல் சிறுத்து நீளமாக கூர்மையான மூக்குடன், கருநிற தலையும், கருஞ்சிவப்பு உடலும் கொண்டிருக்கும்.
Sugar Potato Sugar Potato
Sugar Potato Sugar Potato

கட்டுப்படுத்தும் முறை:

  • பயிர் சுழற்ச்சிக்கு நெல்லை பயிரிட வேண்டும்
  • பூச்சிகளற்ற கொடிகளை நடவுக்கு தேர்வு செய்ய வேண்டும்
  • முதிர்ச்சியடைந்த செடிகளை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும்
  • மண்ணில் வெடிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்
  • அறுவடை செய்து 48 மணிநேரம் கழித்து பரவல் நீர்பாய்சனம் மூலம் நீர்பாய்ச்சி வயலில் மீதமுள்ள செடிகளை அழுகச் செய்தும், வண்டுகளை மூழ்கடித்தும், வண்டுகளின் எண்ணிக்கை குறைக்கலாம்
  • மாற்று உணவுப்பயிர்களான சர்க்கரை வள்ளி குடும்பத்தைச் சேர்ந்த (Ipomea sp) செடிகளை அகற்ற வேண்டும்
  • நடவுக்கொடிகளை பெனிட்டோரோதையான் 50 EC @2 மி.லி/லி நீர்கலவையில் நனைத்து நட வேண்டும்
  • ஹெக்டேருக்கு 3 டன் யுப்டோரியம்இலைகளை நிலப்போர்வையாக நட்ட 30 நாட்கள் கழித்து போட வேண்டும்
  • நட்ட 50வது மற்றும் 80வது நாட்களில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி ஆங்காங்கு வயலில் போட்டு வைத்து அதற்கு கவரப்படும் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம்
  • விளக்குப்பொறி வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்
  • விளக்கு பொறிகளை 5 மிட்டர் இடைவெளியில் வயலில் மாலை 4 மணியளவில் வைத்து விட.பிறகு அடுத்த நாள் காலையில் பொறியில் விழுந்துளள் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம்
  • நட்ட 50வது நாள் கொடிகளுக்கு மண் அனைக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015