பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைத்தத்துப்பூச்சி : அம்ரசக்கா பிகுட்டில்லா பிகுட்டில்லா

அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப் பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சுகின்றன
  • இலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறுகின்றன
  • தீவிர தாக்குதலின் போது, இலைகள் உள்நோக்கி சுருளும்.
  • இலை விளிம்புகள் இளம் இளஞ்சிவப்பு கலந்த பழுப்புநிறமாக மாறும்

பூச்சியின் விபரம்:

  • இளம் பூச்சிகள் – இளம் பச்சை நிறத்தில்,  கண்ணாடி போன்று இருக்கும்.‘V’ வடிவத்தில் இரண்டு கரும்புள்ளிகள் மேற்பக்கத்திலும், ஒரு கரும்புள்ளி முன் இறக்கையிலும் காணப்படும்.
  • பூச்சிகள் : பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில், ‘V’ வடிவத்தில் இரண்டு கரும்புள்ளிகள் மேற்பக்கத்திலும், ஒரு கரும்புள்ளி முன் இறக்கையிலும் காணப்படும்.

 

கட்டுப்பாடு :

  • இமிடாகுளோபிரிட் 70 WS 7 கி/கி.கி என்ற அளவில் விதைப்பதற்கு முன்பு விதை நேர்த்தி செய்யவேண்டும்.இதனால் பயிர்ல் 7 வாரங்களுக்கு பூச்சியின் தார்ககுதல் இருக்காது
  • பின்வரும் பூச்சிக்கொல்லி ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
    • இமிடாகுளோபிரிட் 70% WS 490 மி.லி/எக்கடர்
    • இமிடாகுளோபிரிட் 17.8% SL 100 மி.லி/எக்கடர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015