பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பீகார் கம்பளிப் பூச்சி : ஸ்பைலோசோமா அப்லிக்வா

அறிகுறிகள்:

  • இளம்புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் காணப்படும். இலை மிகத் தீவிரமாக இலைகளை உண்ணும்.
  • தீவிரத் தாக்குதலின் போது இலைகள் உதிர்ந்துவிடும்
  • தாக்கப்பட்ட இலைகள் காய ஆரம்பிக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இலையின் அடிப்புறத்தில் கூட்டமாக இடப்படும்
  • புழு: நீளமாக மஞ்சள் முதல் கருப்பு நிறமுடன் முடிகளால் சூழப்பட்டிருக்கும்
  • பூச்சி: பழுப்புநிறத்துடன், சிவப்பு நிற வயிறுடன் காணப்படும்.இளஞ்சிவப்பு நிற இறக்கைகளுடன், எண்ணற்ற கரும்புள்ளிகளுடன் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • ஆழமாக கோடை உழவு செய்தல்
  • நன்றாக மக்கிய உரங்களை பயன்படுத்துதல்
  • பட்டாணி பயருடன் 2:1 என்ற விகித்தில் ஊடு பயிரிடலாம்
  • புழுக்களை சேகரித்து, அழிக்க வேண்டும்.
  • பேசலோன் 35 கிகி 1000 மிலி/ஹெக்டர் என்ற அளவில் தெளித்தல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015