| பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            கட்டைப் பயிர் குட்டை நோய்: லீஃப்சோனியா ஷைலி 
                
                  அறிகுறிகள்:
                    
                      - நோய் தாக்கப்பட்ட கரும்பு உயரம் குறைந்து, குறுகிய கணு இடைவெளியுடன் தடிமன் மெலிந்து காணப்படும்.  இது மறுதாம்புப் பயிரில் மேலும் பாதிக்கப்படும்.    
 
                      - நோய் தாக்கப்பட்ட கரும்பினை வெட்டி பிளந்து பார்த்தால் கணுப்பகுதியில் ஊசி நுனி அளவில் ஆரஞ்சு நிறப் புள்ளிகள் போன்ற பாக்டீரியா நுண்ணுயிர் தென்படும். 
 
                      - இக்கரும்பில் அதிகத் சோகைகள் தோன்றுவதில்லை.  துார் அதிகமாக உண்டாகாது.  மிக மெதுவாகவே இந்நோய் சாறின் மூலம் பரவுகிறது.  தாக்கப்பட்ட பயிர்களின் வளர்ச்சி மெதுவாக இருக்கும்.
 
                     
                     | 
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                       
                    
                      |   | 
                      வளர்ச்சி குன்றிய கரும்பு | 
                        | 
                      ஊசி நுனி அளவில் ஆரஞ்சு நிறப் புள்ளிகள்  | 
                       
                    | 
                 
                
                  நோய்க்காரணி:
                    
                      - லீஃப்சோனியா ஷைலி துணை உயிரி, சிறிய காற்றில் பரவும் பாக்டீரியம், இந்த உயிரினம் முன்பு கிளாவிபாக்டர் என அழைக்கப்பட்டது. 
 
                                         கட்டுப்படுத்தும் முறை: 
                    உழவியல் முறைகள்:
                    
                    
                      - ஆரோக்கியமான கரணைகளை விதைகளுக்குப் பயன்படுத்தவும்.
 
                      - சரியான வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.     
 
                      - முளைக்காமல் உள்ள கட்டைகளை நீக்கி, இடைவேளைகளிள் நல்ல நாற்றுக்களை அவ்விடத்தில் நட வேண்டும்.
                     
                       
                      | 
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                       
                    
                      |   | 
                      லீஃப்சோனியா ஷைலி  | 
                        | 
                      நுண்ணிய பார்வை | 
                       
                    | 
                 
                
                  இயந்திர முறை: 
                    
                      - நடவுக் கரணைகளை 50° செ நீராவியில் 2 மணி நேரம் வைத்துப் பின் நடுவது நல்ல பலன் தரும். 50 செ க்கு அதிகமான வெப்பநிலை கரும்பினை பாதிக்கும். அதற்குக் குறைவான வெப்பநிலை கிருமிகளை அழிக்காது.
 
                      - விதைக்கரணைகளை நீராவி கொண்டு நேர்த்தி செய்தல் நன்று.  விதை கரணை வெட்டப்பட்ட பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் அவசியம்.
 
                     
                    வேதியியல் முறை: 
                    
                      - லைசால், டெட்டால், மிரால் மற்றும் ராக்கால் இவற்றில் ஏதேனும் ஒரு கிருமி நாசினியைப் பயன்படுத்தலாம்.  குறைந்தது 5 நிமிடமாவது விதைக்கரணைகளை இம்மருந்தில் நனைத்துப்பின் நட வேண்டும்.
 
                      | 
                 
                
                  Content validators:   
                  Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.  
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.   
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115. 
  | 
                 
                | 
           
       
  |