| பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            செவ்வழுகல் நோய்: குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ் 
                
                  அறிகுறிகள்:
                    
                      - இந்நோய் தாக்கப்பட்ட கரும்பின், 3 அல்லது 4வது இலைகள் முதலில் ஆரஞ்சு நிறம் கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.  பின் சோகைகள் கீழிருந்து மேலாகக் காய ஆரம்பிக்கும்.  
 
                      - பூசண வித்துக்கள் இலையின் உள்ளே சென்று, நடுநரம்பில் அடர்சிவப்பு நிறப்புள்ளிகளைக் காணலாம். பின்பு இலைகளிளும் தேன்றும்.
 
                      - வெளிப்புற அறிகுறிகள், நோய் தாக்கப்பட்ட 16-21 நாட்களுக்குப் பிறகே தெரிய வரும்.
 
                      - கரும்பைப் பிளந்து பார்த்தால் உட்பகுதியில் சிவப்பு நிறக் கோடுகளைக் காணலாம்.இவற்றிற்கு குறுக்காக வெண்மை நிறப் பகுதிகளையும் காணலாம். 
 
                      - கரும்பு மேல் அழுக்கடைந்த பழுப்பு நிறத்திட்டுகள் காணப்படும்.  சில சமயங்களில் கரும்பின் உட்பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி கரும்பழுப்பு நிற திரவம் வழியும்.  இதிலிருந்து சாராய நெடி வீசுவதிலிருந்து, இந்நோயினை உறுதி செய்து கொள்ளலாம். 
 
                    | 
                 
                
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      மஞ்சள் புள்ளிகள் | 
                        | 
                      சிவப்பு பழுப்பு புள்ளிகள் | 
                        | 
                      துரு போன்று  
                        தோற்றம் | 
                     
                    | 
                 
                
                  நோய்க்காரணி:
                    
                      - இந்நோய் குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ் எனும் பூஞ்சை மூலம் பரவுகிறது.  இதன் பழைய பெயர் கோலிடோடிரைகம் பால்கேட்டம் என்பதாகும். 
 
                      - இலைத்தாள், இலைப்பரப்பு பகுதிகளில் காணப்படும் பூஞ்சை தனியாகவோ அல்லது குழுவாகவோ வாஸ்குலார் கற்றைகளுக்கிடையே வரிகளைத் தோற்றுவித்தப்படி இருக்கும்.  இலை அடர் பழுப்பு நிறத்தில் மூழ்கியவாறு 65-250 மைக்ரான் மீ விட்ட அளவும், 8 செல்கள் அளவு தடித்த சுவரும் கொண்டிருக்கும், ஆஸ்டியோல் சற்று வெளி அமைந்தபடி வட்டவடிவமாக இருக்கும்.
 
                     
                    கட்டுப்படுத்தும் முறை: 
                    உழவியல் முறைகள்:  
                    
                      - செவ்வழுகல் நோயினைத் தவிர்க்க, நோயற்ற பகுதிகளில் ஆரோக்கியமான விதைக் கரணைகளை நடவேண்டும்.
 
                      - நோய் கண்ட வயல் வழியாக நீர்ப்பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும்.  நோய் தோன்றிய  அதே நிலத்தில் கரும்பைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து நெல் போன்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும். 
 
                      - நோய் எதிர்ப்பு சக்தியுடைய கோ 86249, கோ 85019, கோ.கு 93076, கோ.சி 95071, கோ.க 98061, கோ.க 99061 மற்றும் கோ.க 22 இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும். 
 
                      | 
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                       
                    
                      |   | 
                      பக்ஸீனியா இரியான்த்தி | 
                        | 
                       
                    | 
                 
                
                  இயற்பியல் முறைகள்:  
                    
                      - செவ்வழுகல் நோயினைத் தவிர்க்க, நோயற்ற பகுதிகளில் ஆரோக்கியமான விதைக் கரணைகளை நடவேண்டும்.
 
                      - நோய் கண்ட வயல் வழியாக நீர்ப்பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும்.  நோய் தோன்றிய  அதே நிலத்தில் கரும்பைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து நெல் போன்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும். 
 
                      - நோய் எதிர்ப்பு சக்தியுடைய கோ 86249, கோ 85019, கோ.கு 93076, கோ.சி 95071, கோ.க 98061, கோ.க 99061 மற்றும் கோ.க 22 இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும். 
 
                     
                    இயற்பியல் முறைகள்: 
                      - தூர் அகற்றிய இடத்திலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி பூசனக்கொல்லி மருந்தை (ஒரு லிட்டரில் நீரில் ஒரு கிராம்) என கலந்து ஊற்ற வேண்டும்.
 
                      - 1% போர்டியாக்ஸ் கலவை அல்லது பிற பூஞ்சானக் கொல்லி கரைசலில் விதைக் கரணை முழுவதும் நனையுமாறு நனைத்து எடுத்துப் பின் நடலாம்.
 
                      - வயலில் இந்நோய் பாதிப்பு தென்பட்டால் உடனே பாதிக்கட்ட இலைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். 
 
                     
                    வேதியியல் முறைகள்: 
                    
                      - கரணைகளை நேர்த்தி செய்து பின் நடுதல் வேண்டும்.  இதற்கு எக்டருக்கு 125 கிராம் கார்பன்டாசிம் 50 டபிள்யூ.பி அல்லது 1 கிராம் கார்பன்டாசிம் , பூசணக் கொல்லி மருந்தை 2.5 கிலோ யூரியாவுடன் சேர்த்து 250 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை ஐந்து நிமிடம் நனைத்து நடுதல் வேண்டும்.
 
                      - பெவிஸ்டின், பெனோமைல், டாப்ஸின் மற்றும் அரிட்டான் ஏதேனும் 1% பூஞ்சாணக் கொல்லி மருந்தினை 52  செ வெப்பநிலையில் 18 நிமிடங்கள் விதைக்கரணை நேர்த்தி செய்யலாம்.  இதனால் இக்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.
 
                    | 
                 
                
                  Content validators:   
                  Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.  
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.   
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115. 
  | 
                 
                | 
           
       
  |