|   “பொக்கோ போயிங்” : கரும்பு நோய்  
              
                
                  
                    
                      - 	தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு பயிரானது அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
 
- 	தற்பொழுது நிலவும் தட்பவெப்ப மற்றும் உயிரியல் காரணிகளால் கரும்பில் “பொக்கோ போயிங்” என்ற நோயின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
 
- 	பொக்கோ போயிங் என்பது ஒழுங்கற்ற வடிவம் (அ) சிதைந்த மேற்பகுதியைக் குறிக்கும் ஒரு “ஜாவானிய” சொல்லாகும்.
 
- 	பொக்கோ போயிங் நோயானது ஃபுசேரியம் வகை பூசணங்களால் உருவாகிறது.
 
- 	சாறு உறிஞ்சும் பூச்சியான “குருத்து மாவுப்பூச்சி” யின் தாக்குதல் இந்நோயினை தீவிரப்படுத்துகிறது.
 
- ஏப்ரல் – ஜூலை மாதங்களில் குருத்து மாவுப்பூச்சியின் தாக்குதல் காணப்படுவதால் “பொக்கோ போயிங்” நோய் தாக்குதலின் தீவிரமும் அதிகரிக்கிறது.
 
- 	குருத்து மாவுப்பூச்சியினைத் தொடர்ந்து எறும்புகளின் நடமாட்டமும் தென்படுகிறது.
 
- 	குருத்து மாவுப்பூச்சியிலிருந்து வெளியிடப்படும் தேன் போன்ற திரவமானது கரும்படல நோய் உருவாகக் காரணமாகிறது.
 
- 	மூன்று முதல் ஏழு மாத வயதுடைய நடவுப்பயிர்களில் இந்நோயின் தாக்குதல் தென்படும் ஆனால் மறுதாம்பு பயிரில் இந்நோய் ஒரு மாதத்திலிருந்து தென்பட ஆரம்பிக்கின்றது.
 
                    | 
                 
                 அறிகுறிகள்
                  
                  - 	வெளிரிய இளம் இலைகள் 
 
(இளம் இலைகளானது வெளிரி, சுருங்கி, திருகி வளர்ச்சி குன்றி காணப்படுதல்) 
- 	குருத்தழுகல்
 
(குருத்துப் பகுதியானது பழுப்பு நிறமாகி, அழுகி இறுதியில் அழிந்து விடுதல்) 
- 	தண்டில் கத்திவெட்டு அமைப்பு
 
தண்டில் உள்ள திசுவினை கூர்மையான கத்தியால் வெட்டியது போன்று தோற்றமளித்தல் 
- 	இடைக்கணுக்கள் சிறுத்தல்
 
கணுவிடைப்பகுதி குறுகி சிறுத்து கரும்பு பயிரானது குட்டையாக காட்சியளிக்கும் 
- 	விதைப்பரு முளைத்தல்
 
கரும்பு பயிரானது முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே விதைப்பருவானது முளைத்து விடுகின்றன  
 | 
                
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                       - Twisting of leaves.jpg)  | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      	வெளிரிய இளம் இலைகள் | 
                      	இளம் இலைகளானது சுருங்கி, திருகி வளர்ச்சி குன்றி காணப்படுதல்  | 
                      	மறுதாம்பு - இளம் இலைகளானது திருகி காணப்படுதல்  | 
                      	குருத்தழுகல்  | 
                        | 
                     
                     
                      |   | 
                        | 
                        | 
                        | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      	தண்டில் கத்திவெட்டு அமைப்பு | 
                      	இடைக்கணுக்கள் சிறுத்து மற்றும் விதைப்பரு முளைத்தல்  | 
                      குருத்து மாவுப்பூச்சி உடன் எறும்புகளின் நடமாட்டம்  | 
                      	கரும்படல நோய்  | 
                        | 
                     
                    | 
                 
                
                  | நோய்க்காரணி:
                    
                     சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை: 
                    
                    
                      - வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலை மற்றும் “மேகமூட்டத்துடன் கூடிய கோடை மழை” ஆகிய சாதகமான சூழ்நிலைகள் இந்நோய் உருவாவதற்கு மிக முக்கியமானவையாக இருக்கின்றன.
 
                      
                     
                    நோய்பரவும் விதம்:                     
                    
                    காற்றின் மூலம் பரவக்கூடிய நோய்  
                    முதல்நிலை பரவுதல்	:	காற்று  
இரண்டாம் நிலை பரவுதல்	:	பாதிக்கப்பட்ட கரணை, மழைத்துளி, மண் மற்றும் நீர்பாசனம் 
 
                    
                    நோய்க்காரணிகள் வாழும் விதம்்: 
                    
                      - இயல்பான சூழ்நிலைகளில் இந்நோய்க்காரணியானது தாவரக்கழிவுகளில் 12 மாதங்கள் வரை வாழக்கூடியது. 
 
                       
                       மேலாண்மை முறைகள்: 
                    
                      கீழ்க்காணும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி பொக்கோ போயிங் நோயினைக் கட்டுப்படுத்தலாம். 
                       
                      உழவியல் முறைகள்
  
          
            மிதமான நோய் தாங்கி வளரக்கூடிய இரகத்தினை பயன்படுத்தவும்   | 
            :  | 
            Co 86032   | 
            
             
          
            | மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இரகங்களை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்  | 
            :    | 
            CoV 09356, CoV 94101, Co 11015, Co 06022 and 87 A 298  | 
           
             
            
         
             
           
          
                      
                      
                      
                      
                    
                     
                   
                    
                     
                    இயற்பியல் முறைகள்: 
                    
                    -  பூசண மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்கு முன்பு தோகையை உரித்திருக்க வேண்டும்.
 
-  	எறும்புகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து குருத்து மாவுப்பூச்சியின் தாக்குதலை உறுதிசெய்ய வேண்டும்.
 
-  	குருத்தழுகல் மற்றும் தண்டில் கத்திவெட்டு அமைப்பு ஆகிய அறிகுறிகள் தென்படுகின்ற கரும்பு பயிர்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.
 
 
                    இரசாயன முறைகள்: 
                    
                      - 	நடவு செய்வதற்கு முன் விதைக் கரணைகளை 0.1% புரப்பிகோனோசோல் (Propiconazole) 25%EC (1மிலி/லிட்டர்) + இமிடாகுளோபிரிட் (Imidacloprid) 70ws (1மிலி / லிட்டர்) திரவத்தில் 20 நிமிடங்கள் நனைத்து கரணை நேர்த்தி செய்வதன் மூலம் முன்கூட்டியே இந்த நோய் பரவுவதைத் தவிர்க்கலாம். 
 
                      - 	ஒவ்வொரு நடவு / மறுதாம்பின் போதும் மற்றும் மண் அணைக்கும் போதும் பரிந்துரைக்கப்பட்ட பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை கரும்பு பயிர்களுக்கு அளிக்க வேண்டும்.
 
                    -  	பயிர் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கரும்புப்பயிர்களை நோய்க்காரணிகள் எளிதில் தாக்கி சேதத்தை உண்டுபண்ணுவதைத் தவிர்க்க கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக் கழகம் பரிந்துரைத்துள்ள TNAU கரும்பு பூஸ்டரை மறுதாம்பு / கரும்பு நடவு செய்த 45, 60 மற்றும் 75 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 1, 1.5 மற்றும் 2 கிலோ முறையே தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும்.
 
                    - 	நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் புரப்பிகோனாசோல் (Propiconazole) 25% EC (1மிலி / 1லிட்டர்) + இமிடாகுளோபிரிட் 17.8 SL (0.4மிலி / 1லிட்டர்) ஆகிய இரசாயன பூச்சிக்கொல்லிகளை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து இலை வழியாகத் தெளிக்கவும். மீண்டும் அறிகுறிகள் தென்பட்டால், புரப்பிகோனாசோல் (Propiconazole) 25% EC (1மிலி / லிட்டர்) + ஃபுலோனிகாமிடு (Flonicamid) 50WG (0.3கி/லிட்டர்) (அ) குளோதியானிடின் (Clothianidin) 50% WDG (0.5கி/லிட்டர்) ஆகியவற்றை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து 20 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்கவும்.
 
                      | 
                 
                
                  உள்ளடக்க சரிபார்ப்புகள்:   
                  டாக்டர்.எஸ். தங்கேஸ்வரி,  
                  உதவி பேராசிரியர் (பயிர் நோயியல்),   பயிர் நோயியல் துறை,   TANU, கோயம்புத்தூர்  
 | 
                 
              |