பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பஞ்சு அசுவினி: செரட்டோவாகுனா லேனிஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகளின் அடியில் கூட்டம் கூட்டமாக குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாற்றை உறிஞ்சி வாழும்
  • தாக்கப்பட்ட இலைகளில் வெள்ளை நிற துாள்கள் படிந்திருக்கும். இவை சோகையின் நிறத்தினை ஓரங்களில் மஞ்சளாக மாறி காய்ந்து போகும்.
  • பின்பு இலைகள் உடைந்து முழுவதுமாக காய்ந்துவிடும்
  • பூச்சிகள் இலைப் பரப்பில் தேன் போன்ற திரவத்தினை சுரக்கச் செய்வதால் கரும்பூசணப் படலம் காணப்படும். எனவே இலைகள் எரும்பினால் கவரப்பட்டு கருமையாக மாறிவிடுகின்றது.
  • வெள்ளை நிறத் துகள்கள் நிலம்/மண் மீதும் கொட்டிக் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • இளம் குஞ்சு: இளம் குஞ்சின் முன்றாம் மற்றும் நன்காம் வளர் பருவத்தில் அதன் உடல் முழுவதும் பஞ்சு போன்ற ஒரு அமைப்பு கணப்படும்.
  • அசுவினி: வளர்ந்த பூச்சியானது இறக்கைகள் இன்றி உடல் முழுவதும் பஞ்சால் முடப்பட்டிருக்கும்.
    • சேரட்டொவேகனா லேனிஜெரா: வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும்.
    • செரட்டோவேகனா கேரம்மினியம்: வெளிர் மஞ்சள் நிறத்திலும் மற்றும் முதிர்ந்த நிலையில் கருப்பு நிறத்தில் காணப்படும்.


 

 

 

கட்டுப்பாடு:

  • இயற்கை எதிரிகளான டைபா ஏபிடோவோரா, மைக்ரோமஸ், காக்ஸினெலிட்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சு அசுவினியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
  • தாக்குதலுக்கு உள்ளான சோகைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதை  தவிர்க்க வேண்டும்.
  • விதை பயன்பாட்டிற்கு, தாக்கப்பட்ட விதைக்கரணைகளைத் தவிர்க்க வேண்டும்
  • பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட சோகைகளை கால்நடைகளுக்கு தீவணமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:
    • அசிப்பேட் 75 SP @ 2 கி/லி
    • குளோரோனபரிபாஸ்  25 EC @  2 மி.லி/லி 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015