| பயிர் பாதுகாப்பு  :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                   பஞ்சு அசுவினி: செரட்டோவாகுனா லேனிஜீரா  | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - இலைகளின்      அடியில் கூட்டம் கூட்டமாக குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாற்றை உறிஞ்சி      வாழும்
 
                      - தாக்கப்பட்ட      இலைகளில் வெள்ளை நிற துாள்கள் படிந்திருக்கும். இவை சோகையின் நிறத்தினை ஓரங்களில்      மஞ்சளாக மாறி காய்ந்து போகும்.
 
                      - பின்பு      இலைகள் உடைந்து முழுவதுமாக காய்ந்துவிடும்
 
                      - பூச்சிகள்      இலைப் பரப்பில் தேன் போன்ற திரவத்தினை சுரக்கச் செய்வதால் கரும்பூசணப் படலம் காணப்படும்.      எனவே இலைகள் எரும்பினால் கவரப்பட்டு கருமையாக மாறிவிடுகின்றது.
 
                      - வெள்ளை      நிறத் துகள்கள் நிலம்/மண் மீதும் கொட்டிக் காணப்படும்
 
                     
                      பூச்சியின் விபரம்: 
                      
                        - இளம் குஞ்சு: இளம் குஞ்சின் முன்றாம் மற்றும் நன்காம் வளர் பருவத்தில் அதன் உடல் முழுவதும் பஞ்சு போன்ற ஒரு அமைப்பு கணப்படும்.
 
                        - அசுவினி: வளர்ந்த பூச்சியானது இறக்கைகள் இன்றி உடல் முழுவதும் பஞ்சால் முடப்பட்டிருக்கும்.
 
                        
                          - சேரட்டொவேகனா லேனிஜெரா: வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும்.
 
                          - செரட்டோவேகனா கேரம்மினியம்: வெளிர் மஞ்சள் நிறத்திலும் மற்றும் முதிர்ந்த நிலையில் கருப்பு நிறத்தில் காணப்படும்.
 
                         
                       
  | 
                  
                      
                     
                    
                      
                      
                     | 
                 
                
                  கட்டுப்பாடு: 
                    
                      - இயற்கை      எதிரிகளான டைபா ஏபிடோவோரா, மைக்ரோமஸ், காக்ஸினெலிட்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சு அசுவினியின் எண்ணிக்கையைக்      குறைக்கலாம்
 
                      - தாக்குதலுக்கு உள்ளான சோகைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதை  தவிர்க்க வேண்டும்.
 
                      - விதை      பயன்பாட்டிற்கு, தாக்கப்பட்ட விதைக்கரணைகளைத் தவிர்க்க வேண்டும்
 
                      - பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட சோகைகளை கால்நடைகளுக்கு தீவணமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
 
                      - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:
                        
                        
                          - அசிப்பேட் 75 SP @ 2 கி/லி
 
                          - குளோரோனபரிபாஸ்  25 EC @  2 மி.லி/லி  
 
                         
                       
                    | 
                 
            |  
         
        
  |